Untitled Document
April 26, 2024 [GMT]
ஜெனிவாவில் அரசுக்கு காலஅவகாசம் வழங்கினால் சம்பந்தனே பொறுப்பு! - கஜேந்திரகுமார்
[Monday 2017-02-13 19:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பொறுப்பேற்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பொறுப்பேற்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் 2 வருட கால அவகாசம் கோருவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் இரண்டு வருட காலஅவகாசத்தினை கோரவுள்ள நிலையில், தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் சுமந்திரனும், தாம் இணங்கியிருக்கும் நாடகத்தினை அரங்கேற்றுவதற்கு முனைகின்றார்கள். அரசாங்கத்தின் கால அவகாசத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த முடியாமல், தமிழ் மக்களின் விமர்சனங்களை தாங்க முடியாத நிலமையில் தான் இந்த நாடகம் அரங்கேற்றியுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாக தனது நிலைப்பாட்டினை கூறியிருந்தது. உரிய நேரத்தில் உரிய நிலைப்பாட்டினை எடுக்காவிடின், ஆட்சி மாறிய பின்னர் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் நடுத்தெருவில் விடப்படுமென்ற கருத்தினை சொல்லி வந்தோம். 2015ஆம் ஆண்டு உள்ளக விசாரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுடன் இணங்கிய படியால் தான் உள்ளக விசாரணையில் சர்வதேச சமூகத்தினை உள்ளடக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தின் இறுதி முடிவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது. நிகழ்ச்சி நிரலை அரசாங்கத்தின் பொறுப்புக்கு கொடுத்ததன் பின்னர், தீர்மானத்தினை செய்யப் போவதில்லை. தமிழன் என்ற வகையில் இலங்கை அரசு எப்படியான அரசு என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் பேச்சாளருக்கும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி நடந்து கொள்ளுமென அனுபவ ரீதியாக தெரிந்திருக்க வேண்டும்.

முக்கியமான காலகட்டத்தில் நிபந்தனையற்ற ஆதரவினைக் கொடுத்து, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்கும் வேலையினை அரசாங்கம் முன்னெடுக்க, தமிழ் மக்களின் முகத்தை பார்க்க முடியாது என்ற காரணத்தினால் மட்டும் இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றும் நாடகத்தினை உடனே நிறுத்த வேண்டும். முதற்கட்டமாக தமிழ் மக்கள் உறுதியான முடிவில் இருக்க வேண்டும். ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எந்தவொரு கால அவகாசத்தினையும் வழங்க முடியாது. தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்க, பொறுப்புக்கூறலை நிறுத்த களத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடைமுறையில் உள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கேட்பது முட்டாள் தனம்.

மகிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற அரசு முனைகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசத்தினை கொடுப்பதற்கான வகையில் கருத்துக்களை வெளியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 2 வருட கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கினால், தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே எமது ஆணித்தனமான கருத்து, இதனை தமிழ் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

  
   Bookmark and Share Seithy.com



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா