Untitled Document
April 9, 2025 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



பிள்ளையான் கைது!
[Wednesday 2025-04-09 06:00]

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்தியாவுடனான ஒப்பந்தங்கள்- அரசாங்கம் விளக்கம்!
[Wednesday 2025-04-09 06:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடி எந்த விடயங்களும் உடன்படிக்கையில் இல்லை. அதேநேரம் அமைச்சரவையினதும் சட்டமா அதிபரதும் அனுமதியை பெற்றுக்கொண்டே இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். அதனால் இந்த உடன்படிக்கைகள் சட்ட பூர்வமானதாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்படவில்லை!
[Wednesday 2025-04-09 06:00]

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இலங்கையின் இறையாண்மை காட்டிக் கொடுக்கப்படவில்லை. முந்தைய அரசாங்களைப் போன்று எமது அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட பின்னரே அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



மல்லாவியில் இருந்து குருணாகலுக்கு மாடுகளை கடத்தியவர்கள் கைது!
[Wednesday 2025-04-09 06:00]

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.



முட்டை, கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு!
[Wednesday 2025-04-09 06:00]

பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு முட்டை தற்போது ரூ.39 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி ரூ.1,100 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். பேலியகொட மீன் சந்தையின்படி, மீன் விலையும் அதிகரித்துள்ளது.



அர்ஜூன மகேந்திரனை கொண்டு வருவதற்காக மைத்திரிக்கு பணம் கொடுத்தார் ரணில்!
[Wednesday 2025-04-09 06:00]

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியமைக்க வைப்பதற்கான முயற்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியுதவி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றஞ்சாட்டினார்.



யாரையும் பாதுகாக்க முற்படவில்லை!
[Wednesday 2025-04-09 06:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது அதைத் தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று மறுத்தார்.



304 கிலோ கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!
[Wednesday 2025-04-09 06:00]

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்றுக்காலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பில் 304 கிலோ கேரளா கஞ்சா 8 உரப்பை பொதிகளில் கடலில் இருந்து ஈரமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.



மோடியைச் சந்தித்தார் நாமல்!
[Wednesday 2025-04-09 06:00]

டில்லியில் நடைபெற்ற 2025 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிராந்திய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர்.



குற்றச் செயல்களின் சட்டக்கோவை நிறைவேறியது!
[Wednesday 2025-04-09 06:00]

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, குற்றச் செயல்களின் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.



தேசபந்துவை நீக்கும் விசாரணைக் குழுவை நியமிக்க 151 எம்.பிக்கள் ஆதரவு!
[Tuesday 2025-04-08 17:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு குழுவை நியமிக்கும் தீர்மானம் 151 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபைக்கு அறிவித்தார்.



பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?
[Tuesday 2025-04-08 17:00]

ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை எடுத்துரைத்தார்.



பயங்கரவாத தடைச்சட்டத்தை விட வேறு சட்டம் இல்லை!
[Tuesday 2025-04-08 17:00]

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



எந்த நாடு முதலீடு செய்கிறது என்பதை விட எது பயனுள்ளது என்பதே முக்கியம்!
[Tuesday 2025-04-08 17:00]

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த முதலீட்டினால் இலங்கை மக்கள் பெரிதும் பயனடைவர்' என்ற கோணத்திலேயே அணுகவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.



ட்ரம்புக்கு கடிதம் அனுப்பினார் அனுரகுமார!
[Tuesday 2025-04-08 17:00]

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.



சீதுவவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Tuesday 2025-04-08 17:00]

சீதுவை பொலிஸ் பிரிவில், கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் லியகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான நபர் உயிரிழந்தார்.



பிணை கிடைத்தும் வெளிவர முடியாத சாமர சம்பத்!
[Tuesday 2025-04-08 17:00]

1.73 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இன்று உத்தரவிட்டார்.



வங்கியின் தரவுக்கட்டமைப்பில் திருட்டு- ஊடகங்களை முடக்க உத்தரவு!
[Tuesday 2025-04-08 17:00]

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.



புத்தாண்டுக்குப் பின்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Tuesday 2025-04-08 16:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது. மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆவர்.



வியாழேந்திரன் பிணை கிடைத்தும் சிறைக்குச் சென்றார்!
[Tuesday 2025-04-08 16:00]

மார்ச் 25ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா