Untitled Document
May 3, 2024 [GMT]
போதைக்காக பெட்ரோல் பெவிக்கால் பயன்படுத்தும் மாணவர்கள்!
[Sunday 2018-03-25 08:00]

இந்தியாவில் போதைப் பொருள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக தினமும் 10 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த இரு  வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.கேரளா சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப்  பொருள் பயன்படுத்துபவர்களில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அடுத்த படியாக கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் போதைப் பொருள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக தினமும் 10 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த இரு வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.கேரளா சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அடுத்த படியாக கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

  

இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருவனந்தபுரத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. கேரளாவில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

பள்ளி மாணவர்களில் 28.7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களில் தொடங்கி கஞ்சா, பிரவுன் சுகர் வரை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே தான் போதைப் பொருள் பழக்கம் அதிக அளவில் உள்ளது.14க்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களில் 44.4 சதவீதம் பேருக்கு போதைப் பழக்கம் உள்ளது. 8ம் வகுப்பு படிப்பவர்களில் 23.1 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். 85.8 சதவீதம் மாணவர்களுக்கும் போதைப் பொருளால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக ஜாலியாக தொடங்கும் இந்த பழக்கத்திற்கு மாணவர்கள் நாளடைவில் முழு அடிமையாகி விடுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் மிக எளிதில் கிடைக்கிறது. மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஏஜெண்டுகள் மூலம் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். மாணவர்களும் இதற்கு ஏஜெண்டாக செயல்பட்டு வருகின்றனர்.போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் பணத்திற்காக தங்களது சொந்த வீடுகளில் திருடுவதும் உண்டு. 41.3 சதவீதம் மாணவர்கள் போதைப் பொருள் வாங்குவதற்காக தங்களது வீடுகளில் திருடுகின்றனர்.போதைப் பொருள் என்றால் பலருக்கும் கஞ்சா, பிரவுன் சுகர் போன்றவை தான் நினைவுக்கு வரும். ஆனால் போதைக்காக பெட்ரோல், பெவிக்கால், ஒயிட்னர் போன்றவற்றை பயன்படுத்தும் கொடுமையும் உண்டு. 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 23.1 சதவீதம் பேரும், 9ம் வகுப்பு படிப்பவர்களில் 22.4 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு படிப்பவர்களில் 16.2 சதவீதம் பேரும், பிளஸ் 1 படிப்பவர்களில் 19.4 சதவீதம் பேரும், பிளஸ் டூ படிப்பவர்களில் 18.9 சதவீதம் பேரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.

மாணவர்களில் 40.8 சதவீதம் கள்ளுக்கும், 25.4 சதவீதம் பேர் கஞ்சாவுக்கும், சாராயத்துக்கும், மதுவுக்கு 28.9 சதவீதம் பேரும், பிரவுன் சுகருக்கு 2 சதவீதமும், பான்மசாலாவுக்கு 34.6 சதவீதமும், சிகரெட்டுக்கு 5.3 சதவீதம் பேரும் அடிமையாகி உள்ளனர். 22.7 சதவீதம் நண்பர்கள் மூலம் தான் மாணவர்களுக்கு போதைப் பொருள் கிடைக்கிறது. பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே அரசும், காவல் துறையும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடாவிட்டால் வரும் தலைமுறைக்கு பெரும் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

* தேசிய குற்ற ஆவண காப்பக கணக்கின்படி கடந்த 2014ம் ஆண்டில் போதைப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3647. * மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமாக 1372 பேர் தற்கொலை செய்துள்ளனர். * தமிழ்நாட்டுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 552. * இதற்கு அடுத்ததாக கேரளாவில் 475 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



கோவாக்சின் பாதுகாப்பானது: பயோடெக் நிறுவனம் விளக்கம்!
[Friday 2024-05-03 06:00]

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!
[Friday 2024-05-03 06:00]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்!
[Friday 2024-05-03 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-05-02 18:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.



சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குக் கொடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சோகம்: மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!
[Thursday 2024-05-02 18:00]

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.



சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற கொடூரன்!
[Thursday 2024-05-02 18:00]

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.



நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்: உறுதி செய்த இஸ்ரோ!
[Thursday 2024-05-02 06:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.



ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்: தகிக்கும் டெல்லி!
[Wednesday 2024-05-01 16:00]

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



திட்டவட்டமாக மறுத்த கர்நாடக அரசு: உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு!
[Wednesday 2024-05-01 16:00]

காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?
[Wednesday 2024-05-01 16:00]

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.



வரதட்சணை கொடுமை: விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை!
[Wednesday 2024-05-01 16:00]

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36) கம்ப்யூட்டர் என்ஜினீரிங் படித்தவர். இவர், கடந்த 2016 -ம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.



2,976 ஆபாச வீடியோ: பிரஜ்வல்லின் அந்தரங்க பென்டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
[Wednesday 2024-05-01 07:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.



மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு: எங்கு தெரியுமா?
[Wednesday 2024-05-01 07:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



ஏற்காடு பேருந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
[Wednesday 2024-05-01 07:00]

ஏற்காடு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



ஆபாச வீடியோ விவகாரம்: “நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை” - அமித்ஷா!
[Tuesday 2024-04-30 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.



நிர்மலா தேவிக்கு தண்டனை அறிவிப்பு!
[Tuesday 2024-04-30 18:00]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.



செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Tuesday 2024-04-30 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா