Untitled Document
April 26, 2024 [GMT]
வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு: - ஆய்வில் தகவல்
[Thursday 2017-05-11 07:00]

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் கூறுகின்றன. அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை என்றும் மாத்திரைகளை தவிர பிற காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் கூறுகின்றன. அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை என்றும் மாத்திரைகளை தவிர பிற காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  

சர்வதேச விஞ்ஞானிகள், நான்கு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து எழனூற்று அறுபத்தி மூன்று பேரிடமிருந்து தகவல்களை சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் வீக்கத்திற்கு எதிரான ஸ்டீராய்ட் கலப்பில்தா மருந்துகளை பயன்படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

விழிப்புணர்வின் அவசியம்

இந்த தகவல்களை ஆராய்ந்த கனடா, ஃபினலாந்து மற்றும் பிரிட்டனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இம்மாதிரியான ஸ்டீராய்ட் இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பிற்கான ஆபத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்திலே கூட அதிக ஆபத்துக்கள் வரக்கூடும் என்றும் குறிப்பாக அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துக்கள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாத்திரைகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள பல விஷயங்கள் தடையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வலி நிவாரணிகள்தான் காரணமா?

லண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், இந்த ஆய்வு, ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை சிறிது எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார். அதிகபட்சமான நோயாளிகள் மீது இந்த ஆய்வை நடத்திய போதும், இதனை பற்றிய சில அம்சங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கிறார் அவர். மாரடைப்பு வராமல் இருப்பதற்கு வலி நிவாரணிகள் காரணமாக இல்லாமலும் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். "எடுத்துக்காட்டாக, அதிக வலியுடைய ஒருவருக்கு அதிக டோஸ் மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்தால், அதற்கு காரணம் வலி நிவாரணியா அல்லது வேறு காரணமா என்று கண்டுப்பிடிப்பது "சற்று கடினம்" என அவர் தெரிவித்தார். "அதற்கான காரணம் முழுவதுமாக வேறாக கூட இருக்கலாம்". "மேலும் இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பிற நோய்களான புகைப்பிடித்தல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவையும் காரணமாகவும் இருக்கலாம்" என்றும் அவர் தெரிவிக்கிறார். நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான மருந்துகளால் இதய பிரச்சனைகளும் வலிப்பும் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டுதலின்படி, இருதய நோயுள்ளவர்கள் ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளை மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்; தீவிரமான இருதய கோளாறு உள்ளவர்கள் அம்மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இம்மாதியான அதிக டோஸ் கொண்ட வலிநிவாரணிகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் உள்ள ஆபத்துக்களையும் அதன் பயன்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம் என்பதை உணர வேண்டும் என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனைச் சார்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார்.மேலும் இம்மாதிரியான மாத்திரைகளை பரிந்துரைக்கும் முன், நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ நிலையையும், அவர்கள் முன்னதாக பயன்படுத்தி வந்த மருந்துகள் குறித்தும், கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிப்படுகிறது.

மாற்றுப் பயன்பாடு என்ன?

இந்த ஆய்வில், மருந்து கடைகளில் தானாக மாத்திரைகளை பெறுபவர்கள், தானாக மருந்துகளை வாங்கி உட்கொள்பவர்களை தவிர்த்து, வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்பட்டனர். ஆகையால் வலிகளை குறைப்பதற்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இந்த ஆய்வு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, வீரியம் குறைந்த, ஸ்டீராய்ட் கலப்பற்ற வலி நிவாரணிகளை குறைந்த காலத்திற்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இம்மாத்திரைகள் அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதன் ஆபத்து எத்தகையது?

எம்மாதிரியான ஆபத்து வரும் என்றும் அல்லது மாரடைப்பு வருவதற்கான அடிப்படை காரணம் எந்தளவு என்பதும் இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடவில்லை. வலி நிவாரணிகளை சிறிது காலம் பயன்படுத்திய போதும் அதிக ஆபத்திற்கு உள்ளாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதைப் பற்றிய தெளிவான தகவல் இந்த ஆய்வில் இல்லை என லண்டன் ஹஜுன் மற்றும் டிராபிக்கல் மருத்துவத்திற்கான கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவில் இருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை!
[Friday 2024-04-26 06:00]

இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. இத்தாலிய அரசு தலையிட்டதையடுத்து, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு வான்வழியாக கொண்டு செல்லப்பட்டது.



பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு?
[Friday 2024-04-26 06:00]

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.



பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேப்டன் டாம் மூர் வீடு விற்பனை!
[Friday 2024-04-26 06:00]

மீன் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான கேப்டன் டாம் மூர் வசித்த வீடு சுமார் £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் நடைபயிற்சி மூலம் நிதி திரட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன் Tom Moore, வசித்த வீடு £2.25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.



பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
[Thursday 2024-04-25 18:00]

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



"ஆயுதங்களை கைவிட தயார்" - இரண்டு நிபந்தனைகள் முன்வைத்த ஹமாஸ் படைகள்!
[Thursday 2024-04-25 18:00]

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று அந்த குழுவினரின் மூத்தல் அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டைய கால விசித்திர விலங்கை பார்த்த கனடிய குடும்பம்?
[Thursday 2024-04-25 18:00]

பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம்!
[Thursday 2024-04-25 18:00]

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவுஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



"தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்" - பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி!
[Thursday 2024-04-25 06:00]

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.



ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்: 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது!
[Thursday 2024-04-25 06:00]

ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? - 16 வயது சிறுவன் கைது!
[Thursday 2024-04-25 06:00]

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை கைது செய்துள்ளது.



இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 18:00]

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.



ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடொன்றிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.



காட்டுத்தீ அபாயத்தில் கனடா!
[Wednesday 2024-04-24 18:00]

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.



இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!
[Wednesday 2024-04-24 18:00]

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது.



கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்!
[Wednesday 2024-04-24 06:00]

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.



லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு!
[Wednesday 2024-04-24 06:00]

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.



லண்டன் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 06:00]

பிரித்தானியாவில் தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளை கும்பல் ஒன்று செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லண்டன் சவுத்ஹோல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பெறுமதியான தங்க நகைகளை பறி கொடுத்துள்ளார். குறித்த பெண்மணி அந்தப் பகுதியிலுள்ள மெற்றோ வங்கிக்கு சென்று அங்குள்ள பெட்டகத்தில் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து வந்துள்ளார்.



ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்!
[Tuesday 2024-04-23 18:00]

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.



சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது!
[Tuesday 2024-04-23 18:00]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல்!
[Tuesday 2024-04-23 18:00]

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அடிக்கடி இஸ்ரேலைத் தாக்குகிற நிலையில் இஸ்ரேலும் பதிலடி கொடுத்த வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறினார்.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா