Untitled Document
April 21, 2025 [GMT]
ஜனாதிபதியின் கருத்துக் குறித்த முறைப்பாடு- விசாரிக்க கூடும் தேர்தல் ஆணைக்குழு!
[Saturday 2025-04-19 06:00]


தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது.

  

ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

அதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[Monday 2025-04-21 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அவரது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



பள்ளமடுவில் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
[Monday 2025-04-21 06:00]

மன்னார் - பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.



நல்லாட்சி அரசில் இருந்தவர்களே இப்போது உயர்பதவிகளில்!
[Monday 2025-04-21 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்களே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்!
[Monday 2025-04-21 06:00]

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது," ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.



போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Monday 2025-04-21 06:00]

சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.



தபால் மூல வாக்களிப்பு- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
[Monday 2025-04-21 06:00]

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உடுத்துறையில் வாள்வெட்டு- ஒருவர் காயம்!
[Monday 2025-04-21 06:00]

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



திருவிழாவில் சங்கிலி அறுப்பு- பெண் வேடமிட்ட ஆண் உள்ளிட்ட 4 பேர் கைது!
[Monday 2025-04-21 06:00]

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் புதிய நுளம்பு இனம்!
[Monday 2025-04-21 06:00]

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



வேண்டுமென்றே அழிக்கப்பட்ட போக்குவரத்துச் சபை!
[Monday 2025-04-21 06:00]

இலங்கை போக்குவரத்து சபை வீழ்ச்சியடையவில்லை, அது வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு!
[Sunday 2025-04-20 15:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது



ஆசாத் மௌலானாவை விசாரணை செய்யவேண்டும்!
[Sunday 2025-04-20 15:00]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மக்களை பாதிக்கும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொள்ள கூடாது!
[Sunday 2025-04-20 15:00]

எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால்,அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Sunday 2025-04-20 15:00]

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.இருப்பினும், பல சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனக் கப்பல்களின் வருகையை தடுக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம்!
[Sunday 2025-04-20 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சீனா மாத்திரம் அன்றி பல நாடுகளும் கூடுதல் அவதானம் செலுத்தி இருந்தன. இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீன ஆய்வுக் கப்பல்கள் தொடர்பான சிறப்பு சரத்து ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து நிலைமை சூடுபிடித்துள்ளது.



வரணியில் குளத்தில் மூழ்கிய இளைஞனின் மரணத்தில் சந்தேகம்!
[Sunday 2025-04-20 15:00]

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.



நாளை மறுநான் வொஷிங்டன் செல்கிறது இலங்கை குழு!
[Sunday 2025-04-20 15:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனல் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுநாள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது வரிகளைக் குறைத்தல் மற்றும் இறக்குமதியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளது.



வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!
[Sunday 2025-04-20 15:00]

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வல்வெட்டித்துறை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.



திருடச் சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி மரணம்!
[Sunday 2025-04-20 15:00]

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் திருடச் சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.



நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடக்க முனைகிறது அனுர அரசு!
[Sunday 2025-04-20 15:00]

நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடக்குமுறை செய்ய அனுர தலைமையிலான தேசிய மக்கள் முனைகின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட முறைமைகள் தொடர்பில் கூட தெரியாதவர்களாக இன்றைய அரசு இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா