Untitled Document
April 30, 2024 [GMT]
வடக்கின் வர்த்தகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்! - விக்னேஸ்வரன்
[Friday 2017-08-11 18:00]

வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில்,

வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில்,   

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

வருடா வருடம் இவ்வாறான கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதால் மறைந்துள்ள முயற்சியாளர்களை அடையாளங் காணக்கூடியதாக இருக்கின்றது. தரமான உற்பத்திகளை பயன்பெறுநர்களுக்கு அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. வியாபார ஆலோசனைகள் மற்றும் துணைச் சேவைகளை வழங்குவதன் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புக்களை வளப்படுத்திக் கொள்வதற்கும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்புக்களை அறிந்து கொள்வதற்கும் அவை உறுதுணையாக இருந்து வருகின்றன.

வர்த்தகம் என்பது வெறுமனே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கப் பெறுகின்ற பொருட்களை கொள்வனவு செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வது மட்டுமல்ல. மாறாக எமது பகுதிகளில் காணப்படுகின்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதும் அவற்றைச் சந்தைப் படுத்துவதும் வர்த்தகத் துறையின் மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆவன.

நாம் மேற்கொள்ள இருக்கின்ற தொழில் முயற்சிக்கு போதிய சந்தை வாய்ப்புக்கள் இருக்கின்றனவா, தொழில் முயற்சிக்கான மூலப்பொருட்களை தடையின்றி தொடர்சியாக பெற்றுக்கொள்ள முடியுமா, உற்பத்திச் செலவீனம் எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா, அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் கூடுதல் சந்தை வாய்ப்பை பெறக்கூடிய வகையில் தரமானதாக இருப்பனவா போன்ற பல விடயங்களை தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னரே எம்மால் மதிப்பீடு செய்து கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது எமது உற்பத்திகள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு அமையுமா என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.

இவையனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துகின்ற நிகழ்வு மற்றைய எல்லா நடவடிக்கைகளையும் விட முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு உற்பத்திப் பொருளை அல்லது உபகரணம் ஒன்றை கொள்வனவு செய்ய வருகின்ற வாடிக்கையாளர் அது பற்றிய பல மேலதிக தரவுகளை அறிந்து கொள்ள விரும்புவர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரை திருப்தியடையச் செய்யும் வகையில் நீங்கள் வழங்குகின்ற தகவல்கள் உங்கள் விற்பனை நிலையத்தின்பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும். மாறாக உங்களுடைய பொருட்கள் எவ்வளவு தரம் மிக்கதாக இருந்தபோதும் நீங்கள் வாடிக்கையாளரை திருப்திப் படுத்தாது விடின் உங்கள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவன.

மிகவும் வளர்ச்சி அடைந்த முன்னணி வகிக்கின்ற வர்த்தக நிறுவனங்களின் தொழில் முயற்சியில் வாடிக்கையாளரை திருப்திப் படுத்துதல் என்ற விடயம் மிகக் கவனமாக ஆராயப்பட்டிருக்கும். இவ்வாறான நிறுவனங்களில் கடமை புரிபவர்கள் வேறு எந்தத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்தத் தவறின் அவரின் சேவைகள் எதுவித விளக்கமுமின்றி நிறைவுறுத்தப்படும். வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு ஒப்பானதாக தரமுயர்த்த நீங்கள் அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாகவே ஒரு கருத்து மேலோங்கி இருக்கின்றது. அதாவது வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூடக் கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். வளர்ச்சியென்பது ஓர் இரவில் ஏற்படுவதல்ல. என்ன தொழிலாக இருந்தாலும் உறுதியானதும் படிப்படியானதுமான வளர்ச்சியே நிரந்தரமானது. வடபகுதி மக்கள் எந்தவொரு காரியத்தில் இறங்குகின்றபோதும் அல்லது எந்தவொரு பொருளை கொள்வனவு செய்கின்ற போதும் அதனைக் கவனமாக ஆராய்ந்து திருப்தி ஏற்படும் பட்சத்திலேயே அதனைச் செய்வார்கள் அல்லது கொள்வனவு செய்வார்கள்.

அவ்வாறாக ஒரு பொருளின் தரம் தீர்மானிக்கப்பட்டு விட்டால் அதன் பின்னர் அதன் விற்பனைக்கு உற்பத்தியாளர்கள் எதுவிதமான விளம்பரங்களும் மேற்கொள்ளத் தேவையில்லை. வாடிக்கையாளர்களே உங்களுக்காக விளம்பரங்களை மேற்கொள்வார்கள். இற்றைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் தயாரிப்புக்களே முதன்மையானவை ஏனைய நாடுகளின் தயாரிப்புக்கள் தரம் குறைந்தவை என்ற கருத்து இருந்து வந்தது. பின்னர் உற்பத்திச் செலவீனம் அதிகரிக்க ஜப்பான் நாட்டுத் தயாரிப்புக்கள் முதலிடம் பெற்றன.

இன்னும் சில காலம் செல்ல தற்போது காணப்படுவது போன்று சீன உற்பத்திகள் மேலோங்கி இருக்கின்றன. வருங்காலத்தில் இந்தியாவின் தயாரிப்புக்கள் முதலிடத்தைப் பெற்றாலும் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது போன்றே எமது உற்பத்திகளும் இன்றைய சந்தை நிலவரங்களுக்கு ஏற்புடையதாக அதிக தேவையுடையதாகவும் கட்டுப்படியானதாகவும் அமைகின்றபோது வர்த்தகம் மேலோங்கும். உதாரணமாக பொலித்தீன் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய உற்பத்திகளில் ஈடுபடுவதன் மூலம் விற்பனைகளைப் பெருக்கமுடியும்.

வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய சில விடயங்கள் உண்டு. முதலாவதாக உங்கள் முயற்சியில் முழுமனதாக நீங்கள் ஈடுபடப்பழகிக்கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் உங்கள் சிந்தனைகளையும் குறிக்கோள்களையும் முன்னிலைப்படுத்தி அவை நிச்சயம் நடந்தேற அல்லும் பகலும் உழைக்க வேண்டும். சிந்தனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் வர்த்தகம் வளரும். வெறும் சிந்தனைகளாக மட்டும் அவை இருந்தால் அவை ஏட்டுச்சுரக்காய்களாய் ஆகிவிடுவன.

யாருக்கு எந்தப்பொருளை வழங்க வேண்டும் அல்லது வழங்கலாம் என்று முதலில் தீர்மானித்து, நீங்கள் எதைச்செய்தால் அவர்கள் உங்கள் பொருட்களை மனமுவந்து வாங்குவார்கள் என்று கணிப்பதே வர்த்தகர்களின் திறனாகவிருக்க வேண்டும். இவற்றை எங்கள் வர்த்தகர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனினும் சொல்லவேண்டும் என்று பட்டதால் சொன்னேன் என மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



டிரான் அலசை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! - சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி.
[Tuesday 2024-04-30 05:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.



வன்னியில் மின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி!
[Tuesday 2024-04-30 05:00]

முல்லைத்தீவு மாவட்டம் ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



மேதினப் பேரணிகளில் ட்ரோன்களுக்கு தடை!
[Tuesday 2024-04-30 05:00]

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி களமிறங்குவது கேலிக்கூத்து!
[Tuesday 2024-04-30 05:00]

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



புலம்பெயர் தமிழர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உருவானது புதிய கட்சி!
[Tuesday 2024-04-30 05:00]

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார்.



போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளை அம்பலப்படுத்த நடவடிக்கை!
[Tuesday 2024-04-30 05:00]

யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



ரணிலுடன் மைத்திரி இரகசிய சந்திப்பு!
[Tuesday 2024-04-30 05:00]

கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.



மஹிந்தவைச் சந்தித்தார் சீனத் தூதுவர்!
[Tuesday 2024-04-30 05:00]

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை வீரகெட்டியவில் உள்ள மெதமுலான இல்லத்தில் நடைபெற்றது.



மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வர்த்தகர்களுக்கு விற்ற தமிழ் எம்.பி!
[Tuesday 2024-04-30 05:00]

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரண்டு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று திகன பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகின்றது.



மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கைது!
[Tuesday 2024-04-30 05:00]

வவுனியா, ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.



முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் மிக உயரமான மனிதன்! Top News
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.



வேலையில்லா பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகம் முன் போராட்டம்! Top News
[Monday 2024-04-29 16:00]

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



கிளிநொச்சி, மட்டக்களப்பில் தமிழரசின் மே தின கூட்டங்கள்!
[Monday 2024-04-29 16:00]

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டங்கள் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.



மைத்திரியை முன்னிறுத்தி வரலாற்றுத் தவறு செய்து விட்டேன்!
[Monday 2024-04-29 16:00]

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் செய்த வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் கனடாவில் காலமானார்!
[Monday 2024-04-29 16:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் உடல்நலக் குறைவு காரணமாக கனடா - டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.



17 வயது சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல முயன்ற பெண்கள் கைது!
[Monday 2024-04-29 16:00]

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய இளைஞனை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல முயன்ற இரண்டு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது .



நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.



யாழ். சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
[Monday 2024-04-29 16:00]

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து , விளக்கமறியல் கைதிகள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
[Monday 2024-04-29 15:00]

வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
[Monday 2024-04-29 05:00]

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா