Untitled Document
April 26, 2024 [GMT]
கறுப்புயூலை நினைவுகளுடன் தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[Sunday 2017-07-23 18:00]

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இது கறுப்புயூலை இனப்படுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது கறுப்புயூலை இனப்படுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :

  

1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதிவார நாட்களில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த இனவாதப்பூதம் நடாத்திய இனஅழிப்பு நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கில் பெறுமதி கொண்ட தமிழர் வர்த்தக நிறுவனங்கள், குடிமனைகள், சொத்துக்கள் இனவெறிக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டு நாசம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் பாதுகாப்புத்தேடி தமிழர் தாயகப்பிரதேசங்களை நோக்கி ஓடி வந்தனர்.

தமிழினஅழிப்புக் கொடுமையின் உச்சக்கட்டமாக வெலிக்கடைச்சிறைச்சாலையில் வைத்து தங்கத்துரை, குட்டிமணி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மலரும் தமிழீழத்தை கண்தானம் செய்யப்படும் தனது கண்களின் ஊடாகப்; பார்ப்பேன் என நீதிமன்றத்தில் முழங்கிய தோழர் குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்து குரூரக் களியாட்டத்தை சிங்களம் ஆடி மகிழ்ந்தது. நாகரீக உலகம் வெட்கத்தால் தலைகுனிந்தது.

சிங்களம் ஆடிய இந்த இனவெறியாட்டம் தற்செயலாக நடந்தவொன்றல்ல. சில காடையர்களால் மட்டும் முன்னெடுக்ப்பட்ட சட்டத்தை மீறிய குற்றவியல் செயற்பாடுகளுமல்ல. இது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழினஅழிப்பு. சிங்கள ஆட்சியாளர்களின் தீர்மானத்தின் பேரில், அவர்களின் ஒத்துழைப்புடன் நடாத்தி முடிக்கப்பட்ட பெருங் கொலைக்களம்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களை அரசியல், பொருளாதார, சமூகரீதியில் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்த சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகள் மீதான ஆயுதம் தாங்கிய போரே கறுப்புயூலை இனஅழிப்பு நடவடிக்கை. இத் தமிழின அழிப்பினை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை பல தமிழ் மக்களைப் பாதுகாத்த நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களையும் நாம் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

இவ்வினவழிப்பு நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதுவரை இதற்குக் காரணமானவர்கள் எவரும் விசாரணைக்கோ தண்டனைக்கோ உள்ளாக்கப்படவில்லை. கறுப்புயூலை தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதுவர் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் எவருமே தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அனைத்துலக சமூகத்தின் முன் அளித்த வாக்குறுதி முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நினைவு படுத்துகிறது.

அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவர்களை சிறிலங்கா அரசு காலம் காலமாக ஏமாற்றி வருகிறது என்று எம்மில் சிலர் நினைப்பதுண்டு. சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏமாறும் அளவுக்கு அனைத்துலக சமூகம் வாயில் சூப்பியை வைத்திருக்கும் சிறுகுழந்தையல்ல என்பதனை நாம் கருத்திற் கொண்டாக வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கறுப்புயூலைக் குற்றத்தை அனைத்துலக சமூகம் கடுமையாகத் தண்டித்திருந்தால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெறுவதற்கான நிலைமைகள் அரிதாக இருந்திருக்கலாம். நட்பு அரசு என்றும் அரசுகளுக்கிடையிலான நலன்கள் என்றும் போடப்படும் கணக்குகள் ஊடாக சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக அரசுகள் காட்டிவரும் மெத்தனப் போக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் எந்தவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய போதிய அழுத்தத்தை வழங்குவதற்குத் தடையாகவே இருந்து வருகிறது. இதனை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதய ஆட்சியாளர்கள் கறுப்புயூலையின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான். முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிப்பின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களே. இன்றுவரை தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றத்தை உணர்ந்து மனமுருகி மன்னிப்போ வருத்தமோ இவர்கள் கேட்டதில்லை. இத்தகைய ஆட்சியாளர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது அரசியற்தீர்வைக் காணவோ முடியப்போவதுமில்லை என்பதே உண்மை.

எந்தவொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் இ;ருக்கும் என்பது இயற்கையின் விதி. கறுப்புயூலை இனவழிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியடையவும் அனைத்துலகமயப்படவும் வழிவகுத்தது. இதேபோல் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுக்கப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சுதந்திர வாழ்வை எட்டும்வரை உரிமைப் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதும் இயங்குநிலை வழிப்பட்ட உண்மையாக அமைகிறது.

கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை நினைவேந்தும் இத் தருணத்தில் இவ் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைசாய்த்து வணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு பிரதமர் வி.உருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

  
   Bookmark and Share Seithy.com



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.



நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?
[Friday 2024-04-26 08:00]

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.



முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்!
[Friday 2024-04-26 08:00]

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.



வடக்கு ஆளுநர் செயலகத்தில் அடிதடி!
[Friday 2024-04-26 08:00]

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச சூழ்ச்சி இல்லை!
[Friday 2024-04-26 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.



பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்!
[Friday 2024-04-26 08:00]

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை!
[Friday 2024-04-26 08:00]

நல்லூர் ஆலய சூழல், துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.



பொருளாதாரம் இலக்கைத் தாண்டி 6 வீதம் மேலதிக வளர்ச்சி!
[Friday 2024-04-26 08:00]

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



தாக்குதல்தாரிகளும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்பட்டனரா?
[Friday 2024-04-26 08:00]

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? எனக்கேள்வி எழுப்பிய ஜே .வி.பி தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.



சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க!
[Friday 2024-04-26 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.



வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் இளைஞன் கைது!
[Friday 2024-04-26 08:00]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக வியாழக்கிழமைகாலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா