Untitled Document
May 16, 2024 [GMT]
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் தமிழருக்கு எதிரான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள்! - சர்வதேச அறிக்கை Top News
[Wednesday 2016-01-06 19:00]

கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு  தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு தெரிவித்துள்ளது.

  

'இன்னமும் முடிவுறுத்தப்படாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் 2009 - 2015' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 155 பேரின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு 125 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரச அதிகாரிகளால் சித்ரவதை, பாலியல் வன்புணர்வு, சட்டரீதியற்ற முறையில் தடுத்து வைத்தல், மற்றும் கொலை செய்யப்படுதல் போன்ற அக்கிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த அக்கிரமங்கள் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரச - பாதுகாப்புத் துறையினர் மட்டத்தில் எவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்றதோ. அதேபோன்ற திட்டமிடலுடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இப்போதும் இடம்பெறுகின்றது.

இருண்ட உலகத்துக்குள் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் இவ்வாறான வன்முறைகளில் 2015 ஆம் ஆண்டு மாத்திரம் 20 பேர் கடத்தப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் ஆண்கள் என்பதுடன் 16 பேர் முன்னாள் போராளிகளாவர். இவர்கள் அனைவரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். 8 பேர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். அத்துடன் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை வந்தபோது காணாமல் போகச் செய்யப்பட்டோரை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தோரும் அடங்குகின்றனர்.

இவர்களில் 8 பேரின் கடத்தல் குறித்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் கடத்தல்கள் குறித்து அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாக்குமூலங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.



சிறையில் ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் - கண்டுகொள்ளாத அரசு நல்லிணக்கம் பேசுகிறது!
[Thursday 2024-05-16 05:00]

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது.



வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தற்போது சாத்தியமில்லை!
[Thursday 2024-05-16 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறையில் தற்போது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



ரஷ்ய போரில் 16 படையினர் பலியானது உறுதி!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.



மேய்ச்சல் தரை விவகாரத்தில் நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 05:00]

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.



மனைவியைக் காப்பாற்ற கூலிப்படையாக சென்றவர் படுகாயத்துடன் திரும்பினார்!
[Thursday 2024-05-16 05:00]

ரஷ்ய மனித கடத்தலில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார். குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தை சேர்ந்த எரந்த சிந்தக தென்னகோன், போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.



குமுதினிப் படுகொலை நினைவேந்தல்! Top News
[Thursday 2024-05-16 05:00]

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.



நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யூடியூப் சனலுக்கு எதிராக தடை உத்தரவு!
[Thursday 2024-05-16 05:00]

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு எதிராக யூடியூப் சனல் ஒன்று அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்புகொள்வதையும் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புதிய நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.



மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக கடைப்பிடிப்போம்!
[Thursday 2024-05-16 05:00]

தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர் வாக்கு தமிழருக்கே!
[Thursday 2024-05-16 05:00]

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.



வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!- விடுதி முகாமையாளரும் கைது.
[Thursday 2024-05-16 05:00]

வவுனியா- தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா