Untitled Document
April 26, 2024 [GMT]
நெருங்கிய உறவுத் திருமணம்.. ஓர் பார்வை..!
[Tuesday 2016-05-17 08:00]


உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும், முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக் கடமை யாதெனில், தங்களது வாழ்க்கைக் காலத்தினுள், வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும், உருவாக்கிவிட வேண்டுமென்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கின்ற சூட்சுமங்கள் கடந்து, உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால், மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால், வளமற்ற மழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கை கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில் இயற்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும், புத்தியில் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில் நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி, மனிதனின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும். புதிய மனித சந்ததி உருவாக்கத்தின், நாகரிக உயிரியற் பிணைப்பாக திருமணங்கள் அமைகின்றன. இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு, பரம்பரையலகுப் பல்வகைமையையும் கொண்டமைந்தால், வளமான வழித்தோன்றல்களுக்கும் இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்கும் வழிகோலும்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும், முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக் கடமை யாதெனில், தங்களது வாழ்க்கைக் காலத்தினுள், வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும், உருவாக்கிவிட வேண்டுமென்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கின்ற சூட்சுமங்கள் கடந்து, உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால், மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால், வளமற்ற மழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கை கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில் இயற்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும், புத்தியில் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில் நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி, மனிதனின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும். புதிய மனித சந்ததி உருவாக்கத்தின், நாகரிக உயிரியற் பிணைப்பாக திருமணங்கள் அமைகின்றன. இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு, பரம்பரையலகுப் பல்வகைமையையும் கொண்டமைந்தால், வளமான வழித்தோன்றல்களுக்கும் இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்கும் வழிகோலும்.

  

இரத்த உறவு திருமணங்கள் - தகவல் திரட்டு

ஏனைய உறவுத் திருமணங்களை விடவும், இரத்த உறவுத் திருமணங்கள், பிறப்பு குறைபாடுகளையும் குழந்தை இறப்பு வீதத்தையும் இரு மடங்கினால் அதிகரிக்கிறது.பரம்பரை நோய்த்தாக்கத்தில், முதல்நிலை இரத்த உறவு இனக்கலப்பானது, இரத்த உறவற்ற திருமணங்களை விட 13 மடங்கு அதிகரிப்பையும் இரண்டாம்நிலை இரத்த உறவுமுறை இனக்கலப்பை விட, 4 மடங்கு அதிகரிப்பையும் கொண்டிருக்கும்.முதல்நிலை இரத்த உறவு திருமணங்கள், 40 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகளில் எழக்கூடிய பிறப்புக் குறைபாடுகள் மற்றும் குழந்தை இறப்புக்கு, ஒப்பான அளவு பிரச்சினைகளுக்கு சந்தர்ப்பம் அமைக்கும்.

இரத்த உறவுத் திருமணங்கள், குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஆளுமை விருத்தியை கணிசமாக மங்கச் செய்வதோடு, குழந்தைகளில் உயரம் மற்றும் உடற்திணிவு குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்மேற்குலக நாடுகள், பொதுவாக இரத்த உறவுத் திருமணங்களை புறக்கணிக்கின்ற போதும், மத்திய கிழக்கு நாடுகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவை, இன்னும் இரத்த உறவுமுறைத் திருமணங்களாகவே அமைகின்றன.அமெரிக்கா போன்ற நாடுகளில், முதல்நிலை இரத்த உறவு திருமணங்கள் சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, திருமணத்துக்கு முந்தைய மரபணுப் பரிசோதனை சான்றிதழ்களும் கோரப்படுகின்றன. இலங்கையிலும் இரத்த உறவு முறைத் திருமணங்கள் தொடர்பான முரண்பாட்டுத் தர்க்கங்கள் உள்ளபோதும், அவை தொடர்பான தெளிவூட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

திருமணம் - குடும்ப ஒப்பந்தம்

சமூக, சமய, சம்பிரதாய மற்றும் சட்ட அடிப்படையில், பொதுவாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் குடும்பம் எனும் அடிப்படை அலகை அமைத்து, அதனூடக பாலுறவு, இனப்பெருக்கம் மற்றும் பொருளாதாரம் ஆகிய வாழ்வியல் வளங்களை அடைந்து கொள்வதற்கான, வாழ்க்கையின் இல்லற ஒப்பந்தமே திருமணமாகும். உலகளவில், திருமணமானது பொதுமைப்பாடான ஆண்-பெண் ஒழுக்கமுறை பிணைப்பாக இருக்கின்றபோதும், வௌ;வேறு இனப்பண்பாட்டுக் குழுக்களிடையே வெவ்வேறு விதமான திருமண விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன.

இரத்த உறவுத் திருமணங்கள்

குறிப்பிட்ட குழும நலன்களான, குடும்பச் சொத்துப் பாதுகாப்பு, வாழ்விட அருகாமை, கலாசார வாழ்க்கைத்துணை, குடும்ப உறவு கட்டமைப்பும் வலுப்படுத்தலும், நிலைத்து நிற்கக்கூடிய திருமண ஸ்திரத்தன்மை, மாமி-மருமகள் நல்லுறவு, பெண் சுயவுரிமை போன்ற வாழ்வியல் விடயங்களை மாத்திரம் முன்னிலைப்படுத்துகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பரம்பரை சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பதற்காக, நெருங்கிய உறவினர்களுக்கிடையில் நிகழும் திருமணமாகும். இத்திருமண பந்தத்தில் ஏனைய உறவுத் திருமணங்களை விடவும் பரம்பரை நோய்த்தாக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாகவிருக்கும்.

கலப்புத் திருமணங்கள்

பரம்பரையலகு பல்வகைமையில், பரந்துப்பட்ட வேறுபாடுடைய மூதாதையரைக் கொண்ட, நெருங்கிய இரத்த உறவினர்கள் அல்லாத ஆண்-பெண்ணுக்கிடையில் நிகழும் திருமண உறவாகும். பரம்பரையலகு என்பது யாது? ஒவ்வொரு மனிதனின் உடல் உருவவியலுக்குரிய செய்திகளை கொண்டிருப்பதும், அச்செய்திகளை அடுத்தடுத்த சந்ததிக்கும் காவிச் செல்கின்றதுமான தனித்துவக் கட்டமைப்புக்கள். உதாரணமாக ஒரு மனிதனுடைய கண்ணிறம், இரத்தவகை மற்றும் உயரம் என்பவற்றுக்கு வெவ்வேறு வகையான பரம்பரை அலகுகள் பொறுப்பாகவிருக்கும்.

ஆயிரக்கணக்கான இவ்வலகுகள், 22 சோடி தன்னிறமூர்த்தம் மற்றும் 1 சோடி இலிங்க நிறமூர்த்தம் எனப்படும் கட்டமைப்புக்குள் சோடி சோடியாக சேமித்து வைக்கப்படுவதோடு, இச்சோடிகளின் ஒவ்வொரு பிரதிகளும் தாய் மற்றும் தந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும். சோடிகளில், பிரதிகள் இரண்டும் ஆட்சியுடையவையாக(AA) அல்லது பின்னடைவானவையாக(aa) அல்லது ஒன்று ஆட்சியுடையதாகவும் மற்றையது பின்னடைவானதாகவும்(Aa) இருக்கும். (AA, Aa, aa எல்லா சோடிகளிலும் ஆங்கில பெரிய எழுத்து A-ஆட்சியையும், சிறிய எழுத்து a-பின்னடைவையும் குறிக்கும்)

பரம்பரையலகு நோய்கள் என்றால் என்ன?

பரம்பரையலகுகளில் ஏற்படுத்தப்படும் விகாரங்கள் அல்லது மாற்றங்களின் மூலம், அவற்றில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் மாற்றப்படுவதனால், அச்செய்திகளுக்குரிய மனித இயல்புகளும் பிறழ்வுகளாக மாற்றமடையும். இப்பிறழ்வுகளில் சில, குறிப்பிட்ட நபரை மாத்திரம் பாதிப்பனவாகவும், இன்னும் சில அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படக்கூடியவையாகவும் அமைகின்றன.

பரம்பரையலகு நோய்கள்: காவிகள் எனப்படுவோர் யார்? பரம்பரையலகில் ஆட்சியான பிரதியையும், பின்னடைவான பிரதியையும் ஒருங்கே கொண்டிருக்கின்றதும்(யுய), பின்னடைவான பிரதியில்(ய) நோய்க்குரிய தகவல்களைக் காவுகின்றதுமான, நோய்த்தாக்கத்தை வெளிக்காட்டாத நபர்கள்.பரம்பரையலகு நோய்கள்: தாய்-தந்தை இருவருமே காவிகள்ஒவ்வொரு கருத்தரிப்பும் 25 வீதமான நோயுற்ற குழந்தைகளையும் 25 வீதமான குறைபாடற்ற குழந்தைகளையும் 50 வீதமான காவிக் குழந்தைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.

பரம்பரையலகு நோய்கள் - ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வு

பரம்பரையலகின் ஆட்சியான தனிப்பிரதியொன்றில் நிகழும் விகாரமாகும். பொதுவாக குறைபாட்டுக் குழந்தைகளின் பெற்றோரில், எவரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களில் நோய்த்தாக்கங்கள்; சிலவேளைகளில் வெளித்தெரிவதுமில்லை. இப்பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு நோய் கடத்தப்படும் சந்தர்ப்பம் 50 வீதமாகவிருக்கும். பல்சிறுநீரக கட்டிநோய் (Polycystic Kidney Disease), பரம்பரை கொலஸ்ட்ரோல் நோய் (Familial Hypercholestrolemia), பரம்பரை தற்குருதிச்சோகை (Hereditary Spherocytosis) போன்றவை ஆட்சியான தன்மூர்த்தப் பிறழ்வுகளாகும்.

பரம்பரையலகு நோய்கள் - பின்னடைவான தன்மூர்த்தப் பிறழ்வு

பரம்பரையலகின் பின்னடைவான இரு பிரதிகளும் மாற்றமுறுவதினால் நிகழும். நோய்த்தாக்கமுற்ற பெற்றோரினால் பிள்ளைகளுக்கு 100வீத தாக்கமும் காவிப் பெற்றோரினால் ஒவ்வொரு கருத்தரிப்பிலும் பிள்ளைகளுக்கான நோய்த் தாக்கம் 25 வீதமாகவுமிருக்கும். இப்பாதிப்புக்களாக அரிவாளுரு குருதிச்சோகை (Sickle Cell Anaemia), பீனைல் கீற்றோன் கழிவுநோய் (Phenylketonuria), நார்க்கட்டி (Cystic fibrosis) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பரம்பரையலகு நோய்கள் - ஆட்சியான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு

ஓ-இலிங்க மூர்த்த பரம்பரையலகுகளின் ஆட்சிப்பிரதி விகாரங்களாகும். இப்பிறழ்வு பெண்களை விட ஆண்களை அதிகமாகத் தாக்குவதோடு, அனேகமாக ஆண்கரு இறப்பை ஏற்படுத்தும். இதனால் நோய் நிலைகளோடு அதிகமாக பெண்களே இருப்பர். ரெட் கூட்டறிகுறி (Rett Syndrome), ஐகார்டி கூட்டறிகுறி (Aicardi Syndrome) போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

பரம்பரையலகு நோய்கள் - பின்னடைவான ஓ-இலிங்க மூர்த்தப்(X-linked) பிறழ்வு

இவை ஓ-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளின் பின்னடைவு பிரதிகளில் நிகழ்கின்ற மாற்றங்களாகும். இதனால் பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிப்புறுகின்றனர். தாய் பாதிப்பற்றவராகவும் தந்தை பாதிப்புள்ளவராகவுமுள்ள நிலையில், ஆண் குழந்தை பாதிப்புற்றும், பெண் குழந்தை காவியாகவுமிருக்கும்.

தந்தை பாதிப்பற்றவராகவும் தாய் காவியாகவும் உள்ளபோது, ஆண் பிள்ளை 50வீத குறைபாட்டு சந்தர்ப்பத்தையும் பெண் பிள்ளை 50 வீத காவியாகவுமிருக்கும். தந்தை பாதிப்போடும் தாய் காவியாகவுமிருப்பின், ஆண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பும், பெண் குழந்தையெனில் 50 வீத பாதிப்பு அல்லது 50 வீத காவியாகவும் இருப்பதற்கான சந்தர்ப்பங்களுண்டு. குருதி உறையாமை(Haemophlia), தசை நார்த்தேய்வு (Duchenne Muscular Dystrophy), நிறக்குருடு, ஆண்களில் வழுக்கை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.

பரம்பரையலகு நோய்கள் - லு-இலிங்க மூர்த்தப்(Y-linked) பிறழ்வு

Y-இலிங்க மூர்த்தத்திலுள்ள பரம்பரையலகுகளில் ஏற்படும் சடுதியான விகாரங்களாகும். லு-இலிங்க மூர்த்தம் ஆண்களில் மாத்திரமேயுள்ளதால் ஆண்கள் மாத்திரமே பாதிக்கப்படுவர். ஓப்பீட்டளவில் லு-சிறியதாகவும் குறைவான பரம்பரையலகுகளையும் கொண்டிருப்பதனால் பாதிப்பும் குறைவாகவுள்ளதோடு, ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

பரம்பரையலகு நோய்கள் - காவிப் பரிசோதனைகளும் ஆலோசனைகளும்

பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே காவிகளாகவுள்ள நிலையில் அவற்றுக்கான மரபணு பரிசோதனைகளும் கருத்;தரித்தல் தொடர்பான உளவள ஆலோசனைகளும் விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இரத்த உறவு முறைத் திருமணங்கள்: பரம்பரை நோய் அபாய அளவு ஒவ்வொரு மனிதனிலும் விகாரத்துக்கு உட்படக்கூடிய பரம்பரை அலகுகளும் காணப்படும். எவ்வாறெனினும் நெருங்கிய உறவினர் அல்லாதவர்களில் இவ்விகார அபாயம் மிகக்குறைவாகவே இருக்கும்.

ஆனால், இரத்த உறவு முறையில் பொதுவான மூதாதையரை கொண்டிருக்கும் நெருங்கிய உறவினர்கள், ஏறக்குறைய ஒத்த பரம்பரையலகுச் சங்கிலியையும் விகாரத்துக்குரிய பரம்பரையலகுகளையும் அதிகளவில் கொண்டிருப்பர். இதனால் நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள், பரம்பரையலகு குறைபாட்டு குழந்தைகளையும் காவிக் குழந்தைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பங்களை வெகுவாகவே அதிகரிக்கும். இரத்த உறவுத் திருமணங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றபோது, பரம்பரை நோய் அபாய அளவும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும்.

இரத்த உறவு முறைத் திருமணங்களும் பரம்பரை நோய் பரிகாரங்களும்

பரம்பரை நோய் பாதிப்புக்கள் பற்றிய பரந்தளவிலான விழிப்புணர்வுகளும் அறிவூட்டல்களும் மிகவும் அவசியமாக இருப்பதோடு, திருமணத்துக்கு முன்னரான மரபணுப் பரிசோதனைகளும் பரம்பரையலகுப் பிறழ்வு பற்றிய மருத்துவ ஆலோசனைகளும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. பரம்பரைக் குறைப்பாட்டு குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோரின் வேதனை மரண வேதனையிலும் பன்மடங்கு பெரியது. உன்னத உயிர்களை உற்பத்தி செய்து உலகுக்கு அளிக்கும் அனைவருமே, தங்களது குழந்தையும் இன்னுமொரு வளமான எச்சத்துக்;குரிய மூலமாகவே இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.

உயிர் உற்பத்தியில் பரம்பரையலகுப் பிறழ்வுகள் நிகழ்ந்ததன்; பின்னர் நிவர்த்திப்பதற்கான உத்திகள், மருத்துவ உலகுக்கு இன்றளவிலும் சவாலாகவே இருக்கிறது. ஆகையினால் ஏனைய எல்லாக் காரணங்களையும் பின்தள்ளி, இரத்த உறவுத் திருமணங்களை தவிர்த்து, செல்வங்களில் உயர்ந்த செல்வமாய் குறைகளற்ற குழந்தைகளை உருவாக்கும் உறவுகளாக, திருமண பந்தங்களை முதன்மைப்படுத்துங்கள்.

  
   Bookmark and Share Seithy.com



ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? - இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்!
[Friday 2024-04-26 18:00]

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் இயல்பான விடயமாகும். ஆனால் இது வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில சமயங்களில் ஆடை முழுமையாக நனைந்துவிடும் அளவுக்கு வியர்வை வெளியேறும்.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



கோடை காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? - பலரும் அறிந்திடாத உண்மை!
[Thursday 2024-04-25 18:00]

கால்சியம் சத்து அதிகம் கொண்ட தயிரை தினமும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயிர் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.



தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Wednesday 2024-04-24 18:00]

நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.



இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
[Tuesday 2024-04-23 18:00]

இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம். இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.



சரியான தூக்கம் இல்லையா? இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்!
[Monday 2024-04-22 18:00]

தினமும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தூக்கமின்மை பிரச்சினை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். எரிச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.



மாம்பழத் தோல் டீ-ன் ஆரோக்கிய நன்மைகள்!
[Sunday 2024-04-21 18:00]

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள் பலர், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. விட்டமின் ஏ, பி6, சி மற்றும் இ நிறையவே உள்ளன, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இப்பழம் செரிமானத்திற்கு உகந்தது. மாம்பழத்தில் உள்ள தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.



நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி!
[Saturday 2024-04-20 16:00]

பொதுவாகவே கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வல்லாரை இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் வல்லாரை பெரிதும் துணைப்புரிகின்றது. மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் செறிந்து காணப்படுகின்றது.



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.



சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
[Friday 2024-04-12 18:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழம்பு!
[Thursday 2024-04-11 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-04-10 18:00]

சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தினமும் ஒரு துளி எண்ணெய் தொப்புளில் விட்டால் என்ன பயன் தெரியுமா?
[Tuesday 2024-04-09 18:00]

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் வருவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம். நமது உடலில் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் இயற்கையான விஷயங்களை செய்ய வேண்டும். அப்படியான ஒரு விஷயத்தை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தேங்காய் எண்ணெயை தொப்புளில் விடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அரிசி தண்ணீரை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா?
[Monday 2024-04-08 18:00]

பொதுவாகவே அனைவரும் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய நன்மைகளை இந்த அரிசி கழுவிய தண்ணீர் கொண்டுள்ளது. கூந்தல், சருமம், முகம் ஆகிய அனைத்திற்கும் அழகு சேர்க்கும் ரகசியங்களை நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. இதனை சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகளை ஏசி-அறையில் தூங்க வைக்கலாமா?
[Sunday 2024-04-07 16:00]

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும். கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா