Untitled Document
April 26, 2024 [GMT]
ஜெனிவாவில் 47 நாடுகளின் ஆதரவு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி! - மங்கள சமரவீர
[Wednesday 2017-03-29 07:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 47 உறுப்பு நாடுகளும் ஏக மனதாக ஆதரவு வழங்கியமை சர்வதேச ரீதியில் இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலைத்தேய நாடுகள் மாத்திரமன்றி சகல நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் செயற்படுவதுடன், உலகில் எந்தவொரு எதிரி நாடும் இலங்கைக்கு இல்லையென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 47 உறுப்பு நாடுகளும் ஏக மனதாக ஆதரவு வழங்கியமை சர்வதேச ரீதியில் இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலைத்தேய நாடுகள் மாத்திரமன்றி சகல நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் செயற்படுவதுடன், உலகில் எந்தவொரு எதிரி நாடும் இலங்கைக்கு இல்லையென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

  

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர, 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 12 நாடுகள் மாத்திரமே ஆதரவளித்திருந்தன. எனினும், ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர நாடுகள் உள்ளடங்கலாக 47 உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று இலங்கைக்கு சார்பான பிரேரணை இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும். அதன் பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி செயற்பாட்டுக்கான திட்டம் தயாரிக்கப்படும். சர்வதேச விசாரணை வேண்டுமென வடக்கில் வலியுறுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படைவாதிகள். பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளனர். எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அரசு முன்னெடுக்கும் நம்பகமான விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், இறுதியில் அவைபற்றிய தீர்மானங்களை எடுப்பது அரசாங்கமே. நாட்டின் இறைமைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்களுக்கு அமைய தீர்மானம் எடுக்கும் அதேநேரம், சகல தரப்பினரின் கரிசனையும் இவ்விடயத்தில் கவனத்தில் கொள்ளப்படும். கடந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திய, மோசடி ஆட்சி காரணமாக சர்வதேசத்துக்கு மாத்திரமன்றி, உள்நாட்டு மக்களுக்கும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பில் நம்பிக்கை இருக்கவில்லை.

இதனாலேயே சர்வதேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியது. எனினும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதியின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்த புதிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. இதனால் மேற்குலக நாடுகள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என சகல திசைகளிலும் உள்ள நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன.

உலகத்தில் மிகவும் ஒழுக்கமான கட்டமைப்பைக் கொண்ட பாதுகாப்புப் படை இலங்கையில் உள்ளது. இராணுவத்தில் உள்ள சலகரும் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்ட இயலாது. ஒரு சிலர் தவறிழைத்திருந்தால் அவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்க வேண்டும். முதலில் அவர்கள் இழைத்தது யுத்தக் குற்றமா இல்லையா என்பது கூட விசாரணைகளின் மூலமே உறுதிசெய்யப்பட வேண்டும்.

சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது என்பது சர்வதேசத்தினதோ அல்லது இலங்கை அரசாங்கத்தினதோ ஒ​ரே யொரு குறிக்கோள் அல்ல. பாதிப்பட்டவர்கள் எமது நாட்டு சகோதர இனத்தவர்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக நீதியான, நம்பகமான நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும். சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும். குறிப்பாக பாதிக்கப்பட்ட எமது நாட்டு சகேதார இனத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாயவுமே காரணமாகினர்.

புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்போம் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. இந்த மக்கள் ஆணையை மதித்து ஜனாதிபதியும், பிரதமரும் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது.



பொய் சொல்கிறார் பேராயர்! - கோட்டா கடும் தாக்கு.
[Thursday 2024-04-25 16:00]

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்.



சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
[Thursday 2024-04-25 16:00]

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.



பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்!
[Thursday 2024-04-25 16:00]

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.



சஜித்துடன் சீன உயர்மட்டக் குழு சந்திப்பு!
[Thursday 2024-04-25 16:00]

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .



தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2024-04-25 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்கிறார் மைத்திரி!
[Thursday 2024-04-25 16:00]

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொட்டுவில் பொருத்தமான பல வேட்பாளர்கள்!
[Thursday 2024-04-25 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா