Untitled Document
May 16, 2024 [GMT]
உயர்பாதுகாப்பு வலயம், தேசிய பாதுகாப்பு என்ற பெயர்களில் தமிழினப்படுகொலையின் தடயங்களை மூடிமறைக்கப்படுகின்றதா?
[Wednesday 2016-01-06 19:00]

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  

வட்டுவாய்க்கால் ஏ1 - ஏ8 வரையிலான காவலரண்களை அமைத்து யாரும் நுழையாதவாறு சிறிலங்காவின கடற்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு உள்ளாக்கப்பட்டுள்ள காணிகளில் பெரும்பகுதி படையினரது பயன்பாட்டுக்கு இல்லாமல், வெறும் பற்றைகளால நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

பயன்பாடு இல்லாது பற்றைகளால் நிறைந்த பகுதியொன்றிக்கு காவலரண்கள் அமைத்து சிறிலங்காவின் படையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றமை என்பது அப்பகுதியில் இன்படுகொலைக்கு உள்ளான பொதுமக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்பதனை தெட்டத் தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

இப்பகுதி மக்களின் அச்சமும் சந்தேகமும் இதனையே வெளிப்படுத்துகின்றது.

வட்டுவாய்க்கால் பகுதி என்பது போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பகுதியாக அமைந்திருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட வெள்ளைக்கொடியோடு வந்த பலரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்த பகுதியாக இருக்கின்றது.

வட்டுவாய்கால் நீரேரியினைக் கடந்து சிறிலங்கா படையினரிடம் வந்தடைந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நிலை இதுவரை என்ன என்பது தெரியாக கதையாகவுள்ளது.

குறிப்பாக, இப்பகுதியில் சிறிலங்கா படையினரது நேரடி துப்பாக்கிச் வேட்டுக்களால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதான செய்திகளும் உண்டு.

வட்டுவாய்க்காலில் புதைந்திருக்கும் கதைகளுக்கு அப்பால், போர் உக்கிரம் பெற்றிருந்த முள்ளிவாய்க்காலினைச் சுற்றிய பகுதிகள் ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு எனலாம்.

இக்கதைகள் ஒவ்வொன்றும் தமிழினப்படுகொலையின் தடயங்களாக உள்ளன.

சமீபத்தில் தமிழர் தாயக்தின் வட பகுதியில் சிறிலங்கா படையினரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சிறு தொகுதி காணித்துண்டுகளில், சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்த வீடுகளில் வதைக்கூடங்களின் எச்சங்கள் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டியது.

குறிப்பாக, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் வாய்திறக்க மறுத்து வருகின்ற கதைகளுக்கு அப்பால், இவ்வாறான வதைக்கூடங்களின் எச்சங்கள் இன்படுகொலையின் தடயங்களாகவே உள்ளன.

தற்போதைய சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் சமாதான தேவதையாக வலம்வரும் சந்திரிகா அம்மையார் அவர்கள், சிறிலங்காவின்அரசுத் தலைவராக இருந்த காலத்தில், ஆயிரக்கணக்கான காணாமல் போன தமிழ் இளைஞர்களின் கதை முதல் இன்று வரை காணாமலும் கடத்தப்பட்டவர்களது நிலையும் என்னவென்பது தெரியவில்லை.

தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா படையினர் உயர்பாதுகாப்பு வலயங்காளாக 5 ஆயிரத்து 710 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

தற்போது 2009ம் ஆண்டு இனவழிப்பின் போரின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் தனது இனவழிப்பின் எச்சங்களையும் தடயங்களையும் மூடிமறைக்கும் யுத்தியாக தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிரந்தர படைமுகாம்களை, தமிழர் நிலமெங்கும் நிறுவ முனைகின்றது சிறிலங்கா அரசாங்கம்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு பொறிமுறை என்றும் தமிழர் தேசத்தினை சிங்கள மயமாக்குதல், இராணுமயமாக்குதல், பௌத்த மயமாக்குதல் என்ற சிங்கள் அரச கொள்கை நிலைப்பாட்டுக்கு வடிவம் கொடுக்கின்றது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது தெளிவு

செய்திகளுக்கு அப்பால்......: சுதன்ராஜ்

  
   Bookmark and Share Seithy.com



சிறையில் ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் - கண்டுகொள்ளாத அரசு நல்லிணக்கம் பேசுகிறது!
[Thursday 2024-05-16 05:00]

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது.



வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தற்போது சாத்தியமில்லை!
[Thursday 2024-05-16 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறையில் தற்போது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



ரஷ்ய போரில் 16 படையினர் பலியானது உறுதி!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.



மேய்ச்சல் தரை விவகாரத்தில் நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 05:00]

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.



மனைவியைக் காப்பாற்ற கூலிப்படையாக சென்றவர் படுகாயத்துடன் திரும்பினார்!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மனித கடத்தலில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார். குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தை சேர்ந்த எரந்த சிந்தக தென்னகோன், போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.



குமுதினிப் படுகொலை நினைவேந்தல்! Top News
[Thursday 2024-05-16 05:00]

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.



நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யூடியூப் சனலுக்கு எதிராக தடை உத்தரவு!
[Thursday 2024-05-16 05:00]

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு எதிராக யூடியூப் சனல் ஒன்று அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்புகொள்வதையும் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புதிய நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.



மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக கடைப்பிடிப்போம்!
[Thursday 2024-05-16 05:00]

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர் வாக்கு தமிழருக்கே!
[Thursday 2024-05-16 05:00]

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.



வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!- விடுதி முகாமையாளரும் கைது.
[Thursday 2024-05-16 05:00]

வவுனியா- தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது!
[Wednesday 2024-05-15 17:00]

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயண ஒலிபெருக்கி சத்தங்களையும் இன முரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுமந்திரன் பொய் சொல்கிறார் - அவரிடம் அப்படிக் கேட்கவே இல்லை என்கிறார் சுரேஷ்!
[Wednesday 2024-05-15 17:00]

"ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனைக் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய், என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



பொலிசாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்!
[Wednesday 2024-05-15 17:00]

சம்பூர் பொலிஸாரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.



குழந்தையை கைவிட்டுத் தப்பிய சிறுமி கண்டுபிடிப்பு! - கர்ப்பமாக்கிய இளைஞன் கைது.
[Wednesday 2024-05-15 17:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்துக்கு 2 புள்ளிகள் இலவசம்!
[Wednesday 2024-05-15 17:00]

இன்றுடன் முடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில், விஞ்ஞான பாட வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்றவர்கள் அச்சப்பட வேண்டாம்!
[Wednesday 2024-05-15 17:00]

இரத்த உறைவு குறித்த கவலைகள் காரணமாக அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்ற நபர்கள் அதன் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு - தந்தையும் மகனும் படுகாயம்!
[Wednesday 2024-05-15 17:00]

திருகோணமலை - ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் உதவியுடன் ஆயுதங்களை உற்பத்தி செய்ய திட்டம்!
[Wednesday 2024-05-15 17:00]

சிறிய ஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.



ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா