Untitled Document
May 17, 2026 [GMT]
போர் மஹிந்தவை தேசிய வீரராக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது!
[Sunday 2026-05-17 05:00]


யுத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. என சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளரும், முற்போக்கு சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. என சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளரும், முற்போக்கு சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

  

முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்துவிட்டதா என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கருத்தரங்கு கொழும்பில் செடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்து வந்த ஒவ்வொரு மே 18 ஆம் திகதியையும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெவ்வேறு விதமாகவே நினைவுகூருகின்றனர். சிங்கள மக்கள் இந்நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வேளையில், எமது சகோதர தமிழ் மக்கள் பெரும் சோகத்துடன் நினைவுகூரும் ஒரு நாளாகவே இந்நாள் மாறியுள்ளது.

முப்பது வருட கால யுத்தத்தின் இறுதிப் பகுதியை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒரு மனிதாபிமான யுத்தம் என்றே எமக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால், அந்த யுத்தத்தின் பின்னர் வெள்ளைக்கொடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக, இந்த யுத்தத்தின் கொடூரம் குறித்து உலகம் முழுவதும் பெரும் பேச்சுவார்த்தை உருவானது.

இந்த யுத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்ட வடக்கின் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த வடக்கின் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இன்றளவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த யுத்தத்தினால் வட பகுதி மக்களுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில், எம்மால் ஒரு யுத்த வெற்றியை கொண்டாட முடியாது. ஆனால், கடந்த காலம் முழுவதும் நாட்டின் ஆட்சியாளர்கள் மே 18 யுத்த நினைவேந்தலை வடக்கிற்கு எதிராக தெற்கு மக்களின் மனங்களில் இனவாதத்தை தூண்டும் நோக்கத்திற்காகவே பயன்படுத்தினர் என்பதை நாம் கண்டோம்.

வரலாறு முழுவதும் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு யுத்தமே காரணம் என்றே ஆட்சியாளர்கள் காண்பித்தனர். ஆனால், யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்து செல்லும் போதே நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. எனவே, அனைத்து நெருக்கடிகளுக்கும் யுத்தமே காரணம் என்று கூறிய ஆட்சியாளர்களின் கூற்றுகள் இன்று பொய்யாகிப் போயுள்ளன.

அடுத்த விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின் ஆயுதமேந்திய எழுச்சி என்பது தானாக உருவானதொன்றல்ல. யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை, 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட பாரிய அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு வடக்கு மக்கள் ஆளாக்கப்பட்ட ஒரு வரலாறே எமக்கு இருந்தது.

அந்த ஒடுக்குமுறையுடன்தான் முப்பது வருடங்களாக எமது நாட்டை பாரியளவில் காயப்படுத்திய யுத்தம் ஒன்று ஆரம்பித்தது. இப்போது அந்த யுத்தம் முடிவடைந்து இரண்டு தசாப்தங்கள் நெருங்கவுள்ளன. ஆனாலும், அந்த யுத்தம் ஏற்படுவதற்கு காரணமான சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வட பகுதி மக்களிடமிருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் இராணுவ முகாம்களே உள்ளன. இன்றளவும் அந்த நிலங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. முழு வடக்கும் இன்றளவும் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போன்றே காணப்படுகின்றது. எங்கும் இராணுவ சோதனைச் சாவடிகள் காணப்படுகின்றன.

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெருமளவிலான இளைஞர்கள் இன்றளவும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களுக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை. வடக்கில் வாழும் ஒரு கலைஞர் இன்றளவும் தனக்கு தோன்றும் விடயங்களை ஒரு கவிதையிலாவது சுதந்திரமாக எழுதுவதற்கான சுதந்திரம் இல்லை. கடந்த நாட்களில் தீபச்செல்வனின் சம்பவத்தின் மூலம் எமக்கு புலப்பட்டதும் அதுவேயாகும்.

இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண கடந்த காலத்தில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாட்சியமளித்தனர். ஆனால், அவற்றில் ஒன்றேனும் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் மக்கள் ஒரு மாற்றாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்றினர். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே வட பகுதி மக்கள் தெற்கின் அரசியல் கட்சி ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கினர். தம்மை ஒடுக்கும் தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அநுர திசாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசாங்கமும் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வட பகுதி மக்களின் பிரச்சினையை பயன்படுத்துவதையே நாம் காண்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ச்சியாக போராடிய திசைகாட்டி அரசாங்கம், இன்று அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறை சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தயாராகின்றது.

கவிஞர் தீபச்செல்வனின் இலக்கியப் படைப்புகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி சுங்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து பேசும்போது, இவ்வாறான விடயங்களை பேச வேண்டாம், காயங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. நாம் கேட்பது, மேலும் புதிதாக காயப்படுவதற்கு என்ன காயம் மீதமுள்ளது? அரசியல் மேடைகளில் இவர்கள் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுகின்றனர். ஆனால், 15 வருடங்களாக மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அன்று மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபை தேர்தல் அலையை கொண்டு சென்றது சட்டி சூடாக இருக்கும்போது ரொட்டியை சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். ஆனால், இப்போது சட்டி சூடாக இல்லை, சட்டி முற்றிலும் குழம்பிப் போயுள்ளது.

இப்போது யுத்தம் பௌதிக ரீதியாக முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. இன்னமும் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பேணி வருகின்ற இனவாத காயங்கள் இப்பொழுதாவது முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டின் சிங்கள மக்களுக்கு போன்றே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்கும் அரசியல் உரிமைகள் சமமாக கிடைக்க வேண்டும் என நாம் கருதுகின்றோம். அந்த அதிகாரத்தை அவர்கள் நடைமுறை ரீதியாக பரீட்சித்துப் பார்ப்பதற்கு சுயநிர்ணய பகுதிகளைக் கொண்ட அதிகாரப் பகிர்வு கிடைத்தால் மாத்திரமே சாத்தியமாகும். அடுத்ததாக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தேசிய இனப் பிரச்சினைகள் மற்றும் மதப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யக்கூடிய இருமண்டல பாராளுமன்ற முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இந்த இருமண்டல சபைக்குள் இந்நாட்டின் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இப்போது 200 வருடங்களாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் மலையக தமிழ் மக்களை இன்னும் இந்நாட்டில் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதில்லை.

தொண்டமான்கள் காலம் தொட்டு தோட்டப்பகுதியின் அரசியல் தலைவர்கள் செய்தது அந்த மக்களின் பிரச்சினையை தங்களது அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தியது மாத்திரமேயாகும். அன்றிலிருந்து தோட்ட நிறுவனங்கள் தங்களது லாப வீதத்தை அதிகரித்துக் கொள்ள இம்மக்களின் இரத்தத்தையும் வியர்வையையும் சுரண்டித் தின்றன.

எனவே, இப்பொழுதாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மலையக தமிழ் மக்களை இந்நாட்டின் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால் மாத்திரமே அந்த தீர்வு கிட்டும். அத்துடன் காணி மற்றும் வீடமைப்பு உரிமை போன்றே கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமைகளும் அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும். இவைகளையே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுகளாக முன்வைப்பதற்கு நாம் பிரேரிக்கின்றோம்.

முன்பு தொலைக்காட்சியில் அசோக ஹந்தகமவின் சிந்தடிக் சிஹின (செயற்கை கனவுகள்) என்ற நாடகம் ஒளிபரப்பானது. அந்த நாடகத்தின் ஒரு இடத்தில், நாம் ஒரு வட்டத்தில் பயணிக்கும்போது வரலாற்றில் அநுபவித்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது. நாம் எமது நாட்டு அரசியலுக்குள் இந்த கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் அநுபவித்திருக்கின்றோம்.

வட பகுதி மக்களின் கண்ணீர், தோட்டப்பகுதி தொழிலாளர்களின் வியர்வை மற்றும் இரத்தத்தின் வாசனை, முஸ்லிம் மக்களின் ஒடுக்குமுறை என்பனவற்றை நாம் மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, இந்த சுழற்சியை நாம் இப்பொழுதாவது உடைத்தெறிய வேண்டும்.

மீண்டும் மீண்டும் வரலாறு எமக்கு முகம் கொடுக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான முறையை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு தற்போதைய தலைமுறையினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை எம்மால் தனித்து செய்ய முடியாது. இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் ஒன்றிணைந்த ஒரு பரந்த மக்கள் சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய மக்கள் சக்தியின் மூலமே இந்நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் மக்கள் துரோக வேலைத்திட்டங்களை எம்மால் பின்னோக்கி நகர்த்த முடியும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



நாளை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!
[Sunday 2026-05-17 17:00]

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.



27ஆம் திகதி ஐஎம்எவ்இன் அடுத்த மீளாய்வு!
[Sunday 2026-05-17 17:00]

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை குறித்துள்ளது.



சுவிசில் இருந்து விடுமுறையில் வந்தவர் முகமூடி கொள்ளையர்களால் கொலை!- யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Sunday 2026-05-17 17:00]

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்!
[Sunday 2026-05-17 17:00]

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்துப் பல தசாப்தங்களாக ஆழமானதும் காத்திரமானதுமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி வந்தார்.



விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி மரணம்!
[Sunday 2026-05-17 17:00]

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.



தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
[Sunday 2026-05-17 17:00]

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.



பாதுகாப்பு தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
[Sunday 2026-05-17 17:00]

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், கடந்த மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



மட்டக்களப்பு வாவியில் வலையில் சிக்கிய சடலம்!
[Sunday 2026-05-17 17:00]

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.



மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விபத்தில் பலி!
[Sunday 2026-05-17 17:00]

பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.



என்பிபி எம்.பியின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!
[Sunday 2026-05-17 17:00]

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



யாழ். பல்கலைக்கழகத்தில் "நினைவாயுதம்"! Top News
[Sunday 2026-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், "நினைவாயுதம்" எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி சனிக்கிழமை (16) ஆரம்பமானது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. தமிழினப் படுகொலை தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி திங்கட்கிழமை (18) வரை நடைபெறுகிறது.



வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! Top News
[Sunday 2026-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது. இந்நிகழ்வை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு நடத்தியிருந்தது.



மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்!
[Sunday 2026-05-17 05:00]

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



கறுப்பை வெள்ளையாக்கியது அம்பலம்!
[Sunday 2026-05-17 05:00]

'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் இருந்து முழுமையாக வெள்ளையாக்கும் நடவடிக்கைகளை இவரே முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.



கூட்டு எதிர்க்கட்சியின் கலந்துரையாடல்!
[Sunday 2026-05-17 05:00]

கூட்டு எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பு, மலர் வீதி பகுதியில் நடைபெற்றது.



ஆணிகளை பிடுங்கியவர் கைது!
[Sunday 2026-05-17 05:00]

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்களைப் பொலிஸாரால் மீட்க முடிந்துள்ளது.



அனர்த்தங்களால் 5000 பேர் பாதிப்பு!
[Sunday 2026-05-17 05:00]

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் பரவலாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்!
[Sunday 2026-05-17 05:00]

"தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளான நேற்று யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும், கஞ்சி வழங்கலும் இடம்பெற்றுள்ளன.



மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Sunday 2026-05-17 05:00]

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறந்து வைப்பு! Top News
[Saturday 2026-05-16 16:00]

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று திறக்கப்பட்டது.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா