Untitled Document
April 17, 2025 [GMT]
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள்- அரசாங்கம் விளக்கம்!
[Wednesday 2025-04-09 06:00]


இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடி எந்த விடயங்களும் உடன்படிக்கையில் இல்லை. அதேநேரம் அமைச்சரவையினதும் சட்டமா அதிபரதும் அனுமதியை பெற்றுக்கொண்டே இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். அதனால் இந்த உடன்படிக்கைகள் சட்ட பூர்வமானதாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடி எந்த விடயங்களும் உடன்படிக்கையில் இல்லை. அதேநேரம் அமைச்சரவையினதும் சட்டமா அதிபரதும் அனுமதியை பெற்றுக்கொண்டே இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். அதனால் இந்த உடன்படிக்கைகள் சட்ட பூர்வமானதாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இருநாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று கடந்த டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதியும் நானும் எமது அமைச்சர்களும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தோம். அதன்போது நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதுடன், இவ்வேளையில் இருநாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை, டிஜிட்டல் மயமாக்கல் , அரசியல் தொடர்புகள், வலுச் சக்தி, விவசாயம், முதலீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதகமான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த பயணத்தில் இலங்கையர்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பிரதானமாக நாங்கள் இந்தியாவிடம் கடந்த காலங்களில் இருதரப்பு கடனை பெற்றுள்ளோம். இது தொடர்பில் எமது பக்கத்தில் மறுசீரமைப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்தியா அரசாங்கம் அதற்கு இணங்கியது. இதன்படி இருதரப்பு கடனை மறுசீரமைக்க உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. அத்துடன் முன்னர் கடனாக பெற்றுக்கொண்டவற்றில் 100 மில்லியன் டொலரை 6 மாதங்களுக்கு மாத்திரம் நன்கொடையாக மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் வகையில், வைத்தியசாலைகள், வணக்கஸ்தளங்களுக்கு உதவித் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையை நிறைவு செய்யவும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இலவச பயிற்சிகளை வழங்குவதற்கு இணக்கப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய 33 வேலைத்திட்டங்களுக்கான 240 கோடி ரூபா நிதி உதவியை வழங்க புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்டில் நீர்வழங்கல், பெருந்தெருக்கல் தொடர்பான திட்டங்களும், தோட்டப்புற வீடமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நிதி உதவிகள் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் வருகையுடன் கிடைத்த நன்மைகளை நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதற்காக பயன்படுத்துவது எங்களின் பொறுப்பாகும்.

இந்த விஜயத்தின் போது இரண்டு அரசாங்கங்களும் 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டோம். இருநாடுகளின் அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே விரிவான பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியே அந்த உடன்படிக்கைகளை செய்துள்ளோம்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளுக்கமைய குறித்த உடன்வடிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரின் அனுமதியை பெற்றுள்ளோம். இதனால் இந்த ஆவணங்கள் எதுவும் சட்டவிரோதமானவை அல்ல. இவை அனைத்தும் இலங்கை சட்டமா அதிபரால் அனுமதி வழங்கப்பட்ட உடன்படிக்கைகளாகும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைளானது இருநாடுகளுக்கும் இடையே சட்டப்பூர்வமான இணைப்புக்கும் அப்பால் இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுக்கான விரிவான இணைப்பை ஏற்படுத்துவதற்கானது மட்டுமே ஆகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்து அந்த உடன்படிக்கைகளில் இருந்து விலக முடியும். 3 வருடங்கள், 5 வருடங்களுக்கு செல்லுபடியாகக்கூடிய உடன்படிக்கைகளும் உள்ளன.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியுடன், சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டும் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான ஒவ்வொரு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அந்த அமைச்சுகளின் அனுமதிகளுடனேயே இந்த உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. இதனை விடுத்து அமைச்சரவையில் காண்பிக்காது இதனை செய்யவில்லை.

இந்த உடன்படிக்கையில் வலுச் சக்தி தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றில் ஒன்று மன்னாரில் இருந்து இந்தியாவின் மதுரை வரையில் எமது மின் கட்டமைப்பின் கிரிட் இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பானது.

இதன்மூலம் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தன்னிரைவு பெற்ற பின்னர் மேலதிக மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும். அதேபோன்று இந்தியாவில் இருந்தும் இலங்கைக்கு மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும்.

இதன்படி ஏற்றுமதி, இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். இதனை பூர்த்தி செய்ய இன்னும் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இது கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவிப்பது மட்டுமே ஆகும். இதன்பின்னரே எவ்வாறு நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பது போன்ற தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

ஆனால் இந்தியாவில் இருந்து கட்டாயம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறான நிபந்தனைகள் எதுவும் கிடையாது. இந்தியாவினால் சுவிட்சை நிறுத்தினால் எமது நாடு இருளாகும் என்ற எதுவும் கிடையாது. எமது இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் எந்தவொரு விடயம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக இடம்பெறாது. அவ்வாறு இருந்தவற்றை திருத்தியே நாங்கள் உடன்படிக்கையை செய்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலுச்சக்தியில் எமது நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்பதனை கூறிக்கொள்கிறோம்.

அடுத்ததாக திருகோணமாலையை வலுச்சக்தியின் கேந்திரமாக மாற்றுவதற்கான உடன்படிக்கையாகும். இது இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய மூன்று நாடுகள் தொடர்புடைய உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையில் எவ்விடத்திலும் எரிபொருள், எரிவாயுவை கொண்டுவரும் முறை தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை. அது கலந்துரையாடலுக்கு விடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக பயிற்சிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற தகவல்கள் பகிர்ந்துகொள்ள இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வலயத்திற்குள் ஆட் கடத்தல்கள், போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளல் போன்றவையும் இதில் இடம்பெறும். இதனை தவிர இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பான இணக்கப்பாடுகள் கிடையாது.

எமது பூமியை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயன்படுத்த முடியாது. இதனை இந்தியாவுக்கு மட்டுமன்றி சீனாவுக்கும் கூறியுள்ளோம். இந்த உடன்படிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியும், பாதுகாப்பு தரப்பினருக்கு அனுப்பியும் தேவையான திருத்தங்களை மேற்கொண்டும் அவர்களின் அனுமதியுடனேயே இதனை செய்துள்ளோம். இதனுடாக எமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதுமில்லை.

இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நாங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையான வகையிலேயே பயன்படுத்துவோம். இதில் காட்டிக்கொடுப்புகள் எதுவும் கிடையாது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இதேவேளை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே செய்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், அவ்வாறு பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்யடிய வேறு உடன்படிக்கைகள் உள்ளன என்றும், அவை இந்த உடன்படிக்கைகள் அல்ல என்றும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தபால் வாக்குப் பதிவு திகதிகளில் மாற்றம்!
[Thursday 2025-04-17 17:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவுக்கான திருத்தப்பட்ட திகதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அத் திகதி திருத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



சூத்திரதாரிகளை வெளிப்படுத்துங்கள்!
[Thursday 2025-04-17 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது.



பிள்ளையானுக்காக வாதாடப் போகும் கம்மன்பில- பின்னணி என்ன?
[Thursday 2025-04-17 17:00]

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



உச்சத்தை தொட்ட தங்கம்!
[Thursday 2025-04-17 17:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் தினசரி தங்க விலை குறித்த நம்பகமான தகவல்களை வெளியிடும் GOLDCeylon Gold News Network,இன் தகவல்களின்படி, இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 262,000 ரூபாவாகவும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.



ஜனாதிபதியின் மிரட்டல் - செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
[Thursday 2025-04-17 17:00]

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைக்கு விரைவில் நடவடிக்கை!
[Thursday 2025-04-17 17:00]

மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



உள்ளூரில் உற்பத்தி செய்த பால், யோகட்டுக்கு வற் வரி விலக்கு!
[Thursday 2025-04-17 16:00]

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் யோகட் ஆகியவை வற் ( VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திரவ பால் மற்றும் யோகட் மீதான வற் (VAT) வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



காரைநகரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட என்பிபி வேட்பாளர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது.



மன்னாரில் 18 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!
[Thursday 2025-04-17 16:00]

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வெட்டயமுறிப்பு பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 18 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.



யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் நிதானம் தேவை!
[Thursday 2025-04-17 16:00]

தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டால் ஆடை உற்பத்தித்துறை பின்னடைவைச் சந்திக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமெரிக்காவின் புதிய வர்த்தகக்கொள்கை மற்றும் அதன்கீழான தீர்வை வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.



தபால் வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இஸ்ரேலின் முகவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!
[Thursday 2025-04-17 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



யாரைத் தெரிவு செய்யுங்கள் எனக் கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!
[Thursday 2025-04-17 06:00]

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்தால் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முறையற்றதொரு கருத்தாகும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



கிளிநொச்சி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது தமிழரசு!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர் எனவும், குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.



பெருந்தொகை கஞ்சா வாகனத்துடன் சிக்கியது!
[Thursday 2025-04-17 06:00]

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு!
[Thursday 2025-04-17 06:00]

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் உளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.



ஜனாதிபதிக்கு பாராட்டு- போலிச் செய்தி!
[Thursday 2025-04-17 06:00]

புத்தாண்டைக் கொண்டாட மறுத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைப் பாராட்டியதாகக் கூறும் சமூக ஊடகச் செய்தி போலியானது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்புக் குழு உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.



பயத்திலேயே எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்!
[Thursday 2025-04-17 06:00]

ஏனைய கட்சிகள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள், பயத்தில் இருக்கிறார்கள் ஆகவே எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.



18 வேட்பாளர்கள் உள்ளிட்ட 79 பேர் கைது!
[Thursday 2025-04-17 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா