Untitled Document
April 26, 2024 [GMT]
சமையல் அறையில் முடங்கும் அறிவியல்?
[Monday 2017-05-08 08:00]

அறிவியல் துறையில் நுண்ணுயிரியில்(microbiology)பிரிவில் பெரும் சாதனையாளராக விரும்பியவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சசிதாரா(40).நுண்ணுயிரியில் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற, காட்டில் வளரும் காளான் வகையைக் குறைந்த செலவில் எளிய முறையில் வீடுகளில் பயிர்செய்வது பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அறிவியல் துறையில் நுண்ணுயிரியில்(microbiology)பிரிவில் பெரும் சாதனையாளராக விரும்பியவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சசிதாரா(40).நுண்ணுயிரியில் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற, காட்டில் வளரும் காளான் வகையைக் குறைந்த செலவில் எளிய முறையில் வீடுகளில் பயிர்செய்வது பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

  

ஆனால் திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்புக் காரணங்களால் சுமார் 12 ஆண்டுகள் அவர் அறிவியல் துறையை விட்டு , வீட்டு வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம். ''அறிவியல் உலகத்தில் அன்றாடம் மா ற்றம் ஏற்படும். இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகு, மீண்டும் வேலை கிடைப்பது ஒரு சவால். அங்கீகாரம் இல்லாதது போல் உணர்ந்தேன். சஞ்சிகைகளில் அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்,'' என்று சசிதாரா கூறுகிறார்.

அம்மா ஸ்தானம் பெறுகிறார்கள், அறிவியலில் கோட்டைவிட்டு விடுகிறார்கள்

சசிதாராவைப் போல பல பெண்கள் அறிவியல் துறையில் துறையில் சாதிக்க மட்டுமல்லாது படிப்பை தொடரக் கூட குடும்பப் பொறுப்புகள் காரணம் என்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.சமீபத்தில் மாநிலங்களவைவில் நடந்த விவாதத்தில், விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் புவியியல் அமைச்சுக்கான மாநில அமைச்சர் எஸ்.சௌத்ரி, இந்தியாவில் ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டுள்ள 1.93 லட்சம் நபர்களில், வெறும் 27,532 பேர்தான் பெண்கள், அதாவது 14.3 சதவீதம் மட்டுமே பெண்கள் என்று குறிப்பிட்டார்.

பெண் ஆராய்ச்சியாளர்கள் குறைவதற்கு காரணம் என்ன? தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மோகனா தன்னிடம் படித்த பல பெண் குழந்தைகள் அறிவியல் போட்டிகள் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண், பரிசுகளை வென்றதாகவும், ஆனால் அவர்களில் யாரும் ஆராய்ச்சியாளராக இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்தார்.

அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மோகனா

''சில ஆண் குழந்தைகள் மேல் படிப்பை தொடர்ந்து, தற்போது ஒருவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், பலர் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவங்களின் பணியில் உள்ளனர். ஆனால் பெண் குழந்தைகளை பொறுத்தவரை ஒரு சிலர் அறிவியல் ஆசிரியராக மட்டுமே உள்ளனர்,'' என்றார். இளம் சிறார்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரும், அன்றாட அறிவியல் பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ள மோகனா, ''பல பெண் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு அம்மா ஸ்தானம் பெறுகிறார்கள், அறிவியலில் கோட்டைவிட்டுவிடுகிறார்கள் என்பதை உணரும்போது சோகமாக உள்ளது,'' என்று தெரிவித்தார்.

25 வயதிற்குள் கை நிறைய சம்பளம், திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைப் பேறு அடைய, கலை மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த பட்டப்படிப்புகள்தான் பெண்களுக்கு சிறந்தது என்று எண்ணும் மனநிலை சமூகத்தில் நிலவுகிறது என்கிறார் இந்தியாவின் முன்னணி இயற்பியலார்களில் ஒருவரான லட்சுமிகாந்தம்.பெண் விஞ்ஞானிகள் திட்டத்தின் தலைவராக இருந்த இவர் பெண் குழந்தைகள் அறிவியல் பாடங்களை முக்கிய பாடங்களாக படிப்பதற்கு உத்வேகம் இல்லாதது ஒரு அவலநிலை என்கிறார் அவர்.இந்திய அரசின் ரசாயன தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக 2013-15 வரை ஆராய்ச்சியாளர் லட்சுமிகாந்தம் பணியாற்றினார். 1983ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியை வகித்த முதல் பெண் இவர்தான்.

இந்தியாவின் அறிவியல் தொடர்பான 44 மத்திய பல்கலைக்கழங்கள் வெறும் நான்கு பல்கலைக்கழங்களில்தான் பெண்கள் துணை வேந்தர் பதவியில் உள்ளனர் என்கிறது அரசின் அறிக்கை.

குடும்ப பொறுப்பு யாருக்கு?

குடும்பப் பொறுப்புகள் என்று வரும்போது பெண்களுக்கு அவர்களின் தனித்திறனை இழந்துவிடும் அளவிற்கு அவர்களை தள்ளும் காரணிகள் என்ன என்று அறிய முதல் முறையாக பெண் ஆராய்ச்சியாளர்களின் படிப்பு,வேலை தொடர்பாக சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அந்த கணக்கெடுப்பை நடத்தியவர்களில் ஒருவர் பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரோகிணி கோட்போல். அவர் கூறுகையில் ''திருமணம், குழந்தை பெற வேண்டிய கட்டாயம் மற்றும் வீட்டில் உள்ள வயதானவர்களை பார்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஆகியவை பெண்கள் அறிவியலில் இருந்து விலக பிரதான காரணங்கள் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம் ஆண் ஆரய்ச்சியாளர்கள் பணியில் இருந்து விலகுவதற்கு அவர்களின் மேல்படிப்பு, உடல்நல பிரச்சனை மற்றும் விருப்ப ஓய்வு போன்றவை காரணம் என்று அறியமுடிந்தது,'' என்கிறார்.''பல நேரங்களில் தலைமை ஆராய்ச்சியாளர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது அல்லது முனைவர் பட்டப் படிப்பிற்கு வழிகாட்டியாக இருப்பதற்கு தயங்குகின்றனர். பெண் ஆராய்ச்சியாளர்கள் முனைவர் பட்டம் பெற்றபிறகு, முழு நேர ஆராய்ச்சியாளராக இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதை காரணமாக கூறுபவர்களும் உண்டு,'' என்கிறார்.

சமூகத்தின் பொதுப் புத்தியில் பெண் படித்து வெளியில் வேலைக்கு போனாலும், வீட்டுவேலை செய்வது பெண்ணின் பொறுப்பு என்ற எண்ணம் உள்ளது. சட்டங்கள் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினாலும், பெண் ஆணுக்கு சமம், குடும்பப் பொறுப்பில் இருவருக்கும் சமமான பங்கு உள்ளது என்ற அடிப்படைபுரிதலை உணராதவரை பெரிய மற்றம் ஏற்படாது என்கிறார் ரோகிணி. ஆராய்ச்சியாளர் ரோகிணி கோட்போல் சமூக அறிவியல் மூலம் தீர்வு பணியில் இருந்து விலகி சென்ற பெண் ஆராய்ச்சியாளர்களை பணிக்கு திரும்ப இந்திய அரசு பிரத்யேக திட்டங்களை வகுத்துள்ளது என்றும் அதில் குடும்ப காரணங்களுக்காக வேறு நகரங்களுக்கு மாறி செல்லும் கட்டாயம் ஏற்பட்டால், அந்த நகரத்தில் உள்ள அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியை தொடர பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கிறார் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏ பி தாஸ். அவர், பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் குழு உறுப்பினர் ஆவார். அரசு பல திட்டங்களை கொண்டு வரலாம், ஆனால், காளான் வளர்ப்பு ஆராய்ச்சியை தொடர தக்க சமயத்தை எதிர்நோக்கியுள்ள திருச்சி பெண் ஆராய்ச்சியாளர் சசிதாரவை போன்றவர்கள், மற்றும் ஆசிரியை மோகனா போன்றவர்களுக்கு தீர்வு, ஆண்-பெண் சமம் என்ற அறிவியல் உண்மையை சமூகம் உணர்ந்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார் தாஸ்.

BBC

  
   Bookmark and Share Seithy.com



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா