Untitled Document
May 21, 2024 [GMT]
வெள்ள நிவாரணம்,மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை: - முதல்வர் ஜெயலலிதா
[Wednesday 2016-01-06 08:00]

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர்.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
 தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில்,

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், "வெள்ள நிவாரண-சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.25,912 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

  

இதையடுத்து, உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட வருகை தந்துள்ளனர். இந்தக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது முதல்வர் பேசியது: ""பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழை ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நவம்பர் மாத இறுதியில் மத்தியக் குழுவினர் வந்தனர். இதையடுத்து, டிசம்பர் முதல் வாரத்தில் வரலாறு காணாத கன மழை பெய்தது. அதில், சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போர்க்கால அடிப்படையில்...: உடனடியாக மீட்பு-நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மிகப்பெரிய அளவில் சொத்துகளுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது. டிசம்பரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு துணை அறிக்கையை தயார் செய்து அளிக்கும் என்று சென்னைக்கு டிசம்பர் 3-இல் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 22-ஆம் தேதியன்று துணை அறிக்கையும் அளிக்கப்பட்டது.

ரூ.25,912 கோடி தேவை: வெள்ளப் பாதிப்புகளை, தாற்காலிக, நிரந்தர அடிப்படையில் மீட்பு-சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.17 ஆயிரத்து 431 கோடியே 51 லட்சம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. முதலில் அளிக்கப்பட்ட அறிக்கையில் மீட்பு-நிவாரணப் பணிக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனக் கோரப்பட்டிருந்தது. எனவே நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் ரூ.25,912 கோடி தேவை. பிரதமருக்கு நன்றி: மழை-வெள்ள பாதிப்பை "கடுமையான இயற்கை பாதிப்பு' என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கும், மீண்டும் மத்தியக் குழுவை அனுப்பி வைத்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி. கூடுதல் நிதி தேவை: மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் நிதி ஆதாரங்களைத் தாண்டி, கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே, இதற்கான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் விரைந்து அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



வெறும் கையால் மனிதக்கழிவை அகற்றும் பணியாளர்: சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி!
[Tuesday 2024-05-21 18:00]

மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த பணியாளர் வெறும் கைகளாலே சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில்வைரலாகி வருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.



தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-21 18:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.



“தமிழர்கள் மீது மோடிக்கு வெறுப்பு ஏன்?” - முதல்வர் ஸ்டாலின்!
[Tuesday 2024-05-21 18:00]

ஒடிசாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேற்று (20.05.2024) கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகந்நாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.



இர்ஃபான் மீது பாய்ந்தது தமிழக அரசின் நடவடிக்கை!
[Tuesday 2024-05-21 18:00]

யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தமிழக மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணம் செய்து கொண்டு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.



ராகுல் காந்தியால் ஆக முடியுமா? - அமித்ஷா விமர்சனம்!
[Tuesday 2024-05-21 06:00]

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது.



‘7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 06:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.



“சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதில்லை” - பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-21 06:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!
[Monday 2024-05-20 18:00]

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையர்கள் எனவும் அவர்கள் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



மக்களுக்கு உதவுவதற்காக 'த.வெ.க’ தலைவர் விஜய் எடுத்த அடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் மக்களுக்காக புதிய விடயம் ஒன்றை செய்யவுள்ளார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.



வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9900 கோடி: குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சோதித்து பார்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



சீமானின் வீடியோவை வெளியிடப்போவதாக பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி!
[Monday 2024-05-20 18:00]

நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்டம் போட்ட அனைத்து வீடியோக்களையும் வெளியிடப்போவதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.



தங்கையை அழைத்துவரச் சொன்ன நண்பன்: படுகொலை செய்த அண்ணன்!
[Monday 2024-05-20 06:00]

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ரஞ்சித் குமார். இவருக்குச் சரவணன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சித் சரவணன் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது ரஞ்சித் குமாரிடம் சரவணன் உனது தங்கையை அழைத்துவா என்று தவறான நோக்கத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.



கட்டுக்கடங்காத கூட்டம்: பாதியில் திரும்பிச் சென்ற ராகுல் - அகிலேஷ்!
[Monday 2024-05-20 06:00]

நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு: சென்னையில் பரபரப்பு!
[Monday 2024-05-20 06:00]

சென்னையில் பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் படுத்து உறங்கிகொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இரவும் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது சுமார் 9 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார். பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.



பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!
[Sunday 2024-05-19 19:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



பட்டாக்கத்தியுடன் குத்தாட்டம்: காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்!
[Sunday 2024-05-19 19:00]

திருவண்ணாமலை நகரம் சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், வேங்கிகால் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறைக்கு போய்வந்தும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.



‘தென்மேற்கு பருவமழை தொடங்கியது’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
[Sunday 2024-05-19 19:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.



‘2 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுந்தகவல்’ - தமிழக அரசு!
[Sunday 2024-05-19 19:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (20.05.2024) மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-05-19 08:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.



அயலக தமிழர்கள் கவனத்திற்கு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
[Sunday 2024-05-19 08:00]

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணையலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வேலைவாய்ப்பு. கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா