Untitled Document
May 4, 2024 [GMT]
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்! - முதலமைச்சரின் எதிர்பார்ப்பு இது
[Sunday 2017-07-16 05:00]

கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் உள்ள ஒரு மாகாணமாகத் திகழ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி மற்றும் வீதி ஓட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில்நேற்று மாலை 7 மணியளலவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் உள்ள ஒரு மாகாணமாகத் திகழ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி மற்றும் வீதி ஓட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில்நேற்று மாலை 7 மணியளலவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

  

இன்றைய தோல்விகள் யாவும் நாளைய வெற்றிக்குப் படிகளாக அமைய வேண்டும். எனினும் விளையாட்டு நிகழ்வுகளில் எமது மாணவர்கள் வேகமாக முன்னேறிவரும் இன்றைய ஆரோக்கியமான நிலை தொடர வாழ்த்துகள். விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமன்றி கல்வியிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் கல்வியில் உயர்ச்சி நிலையை அடைவதுடன் பண்பட்ட ஒரு சமூகத்தையும் உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு பாடுபட வேண்டும். எதிர்பார்ப்புக்கு விஞ்சிய சாதனைகளை நாம் எமது இளைஞர் யுவதிகளிடம் இன்று எதிர் பார்க்கின்றோம்.

அத்துடன், நெஸ்லே நிறுவனத்தின் முழு ஆதரவில் இடம்பெறுகின்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் ஓட்டப் போட்டியின் தெரிவுப் போட்டிகள் வடமாகாணம், வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்காக வடமாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகளுக்கு இடையிலான நிகழ்வு முதல் முறையாக மிகச் சிறப்பாக நடைபெற்றிருப்பது எமக்கு மகிழ்வையும் மனத்திருப்தியையும் உண்டாக்குகின்றன.

நெஸ்லே நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2011ம் ஆண்டு வடமாகாணத்தில் சகல மட்டத்தினருக்கும் நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் 7500 போட்டியாளர்கள் வரை கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்திருந்தமை நினைவு கூரப்படுவதுடன், அந்த நிகழ்வானது ஆசியாவிலேயே சிறந்த சாதனையாக இதுவரை முறியடிக்கப்படாத ஒரு RECORD ஆக விளங்குவது இந் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

தூர ஓட்டமான மரதன் என்பதன் உத்தியோகபூர்வ ஓடுந் தூரம் 26 மைல் 385 யார்களாகும். வழமையாக இது தெருவில் ஓடும் ஓட்டப் பந்தயமாகவே இருந்து வருகின்றது. பீடிபீடேஸ் என்ற கிரேக்க போர் வீரர் மரதன் என்ற இடத்தில் நடந்த போரில் அதென்ஸ் நகர கிரேக்கர்கள் வென்று விட்டார்கள் என்ற செய்தியை ஓடி வந்து அந்த மக்களுக்குத் தெரிவித்துவிட்டு உடனே உயிர் நீத்ததாகவும் அந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் முகமாகவே மரதன் ஓட்டப் போட்டி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

1896 இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது மரதனும் ஒரு தூர ஓட்ட நிகழ்வாக இருந்தது. ஆனால் ஓடவேண்டிய தூரம் 26 மைல்கள் 385 யார்களாகத் தீர்மானிக்கப்பட்டது 1921 ஆம் ஆண்டிலேயே. இன்றைய மினி மரதன் ஓட்டப்போட்டியுடன் சேர்த்து இன்னோர் வீதி ஓட்ட நிகழ்வும் நடைபெற்றிருந்தது. மினி மரதன் 21கி.மீ தூரத்தையும் வீதி ஓட்டம் 5 கி.மீ தூரத்தையும் கொண்டதாக காணப்பட்டது.

இதில் கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் அனைவரதும் உடல்நிலை தகுதிகள் பற்றி யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று காலை வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் பெறப்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் அவர்களின் உடற்தகுதி நிலை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இன்றைய போட்டிகள் இங்கிருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை வீதியூடாக தட்டாதெரு, சுன்னாகம் வரை சென்று மீண்டும் அப்பாதையில் திரும்ப வந்து துரையப்பா விளையாட்டு அரங்கை வீரர்கள் அடைந்திருக்கின்றார்கள்.

சன நெரிசல் மிகுந்த இவ்வீதியூடாக இந்நிகழ்வை வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்ணான்டோ தொடக்கி வைத்தார். அத்துடன், 150க்கு மேற்பட்ட பொலிஸாரை வீதி ஒழுங்குப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்புக் கடமைகளுக்கு ஈடுபடுத்தினார்.மேலதிகமாக 03 நோயாளர் காவு வண்டிகள், வைத்திய உதவியாளர்கள், மற்றும் மோட்டார் சைக்கிள் உதவியாளர்கள் என மிகக் கூடுதலான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இத்தருணத்தில் நன்றியறிதலுடன் நினைவுகூரப்படுகின்றது.

இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படும் போது இந்த நிகழ்வுகளை சீராக ஒழுங்கு செய்வதோடு வீரர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுதல் மிக அத்தியவசியமாகும். அந்த வகையில் வடமாகாண பொலிஸ் துறையினர் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. எமது வீர வீராங்கனைகள் விளையாட்டு நிகழ்வுகளில் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்பன வடமாகாண பாடசாலை மாணவ மாணவியருக்கு இடையேயான போட்டிகளின் போதும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் கடந்தகாலம் போன்று 15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற பிரிவுகள் மாற்றப்பட்டு 12, 14, 16, 18, 20 என 5 பிரிவுகளாக தேசிய ரீதியில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பிரிவினருக்கான அடைவு மட்டங்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

ஓட்டப்பந்தயங்களில் எதிர்பார்த்த நேர அளவுகளை விடக் குறைவாகவும் மற்றும் களப் பந்தயங்களில் எதிர்பார்த்த உயர, தூர அளவுகளை விட கூடுதலாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு அவர்களுக்கான சான்றிதழ்களுடன் மேலதிகமாக வர்ணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான வர்ணச் சான்றிதழ்கள் 200 வரை போதுமானதென திணைக்களம் தீர்மானித்த போதும் போட்டியின் போது 350 சான்றிதழ்கள் வரை அவசர அவசரமாக அச்சேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன்மூலம் எமது வீர வீராங்கனைகள் எமது எதிர்பார்ப்பை விஞ்சிவிட்டார்கள் என்ற உண்மை தெரிய வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு!
[Saturday 2024-05-04 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.



தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த கலந்துரையாடல் தொடர்கிறது!
[Saturday 2024-05-04 16:00]

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது அரசாங்கம்!
[Saturday 2024-05-04 16:00]

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.



15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
[Saturday 2024-05-04 16:00]

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்ணமும் போட்டி?
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.



ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்தார்!
[Saturday 2024-05-04 15:00]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.



வெற்றிபெறும் வேட்பாளரையே மொட்டு முன்னிறுத்தும்!
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அதிபரை பல்லக்கில் சுமந்த மாணவர்களின் பெற்றோர்! Top News
[Saturday 2024-05-04 15:00]

வவுனியா - புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் குறித்த பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.



முழங்காவிலில் கடற்படைச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!
[Saturday 2024-05-04 15:00]

முழங்காவில் கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.



ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
[Saturday 2024-05-04 15:00]

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்! - தருணம் பார்த்து காத்திருக்கிறார்.
[Saturday 2024-05-04 05:00]

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.



13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றி சஜித் எம்மை அழைத்துக் கூற வேண்டும்!
[Saturday 2024-05-04 05:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால், அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! Top News
[Saturday 2024-05-04 05:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.



புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த சீனா அழுத்தம்!
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.



திருகோணமலையில் இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.



10 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்காத பாடங்களுக்கு அனுமதி அட்டை!
[Saturday 2024-05-04 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான தனிப்பட்ட பரீட்சார்த்திகள் , தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.



சிஐடியிடம் மைத்திரி நேற்றும் வாக்குமூலம்!
[Saturday 2024-05-04 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஐசுடன் இருவர் கைது!
[Saturday 2024-05-04 05:00]

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2024-05-04 05:00]

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா