Untitled Document
May 4, 2024 [GMT]
மஹிந்தவுக்கு ஆதரவான வாக்குகள் சரிவு!
[Tuesday 2018-02-13 07:00]

2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

  

இதேவேளை, வாக்காளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காக நம்பிக்கைக்குரிய ஜனநாயக அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படுவோமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

நாட்டின் 51 சதவீதமான மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியன்று எமது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகளுக்காக அவருக்கு வாக்களித்தனர். அது தான் நாட்டில் அதுவரை இருந்து வந்த சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த காலப்பகுதி. இலங்கையில் ஜனநாயகத்தை மீள கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்தவர்கள், தனி ஒரு குடும்பம் மற்றும் அவர்களது விசுவாசிகளை மட்டுமன்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் என்ற உறுதிப்பாட்டுக்கு வந்தனர்.

இலங்கையர்கள், இலங்கையின் சட்டத்தாலன்றி பயத்தால் நிருவகிக்கப்பட முடியாதென்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி,சுதந்திரக் கட்சியின் பல பலசாலிகள், மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 30 அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் அன்றைய தினம், ஒன்றாக கூட்டு சேர்ந்தன.

அரச சேவையில் சுதந்திரத்தை நிலைநாட்டவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், எமது சட்ட முறைமையிலுள்ள சட்ட கட்டுப்பாட்டுக்கேற்ப அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பேணவும் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். v திறைசேரியின் கஜானாவை திருடியவர்களை நீதிக்கு முன் கொண்டு நிறுத்துவதாக நாம் வாக்குறுதியளித்தோம். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இரத்தத்திலேயே தைரியம் நிறைந்த ஊடகவியலாளர்களின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கான தாகத்தை தீர்த்து வைப்பதாக நாம் வாக்குறுதியளித்தோம். எல்லாவற்றையும் விட, எமக்கு முன்னர் இருந்த பாரிய ஊழல் நிறைந்த தசாப்தத்திலிருந்து உங்களை விடுவிப்பதாக நாங்கள் வாக்குறுதியளித்தோம்.

இன்று, நாம் செய்திருப்பது போதுமானதாக இல்லையென மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக பாழடைந்த நீதி முறைமையில் சுதந்திரம் மற்றும் விரைவுத்தன்மையை ஏற்படுத்தவும், பெருமளவில் இடம்பெற்று வரும் சிக்கல் நிறைந்த குற்றச் செயல்கள், கொலைகள் மற்றும் ஏமாற்று செயற்பாடுகள் தொடர்பில் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சூழ்நிலையை பொலிஸாரிடம் வலுவூட்டுவதற்காகவும் நாம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். இருந்த போதிலும், குற்றச் செயலொன்று இடம்பெற்றிருக்கலாம் என்ற சமிக்ஞை வெளியானவுடனேயே அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டுமென்பதையும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களிடையே மிகவும் விறுவிறுப்புடன் குற்றச்செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும் நாட்டின் வரலாற்றில் எமது அரசாங்கமே முதற்தடவையாக ஊக்குவித்தது.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள இச்செய்தியானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகவும் ஆழமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியை மிகப் பரந்தளவில் முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது ஜனநாயக கதையின் இந்த முதல் அத்தியாயத்தை நாம் தொடங்கும்போது, கடந்த சனிக்கிழமை நாம் கண்ட இரண்டு குறிப்பிடத்தக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை பெருமை கொள்ள முடியும்.

அதில் முதலாவது தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் சேவையின் கீழ், தேர்தலொன்றை நடத்தியமையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வளங்கள் மற்றும் அரச ஊடகங்களை அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தாமல் விட்டதில்லை. இந்த சுயாதீன அமைப்புக்களின் கீழ் இலங்கை, தேர்தலை குழப்பக்கூடிய வகையிலான ஆகக்குறைந்த ஊழல்,மிரட்டல் மற்றும் வன்முறையைக் கொண்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பெற்றுக்கொண்ட 5.77 மில்லியன் வாக்குகள்(47.6%) கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளாக (44.7%) குறைவடைந்துள்ளமை இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை எமக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்குமாக சேர்த்து வாக்களித்த 46 சதவீத மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை.மாறாக ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்த்து கடந்த சனிக்கிழமை வாக்குச் சாவடிகளை நோக்கிச் சென்ற நாட்டின் 6.1 மில்லியன் பிரஜைகளையும் (55.3%) பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

தாய் நாட்டை தரம் உயர்த்துவதற்காகவும் இலங்கை மீண்டும் எச்சந்தர்ப்பத்திலும் வாளால் ஆட்சி செய்யப்பட மாட்டாது என்பதனை உறுதி செய்வதற்காகவும் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அரசியல் சக்திகளுடன் சேர்ந்து எமது வாக்காளர்களின் நம்பிக்கையை பலப்படுத்துவதே எமது கடமையாகும்.அது தான் எமது தேவை என்பதனுடன் அதிலிருந்து நாம் தவற மாட்டோம். எமது ஜனநாயகமும் எமது குடியரசும் அதிலேயே தங்கியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு!
[Saturday 2024-05-04 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.



தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த கலந்துரையாடல் தொடர்கிறது!
[Saturday 2024-05-04 16:00]

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது அரசாங்கம்!
[Saturday 2024-05-04 16:00]

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.



15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
[Saturday 2024-05-04 16:00]

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்ணமும் போட்டி?
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.



ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்தார்!
[Saturday 2024-05-04 15:00]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.



வெற்றிபெறும் வேட்பாளரையே மொட்டு முன்னிறுத்தும்!
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அதிபரை பல்லக்கில் சுமந்த மாணவர்களின் பெற்றோர்! Top News
[Saturday 2024-05-04 15:00]

வவுனியா - புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் குறித்த பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.



முழங்காவிலில் கடற்படைச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!
[Saturday 2024-05-04 15:00]

முழங்காவில் கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.



ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
[Saturday 2024-05-04 15:00]

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்! - தருணம் பார்த்து காத்திருக்கிறார்.
[Saturday 2024-05-04 05:00]

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.



13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றி சஜித் எம்மை அழைத்துக் கூற வேண்டும்!
[Saturday 2024-05-04 05:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால், அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! Top News
[Saturday 2024-05-04 05:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.



புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த சீனா அழுத்தம்!
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.



திருகோணமலையில் இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.



10 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்காத பாடங்களுக்கு அனுமதி அட்டை!
[Saturday 2024-05-04 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான தனிப்பட்ட பரீட்சார்த்திகள் , தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.



சிஐடியிடம் மைத்திரி நேற்றும் வாக்குமூலம்!
[Saturday 2024-05-04 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஐசுடன் இருவர் கைது!
[Saturday 2024-05-04 05:00]

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2024-05-04 05:00]

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா