Untitled Document
April 26, 2024 [GMT]
வேலையற்ற பட்டதாரிகளுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!
[Sunday 2017-03-26 07:00]

வேலையற்ற பட்டதாரிகள், சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். கடந்த 24 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள், சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். கடந்த 24 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

  

இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

சந்திப்பின் போது வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் என்னுடன் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் தமது படிப்பை முடித்த பின் பல வருடங்களாக வேலையற்ற பட்டதாரிகளாகவிருப்பதாகவும் சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்கூறினார்கள். அடுத்த மாணவத்தலைமுறையினர் தாம் வேலையற்றிருப்பதைப்பார்த்து படிப்பதைத் தொடராது புறக்கணிக்கும் நிலை ஏற்படக்கூடுமெனவும் கூறினார்கள்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி தற்பொழுது வெற்றிடங்கள் 1051 ஆகவிருப்பதையெடுத்துக்காட்டி அவற்றை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். அவற்றில் பல வெற்றிடயங்கள் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானவை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதாரிகளில் அவ்வாறானவர்கள் மிகக் குறைவே என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதன் பொருட்டு அவர்களை வேறு துறைகளில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசப்பட்டது.

சுற்றுலாத்துறை, தொழில்முயற்சிகள், ஆடைத்தொழில்நிறுவனங்களில் முகாமைத்துவத்தரப்பயிற்சி, பொலிஸ் திணைக்களத்தில் உதவி அத்தியட்சகர் தரப்பதவிகள் போன்றவற்றில் வெற்றிடங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வடமாகாண வெற்றிடங்கள் சுமார் 2000 அளவில் இருப்பதாகக் கூறினார்கள். அவை பற்றி ஆளுநர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனக் கூறினேன்.

தொண்டர் ஆசிரியர் சம்பந்தமாக சில விடயங்களைக் குறிப்பிட்டார்கள். வருடாவருடம் தொண்டர் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாகவும் அவர்கள் வேலையை தம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்கள். எக்காலத்திலிருந்து கற்பித்த தொண்டர் ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய மத்திய அரசாங்க சுற்றுநிரூபம் இருப்பதையெடுத்துக்கூறி பட்டதாரிகள் அவ் வெற்றிடங்கள் ஏற்படின் அவற்றை நிரப்பமுடியாதென அறிவித்தேன்.

தொண்டர் ஆசிரியர் கல்வித் தகைமை க.பொ.த சாதாரண அல்லது உயர் தரமே அன்றிப் பட்டப்படிப்பல்ல என்பதை எடுத்துக் கூறினேன். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தமாகவும் அதே பதில் வழங்கப்பட்டது. அதாவது அப்பதவிகளுக்கு பட்டதாரிகளை நியமித்தால் குறைந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுக்கு வேலைவாய்ப்பில்லாமல் போகும் என்பதை தெரிவித்தேன்.

கடைசியாக அத்தனை வேலையற்ற பட்டதாரிகளின் சுய விபரங்களையும் ஆண்டு ரீதியாக கற்ற பாடங்களின் அடிப்படையில் பட்டியலாகத் தயாரித்து 28.03.2017க்கு முன் அனுப்பிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். அத்துடன் அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்காதவர்களுக்கு தனியார்துறையில் வேலையில் சேர்வது பற்றி அவர்களின் விருப்புகளைத் தருமாறும் கோரினேன்.

அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தரவுகளை வைத்து கொழும்பு செல்லும் போது நான் இவைபற்றி உரிய அமைச்சருடன் பேசுவதாக அவர்களுக்குத் தெரிவித்தேன் எனவும் கூட்டம் சுமூகமாக முடிவுற்றது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா