Untitled Document
March 30, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!
[Sunday 2025-03-30 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்- பிரித்தானிய தடைக்கு வரவேற்பு!
[Sunday 2025-03-30 17:00]

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதோடு சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.



திருச்சி- யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது விமான சேவை!
[Sunday 2025-03-30 17:00]

திருச்சி மற்றும் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.



பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு செல்கிறார் பிரதமர் ஹரிணி!
[Sunday 2025-03-30 17:00]

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்து செல்வார்கள் என சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



தையிட்டியில் சட்டவிரோத கட்டடம்- அறிக்கை கோரியிருக்கிறார் சுனில் செனவி!
[Sunday 2025-03-30 17:00]

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை வளாகத்தில் புதிதாக நிர்ணமாகிக்கப்பட்டுள்ள கட்டடம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு புத்தசாசன திணைக்கள மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.



ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞன் தீவிரவாதியாம்!
[Sunday 2025-03-30 17:00]

கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்று இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேசபந்துவை நீக்கும் பிரேரணை அரசியலமைப்புக்கு விரோதமானது!
[Sunday 2025-03-30 17:00]

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.



எருமை மாடு மீது மோதியவர் மரணம்!
[Sunday 2025-03-30 17:00]

எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நெட்டாங்கண்டல் மூன்றுமுறிப்பு பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஸ்வரன் (வயது -52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மோடியைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை!
[Sunday 2025-03-30 17:00]

அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



கடையில் இருந்து வீடு திரும்பிய பெண் மயங்கி விழுந்து சாவு!
[Sunday 2025-03-30 17:00]

வீதியால் நடந்து சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த சிறிக்காந்தன் வசந்தா (வயது-68) என்பவராவார்.



தையிட்டி காணி உரிமையாளர்களை வழக்கிற்கு இழுக்க முயற்சிப்பது ஏன்?
[Sunday 2025-03-30 05:00]

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.



முல்லைத்தீவில் இந்திய உதவியுட்ன் பண்பாட்டு நடுவம்!
[Sunday 2025-03-30 05:00]

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய துணைத்தூதுவருக்கு முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



தொற்றா நோய் மரணங்கள் அதிகரிப்பு!
[Sunday 2025-03-30 05:00]

நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்!
[Sunday 2025-03-30 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.



விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் விரைவில் சட்ட நடவடிக்கை!
[Sunday 2025-03-30 05:00]

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.



பயப்படுபவர்கள் தான் கூச்சலிடுகிறார்கள்!
[Sunday 2025-03-30 05:00]

அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.



நாட்டை ஆளுவதற்கான தொலைநோக்குப் பார்வை அரசாங்கத்திடம் இல்லை!
[Sunday 2025-03-30 05:00]

வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த தேசிய மக்கள் சக்திக்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன!
[Sunday 2025-03-30 05:00]

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 175 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, ஏனைய கட்சிகளுடனும் இணைந்து சபைகளை நிறுவும்என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.



மாணவியை தண்டித்த ஆசிரியருக்கு பிணை!
[Sunday 2025-03-30 05:00]

ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செயப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு பிணை!
[Sunday 2025-03-30 05:00]

கட்டாய விடுப்பில் இருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு விடுவிக்க கடுவெல பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி, உத்தரவிட்டார்.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா