Untitled Document
April 27, 2025 [GMT]
ஐஎம்எவ் 5 ஆவது கட்ட கடன் வசதிக்கு இணக்கம்!
[Saturday 2025-04-26 17:00]


சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.

  

தமது அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு விடயங்களை ஆராய்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.

பொருளாதார இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. அத்துடன், கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளமையினால் 5ஆம் தவணையை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



என்பிபியின் வன்னி எம்.பி ஊழல் பேர்வழி! - நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி?
[Sunday 2025-04-27 17:00]

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. இவை தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூறுவாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.



9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி!
[Sunday 2025-04-27 17:00]

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.



2026 இல் கல்வி முறையில் மாற்றம்!
[Sunday 2025-04-27 17:00]

குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது புகழ் அல்லது வாக்குகளுக்கான திட்டம் அல்ல, மாறாக நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான நடவடிக்கை என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



வடக்கில் தேசியக் கட்சியில் 7 எம்.பிக்கள் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம்!
[Sunday 2025-04-27 17:00]

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பூந்தோட்டத்தில் பிரச்சார கூட்டம் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பாதாள உலக நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை!
[Sunday 2025-04-27 17:00]

உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், புதிய, விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.



கிளிநொச்சியில் ஒரு மணிநேரம் கொட்டிய மழை- வீடுகளுக்குள் வெள்ளம்! Top News
[Sunday 2025-04-27 17:00]

கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின்போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.



டிசம்பரில் மின்கட்டணம் மும்மடங்கு உயரும்!
[Sunday 2025-04-27 17:00]

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.



14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- 3 பேர் கைது!
[Sunday 2025-04-27 17:00]

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் யாழ்ப்பாண அலுவலுகத்தின் நடவடிக்கையின் மூலமே வெளிகொணரப்பட்டுள்ளது.



புதிய வாகனத்துடன் கதிர்காமம் சென்றவர் மாணிக்க கங்கையில் மூழ்கி மரணம்!
[Sunday 2025-04-27 17:00]

புத்தள, வேரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் முன்அறிவித்தலின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.



வயலுக்குள் இறங்கியவர் சடலமாக மீட்பு!
[Sunday 2025-04-27 17:00]

மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த இரட்டையர்!
[Sunday 2025-04-27 06:00]

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.



ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிகளை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்!
[Sunday 2025-04-27 06:00]

வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனவே ஆட்சி கவிழ்ப்பிற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.



அணிசேராக் கொள்கையில் இருந்து விலகுவது ஆபத்து!
[Sunday 2025-04-27 06:00]

அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா - பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.



பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்!
[Sunday 2025-04-27 06:00]

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.



இந்தியாவை நம்பியிருப்பது ஆபத்து!
[Sunday 2025-04-27 06:00]

வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையில் இந்தியாவை நம்பியிருப்பது தேசிய பாதுகாப்புக்கு என்றாவதொரு நாள் அச்சுறுத்தலாக அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.
[Saturday 2025-04-26 17:00]

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கை வருகிறது!
[Saturday 2025-04-26 17:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.



யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு நாள்! Top News
[Saturday 2025-04-26 17:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு தினமும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதனையடுத்து, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



இன்று வெளியாகிறது உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்!
[Saturday 2025-04-26 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களும் ஆவர்.



மீண்டும் வருகிறார் பசில்!
[Saturday 2025-04-26 17:00]

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா