Untitled Document
April 2, 2025 [GMT]
இராணுவத்தினர் மீது கைவைக்க விடமாட்டோம்!
[Tuesday 2025-04-01 05:00]


இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை  பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

  

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியினர் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தடையை நீக்குமாறு வலியுறுத்தி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகையில்,

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கும், புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் பிரித்தானியா தடை விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நாட்டில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். நாட்டுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்வதற்கு இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.அதனால் தான் ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

மிலேட்சத்தனமான விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர். தமது உயிரை பயணம் வைத்த இராணுவத்தினரையே பிரித்தானியா இன்று பழிவாங்குகிறது. பிரித்தானிய இராணுவம் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் இன்று இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். தடை விதிக்கிறார்கள்.

பிரித்தானியாவின் ஒருதலைப்பட்சமான செயற்பாட்டை தேசிய இனம் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கிறோம்.இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை.எமது உயிரை பணயம் வைத்தேனும் எமது இராணுவத்தினரை பாதுகாப்போம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவின் தடை - ஆராய அமைச்சரவைக் குழு நியமனம்!
[Wednesday 2025-04-02 16:00]

இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



முன்னாள் முதல்வர் ரஞ்சித்துக்கு 16 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
[Wednesday 2025-04-02 16:00]

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.



அசல் பிறப்பு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு!
[Wednesday 2025-04-02 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செம்மணிப் புதைகுழிக்கு நிதியொதுக்கவில்லை!
[Wednesday 2025-04-02 16:00]

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகம்!
[Wednesday 2025-04-02 16:00]

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்தில் நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



செவ்வந்திக்கு விரித்த வலையில் பெண்ணுடன் சிக்கினார் இராணுவ மேஜர்!
[Wednesday 2025-04-02 16:00]

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் தற்போது தலைமறைவாகி, அனுராதபுரம் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அந்த ஹோட்டலை சுற்றிவளைத்தது.



மின்சார ஊழியர்களின் கவனக்குறைவால் மின்கம்பியில் சிக்கி ஒருவர் பலி!
[Wednesday 2025-04-02 16:00]

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்த்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



காட்டு யானை தாக்கி பெண் பலி!
[Wednesday 2025-04-02 16:00]

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் புதன்கிழமை அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார்.



மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை!
[Wednesday 2025-04-02 16:00]

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.



முட்டைக்கு வற் வரி - விலை 70 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கும் அபாயம்!
[Wednesday 2025-04-02 16:00]

முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.



பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!
[Wednesday 2025-04-02 05:00]

அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



இரண்டரை வயதில் ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை சரளமாக கூறும் யாழ்.சிறுமி!
[Wednesday 2025-04-02 05:00]

சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.



தமிழர்களை மீண்டும் ஏமாற்றவே நாகவிகாரையில் கலந்துரையாடலுக்கு அழைப்பு!
[Wednesday 2025-04-02 05:00]

தையிட்டியில் சட்டவிரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



எரிபொருள் விலையை குறைக்க முடியாது!
[Wednesday 2025-04-02 05:00]

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன இன்று தெரிவித்தார்.



பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்த நிலையில் தமிழர்கள்!
[Wednesday 2025-04-02 05:00]

“பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலை” தான் இன்று ஈழத் தமிழர்களின் நிலை. நீலமும் பச்சையும் மாறி மாறி ஏமாற்றிய காலம் போய், இன்று சிவப்பும் ஏமாற்ற புறப்பட்டிருக்கிறது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது என்று பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
[Wednesday 2025-04-02 05:00]

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.



புதிய வாகனப் பதிவுகளுக்கே டின் எண் கட்டாயம்!
[Wednesday 2025-04-02 05:00]

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது.



பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
[Wednesday 2025-04-02 05:00]

பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



பேருந்துக் கட்டணம் கணிசமாக உயரும்!
[Wednesday 2025-04-02 05:00]

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாது!
[Tuesday 2025-04-01 16:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா