Untitled Document
April 2, 2025 [GMT]
பிரதமர் ஸ்டார்மரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

புதிய அமெரிக்க வரிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு விலக்கு வேண்டும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். புதிய ஏற்றுமதி வரிகளை மாற்றும் புதிய வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்திருந்தார்.

புதிய அமெரிக்க வரிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு விலக்கு வேண்டும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். புதிய ஏற்றுமதி வரிகளை மாற்றும் புதிய வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்திருந்தார்.

  

ஆனால், அமெரிக்க வரி விதிப்பு உறுதி என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திட்டமிடப்பட்ட பொருளாதார ஒப்பந்தத்தின் விவரங்களை ஆராய்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்ததைத் தவிர, இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த தீர்வையும் எட்டவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.

மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பிரதமர் ஸ்டார்மர் கெஞ்சியதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் வெளியான தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றே பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

விலக்கு வேண்டும் என பிரதமர் ஸ்டார்மர் நேரிடையாக கோரவில்லை என்றே தெரிவித்துள்ளனர். பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டங்களின் விவரங்களைப் பார்ப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகளில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் 25 சதவீதம் இறக்குமதி வரி அறிமுகப்படுத்தப்படும் என்று ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது, ஆஸ்டன் மார்டின்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர்ஸ் போன்ற பிரித்தானியாவின் உயர் ரக கார் உற்பத்திக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் தயாரிக்கபப்டும் கார்களில் கிட்டத்தட்ட 17 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 8 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான 100,000 க்கும் மேற்பட்ட கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான தகவல்: சிக்கி தவிக்கபோகும் பல நாடுகள்!
[Wednesday 2025-04-02 18:00]

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2ம் திகதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



"ஆக்கிரமிக்கும் ஏ ஐ வளர்ச்சி, மனிதர்களுக்கு இரு நாட்கள் மட்டுமே வேலை" - பில் கேட்ஸ் கணிப்பு!
[Wednesday 2025-04-02 18:00]

செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) தொழில்நுட்பத்தின் மெகா வளர்ச்சி காணமாக வாரத்திற்கு இரு வேலை நாட்கள் என்கிற நடைமுறை 10 ஆண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கணித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக வேலைநாட்களும் குறையும் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.



எலான் மஸ்க்கையே கழுவி ஊற்றிய Grok AI!
[Wednesday 2025-04-02 18:00]

எக்ஸ் தளத்தில் செயல்பட்டு வரும் Grok AI தனது எஜமானர் எலான் மஸ்க்கையே கழுவி ஊற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பலவற்றை நிர்வகித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய அவர் அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். தற்போது எக்ஸில் Grok என்ற ஏஐ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



ரஷியாவில் பரவி வரும் மர்ம வைரஸால் மக்கள் பீதி!
[Wednesday 2025-04-02 18:00]

ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர். இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.



தேம்ஸ் நதிக்கரையில் காணாமல் போன 11 வயது சிறுமி!
[Wednesday 2025-04-02 06:00]

பிரித்தானியாவின் நதிக்கரையில் காணாமல் போன 11 வயது சிறுமிக்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. கிழக்கு லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் திங்கட்கிழமை மதியம் 11 வயது சிறுமி காலியா கோவா(Kaliyah Coa) காணாமல் போனார். அவர் பள்ளி விடுமுறை நாளில் காலியா நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் இறங்கியதாக கூறப்படுகிறது.



2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி!
[Wednesday 2025-04-02 06:00]

தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.



தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்!
[Wednesday 2025-04-02 06:00]

தைவான் எல்லைப் பகுதியில் சீனா இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் இது தைவான் ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீனா கூறியுள்ளது.



அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனேடிய மக்கள்!
[Tuesday 2025-04-01 19:00]

டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பானங்கள் காலியாகி வரும் அதேவேளை அமெரிக்க மதுபான வகைகள் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது.



குத்துச்சண்டை போட்டியில் திடீரென உயிரிழந்த வீரர்!
[Tuesday 2025-04-01 19:00]

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.



சுவிஸில் திருட முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
[Tuesday 2025-04-01 19:00]

சுவிட்சர்லாந்தின் வோ மாகாணத்திலுள்ள வேவே நகரத்தில் கடை ஒன்றில் திருட முயன்ற 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்தக் கடை பூட்டியிருந்த நிலையில், சிறுவன் உள்ளே நுழைய முயன்றபோது sliding door கதவில் அவனது தலை சிக்கிக்கொண்டது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிசார் அவனை கண்டுபிடித்தனர்.



நாளை முதல் கனடாவில் இந்த பொருட்கள் விலை உயரும்!
[Tuesday 2025-04-01 19:00]

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெறும் மிரட்டலாக இல்லாமல், நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, ட்ரம்பின் வரி விதிப்பால், உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம்.



இந்த குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்: ஜெலென்ஸ்கி!
[Tuesday 2025-04-01 06:00]

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட 183,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். தீமை பெருகுவதைத் தடுக்க நீதி தேவைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கில் உள்ள புச்சாவில் நடந்த ஐரோப்பிய அதிகாரிகளின் உச்சி மாநாட்டிலேயே ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களை தெரிவித்தார்.



ஐரோப்பா முழுவதும் தீயாக பரவும் டெஸ்லா எதிர்ப்பலை: மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

இத்தாலியில் உள்ள எலோன் மஸ்க்கின் முதன்மையான டீலர்ஷிப்களில் ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. ரோமில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கிய சம்பவத்தை அடுத்து, இதுவரை அமெரிக்காவில் மட்டுமே டெஸ்லா டீலர்ஷிப்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் தற்போது ஐரோப்பாவிலும் பரவியுள்ளது. ரோமில் மொத்தமாக 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ரோமின் தீயணைப்பு சேவை தெரிவிக்கையில், சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.



கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
[Monday 2025-03-31 18:00]

கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும். தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
[Monday 2025-03-31 18:00]

அணு ஆயுத பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு, ஈரான் பகிரங்கமாக பதில் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடான ஈரான் ரகசிய அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.



இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்!
[Monday 2025-03-31 18:00]

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.



ஒன்டாரியோவில் கடும் பனிமழை: ஆயிரக் கணக்கான வீடுகளுக்கு மின் தடை!
[Monday 2025-03-31 18:00]

ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒருபக்கம் நிலநடுக்கம், மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்!
[Monday 2025-03-31 06:00]

மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மியான்மரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.



ஐரோப்பிய நாடொன்றிற்கு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
[Monday 2025-03-31 06:00]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்கிறார். தனது பயணத்தின் போது, ​​ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் பிற மூத்த ஹங்கேரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்: கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்!
[Monday 2025-03-31 06:00]

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா