Untitled Document
May 9, 2024 [GMT]
மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு! Top News
[Saturday 2016-01-23 08:00]

புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் வவுனியா 'வன்னி இன்' விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் வவுனியா 'வன்னி இன்' விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

  

இதில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் நிறைவில் மேற்படிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு:-

"இன்று (நேற்று) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் மட்டும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலிலே சேர்க்கப்பட்டு அவை தொடர்பாக ஆராயப்பட்டன. புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்குவதற்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே இந்த புதிய அரசமைப்பு உருவாக்குதல் சம்பந்தமாக எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு, அதிலே நாங்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் இன்று பேசப்பட்டன.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த புதிய அரசமைப்புச் சட்டத்திலே கொண்டுவரப்படுகின்றபோது தமிழ் மக்களுடைய ஆணையை சுமந்து நிற்கின்ற கூட்டமைப்பு அந்தத் தேர்தல் அறிக்கையிலே நாங்கள் சொல்லியிருக்கின்ற அடிப்படையான விடயங்களை - புதிய அரசமைப்புச் சட்டத்திற்குள்ளே கொண்டு வருவதற்கான எங்களுடைய முயற்சிகளிலே நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என்ற தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் எடுத்திருக்கின்றோம்.

அத்தோடு எங்களுடைய மக்களுடைய உடனடிப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற விடயங்களிலே எங்களுடைய பங்களிப்பு செலுத்தப்படவேண்டும். இந்த வருடத்திலே முக்கிய விடயமாக அரசமைப்பு விடயம் இருந்தாலும் எங்களுடைய மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற பல விடயங்கள் சம்பந்தமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் இயங்குவோம்; அதற்கான பரிகாரங்களையும் தேடுவோம் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம். விசேடமாக எங்களுடைய மக்களுடைய காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சில சில இடங்களிலே சில் பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டாலும் முழுமையாக அந்த இடங்கள் விடுவிக்கப்பட்வில்லை. அதிலே இராணுவப் பிரசன்னம் இருப்பது மிகவும் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

ஆகவே, தொடர்ச்சியாக அரசுடன் நாங்கள் பேசி வருகின்றோம். தொடர்ச்சியாக சிறு சிறு பகுதிகள் விடுவிக்கப்படுகின்ற முறைமை இருந்து வருகின்றது. அது துரிதப்படுத்தப்படவேண்டும். அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்படவேண்டும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை தொடர்ந்தும் நாங்கள் அரசுக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றோம். அரசியல் கைதிகளுடைய விடுதலை குறித்து அரசால் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. உங்களுக்குத் தெரியும். இந்த வாக்குறுதிகள் முழுதாக நிறைவேற்றப்படவில்லை.

ஆகையினாலே சில நாட்களில் அரசுடன் நாங்கள் அது குறித்துப் பேச்சு நடத்தி வெகு விரைவிலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற - விசேடமாக நீண்ட காலமாக சிறையிலே இருக்கின்ற எங்களுடைய இளைஞர்களின் விடுவிப்பு சம்பந்தமாகவும், காணாமல் போகச் செய்யப்பட்டோரின் விடயம் சம்பந்தமாகவும் விசேடமாக நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். அது குறித்த ஒரு அலுவலகம் திறக்கப்படும். அது குறித்து உடனடியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகையாலே இது குறித்த பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கே இருக்கின்றது. அதை வருகின்ற மாதம் நாடாளுமன்றத்திலே ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையாக நாங்கள் முன்னெடுத்து அரசுனுடைய பதிலை கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்" - என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



டயானாவின் எம்.பி பதவியைப் பறித்தது உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாகதம்பிரான் வழிபாட்டை தடுத்து சப்த நாக விகாரையாக மாற்றம்! Top News
[Wednesday 2024-05-08 19:00]

குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.



மகாவலி அபிவிருத்தியின் பெயரால் நில ஆக்கிரமிப்பு! - மணலாறு மக்கள் போராட்டம். Top News
[Wednesday 2024-05-08 19:00]

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



ஜூனுக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு!
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.



நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூகுள், யூடியூப் மீது வழக்குகளை தாக்கல் செய்தார் இராணுவத் தளபதி!
[Wednesday 2024-05-08 19:00]

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை மின்திட்டத்துக்கு அனுமதி - பிரஜைகள் குழு எதிர்ப்பு.
[Wednesday 2024-05-08 19:00]

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.



உக்ரைன்- ரஷ்ய போர்முனைக்கு கூலிப்படைகளாக செல்லாதீர்கள்! - சவேந்திர சில்வா கோரிக்கை.
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.



டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட இராணுவ மேஜர்!
[Wednesday 2024-05-08 19:00]

மட்டக்களப்பில் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் 6 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



2100 கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம்!
[Wednesday 2024-05-08 19:00]

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில், இன்று நடைபெற்றது.



உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது! - சுமந்திரன் கூறுகிறார்.
[Wednesday 2024-05-08 05:00]

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



வெளிநாடுகளுக்கு வளங்களை கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருக்காது!
[Wednesday 2024-05-08 05:00]

தாயக வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்திருந்தால் புலிகள் இயக்கம் 2009 இல் அழிக்கப்பட்டிருக்காது என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



வடக்கு கிழக்கில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - அடுத்தவாரம் சூடு தணியும்!
[Wednesday 2024-05-08 05:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானியலாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!
[Wednesday 2024-05-08 05:00]

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.



ஏமாந்து விடாதீர்கள் - படையினருக்கு கமல் குணரத்ன வேண்டுகோள்!
[Wednesday 2024-05-08 05:00]

ரஷ்ய - உக்ரைன் போர் நடவடிக்கையில் பணியாற்றுவதற்கு ஆட்களை சேர்க்கும் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என இலங்கை படையினருக்கு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சீனாவின் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும் கல்வி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மட்டும் தான்! - வேறெதுவும் நடக்காது என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
[Wednesday 2024-05-08 05:00]

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளுநர் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



மோடியின் நண்பனின் நிறுவனத்துக்கே விசா வழங்கும் அனுமதி!
[Wednesday 2024-05-08 05:00]

இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசா வழங்குவதற்கு முழுமையான அதிகாரம் குடிவரவுத் திணைக்களத்திற்கே உள்ள நிலையில், 'ரணில் - ராஜபக்ச' அரசாங்கம் வருகை விசா மற்றும் இணைய விசா வழங்குவதற்கான அனுமதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கி நண்பரான சுபின் கர்கரியாவுக்கு சொந்தமான விஎவ்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.



இது பொலிஸ் ராஜ்யமல்ல - சஜித் எச்சரிக்கை!
[Wednesday 2024-05-08 05:00]

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல .இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



உள்ளூராட்சி சபைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சதி! - தயாசிறி குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-08 05:00]

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாக சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா