Untitled Document
April 8, 2025 [GMT]
பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்!
[Monday 2025-04-07 16:00]



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

  

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். இருந்தபோதும் மோடி நாட்டுக்கு வந்தார் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் விரும்பும் விதத்தில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியாது. இந்த அரசாங்கம் நாட்டின் உரிமையாளர்கள் இல்லை. பொறுப்பாளர்கள் மாத்திரமே.

எனவே, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாட்டின் பொறுப்பாளர்களுக்கு இல்லை. எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பே முக்கியமாகும்.

பாதுகாப்பு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் என்னவென்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். பாராளுமன்றமும் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார விரும்பியது போன்று இதுபோன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது.

நாங்களும் இதுபோன்ற பாதுகாப்பு ரீதியான பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்திலும் அதற்கு அப்பாலானவொன்று இருக்க வேண்டும். நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறையாண்மையை வெளிநாடுகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் நெருக்கடியில் இருக்கும் நாடு என்ற அடிப்படையில் ஒருதலைபட்சமாக ஒரு அதிகார முகவரின் கீழ் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் ஏனைய நாடுகள் எம்முடன் விரோதமாகிவிடும். ஜெனீவா கூட்டத்தொடரில்கூட ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே எமக்கு ஆதரவாக செயற்பட்டன. இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. அவ்வாறான நாடோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் ஏனைய நாடுகள் அநீதிக்குள்ளாகும்’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



குருநாகல் எரிபொருள் நிலையத்தில் பாரிய தீவிபத்து- 4 பேர் பலி!
[Tuesday 2025-04-08 06:00]

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம்!
[Tuesday 2025-04-08 06:00]

இந்து சமுத்திரம் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய உயிர்நாடியாக காணப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.



தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!
[Tuesday 2025-04-08 06:00]

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 06ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் நாட்டை காட்டிக் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்!
[Tuesday 2025-04-08 06:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.



வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Tuesday 2025-04-08 06:00]

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.



10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு!
[Tuesday 2025-04-08 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.



தேர்தல்கள் ஆணைக்குழு மீது சீறிப் பாய்ந்த அனுர!
[Tuesday 2025-04-08 06:00]

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்தது!
[Tuesday 2025-04-08 06:00]

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது பெப்ரவரி 2025 இல் 6.095 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.



சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு நிறைவு!
[Tuesday 2025-04-08 06:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை நடைபெற்றது.



ஜயவீரவின் வெற்றிடத்துக்கு சமந்த ரணசிங்க நியமனம்!
[Tuesday 2025-04-08 06:00]

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார். அவர், கடந்த பொதுத் தேர்தலில், 41306 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர், பாடசாலை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளில் தேர்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு!
[Monday 2025-04-07 16:00]

கொழும்பு மாநகர சபைஉட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவைப் பிறப்பித்தது.



இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Monday 2025-04-07 16:00]

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.



இந்த ஆண்டு 7 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள்!
[Monday 2025-04-07 16:00]

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது. இதன்போது, 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.



மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!
[Monday 2025-04-07 16:00]

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட 'மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024' தொடர்பான அறிக்கை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.



மூன்று கன்றுகளை ஈன்ற பசு - வடமராட்சியில் அதிசயம்!
[Monday 2025-04-07 16:00]

வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசு மூன்று கன்றுகளை சனிக்கிழமை ஈன்றுள்ளது. ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது. இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது. மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாளை தேசபந்துவை நீக்கும் பிரேரணை!
[Monday 2025-04-07 16:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.



சிஐடியில் முன்னிலையானார் மைத்திரி!
[Monday 2025-04-07 16:00]

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்ததாக போலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்கே, மைத்திரிபால சிறிசேன, வந்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.



மஹிந்த வைத்தியசாலையிலா? - மறுக்கிறார் நாமல்!
[Monday 2025-04-07 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானதாக அறிவிப்பு!
[Monday 2025-04-07 16:00]

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார்.


Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா