Untitled Document
May 3, 2024 [GMT]
அவளை அங்க கொன்னுட்டாங்க: - ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்
[Monday 2018-03-26 18:00]

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ்.  உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ். உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

  

அதில், `திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக மணமகள் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி. அடுத்த வரியில் `கொல்லப்பட்டவரின் பெயர் ஆதிரா ராஜன்' எனக் கூறப்பட, திருமண வீட்டில் இருந்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி. `மணப்பெண் ஆதிரா, குத்திக் கொலைசெய்யப்பட்டார். தந்தை ராஜனே ஆதிராவைக் கொன்றார்' என்ற கொடூரச் செய்தியை மாப்பிள்ளை பிரிஜேஷிடம் உறவினர்கள் பதறியபடி கூறினர். அலறித் துடித்த பிரிஜேஷ், சம்பவ இடத்துக்கு ஓடினார். ரத்த வெள்ளத்தில் ஆதிரா உயிரற்றுக் கிடக்க, பிரிஜேஷின் கல்யாணக் கனவு கலைந்தது. கடந்த வாரத்தில் கேரளாவை அதிரவைத்த ஆணவக்கொலை இது.

ராணுவ வீரரான பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் மூன்று ஆண்டு காதல். கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஆதிரா டெக்னீஷியனாகப் பணிபுரிந்தார். பிரிஜேஷின் தாயார் வள்ளிக்கு, சிறுநீரகக் கோளாறு இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மெட்ராஸ் இன்ஜினீயர் பிரிவில் பணியில் இருந்த பிரிஜேஷ், அவரது தாயாரை ஆதிரா பணிபுரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிரிஜேஷின் தாயாரை ஆதிரா அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. மார்ச் 23-ம் தேதி பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது. திருமணத்துக்காக 45 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரிஜேஷ் சொந்த ஊரான கொயிலாண்டிக்கு வந்தார். பிரிஜேஷ், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிரா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாயார் சுனிதா, ஆதிராவுக்கு ஆதரவாக இருந்தாலும் தந்தை ராஜனை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ``பிரிஜேஷைத் திருமணம் செய்தால் இருவரையும் கொலை செய்துவிடுவேன்'' என்று ஆதிராவை அடிக்கடி மிரட்டிவந்தார் ராஜன். ஆதிராவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

ராஜனின் மிரட்டல் குறித்து போலீஸுக்குத் தகவல் அளித்தார் பிரிஜேஷ். மணமகன் ராணுவ வீரர் என்பதால், போலீஸ் ஆதரவும் பிரிஜேஷுக்கு இருந்தது. உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மணப்பெண்ணின் தந்தை ராஜனை அழைத்து, ``திருமணத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது. இருவரும் மேஜர். அதனால், அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்ய இருவருக்கும் உரிமை உண்டு. நீங்கள் தவறாக ஏதாவது செய்தால், உங்களை கைதுசெய்யவேண்டியதிருக்கும்'' என்று எச்சரித்தனர். இருதரப்பிலும் சமாதானம் பேசப்பட்டது. ஆதிராவின் பெற்றோரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். முதலில் பிரிஜேஷ் வீட்டில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. ஆதிராவுக்கோ தன் சொந்த ஊரான அரிக்கூடு கிராமத்தில் திருமணம் நடைபெறவேண்டும் என விருப்பம். ஆதிராவின் பெற்றோரும் சமாதானமடைந்ததால் மணமகளின் சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. மணப்பெண்ணின் தந்தை ராஜனிடம், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததாக எழுத்துபூர்வமாகவும் போலீஸார் எழுதி வாங்கினர். `அப்பாடா பிரச்னை முடிந்தது!' என்று ஆதிரா சந்தோஷக் கனவுகள் சூழ, பெற்றோருடன் வீட்டுக்குச் சென்றார்.

ஆனால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, மகளை மீண்டும் `டார்ச்சர்' செய்ய ஆரம்பித்தார் ராஜன். `எந்தக் காரணத்தைக்கொண்டும் இந்தத் திருமணம் நடக்காது' என்றவாரே... ஆதிராவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினார். ராஜன் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள், வெளியே உள்ளவர்களுக்கும் தெரியவில்லை.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் 22-ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்த ராஜன், மகளுடன் தகராறில் ஈடுபட்டார். ஆதிராவோ தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கோபத்தின் உச்சிக்குச் சென்ற ராஜன், ``நீ உயிரோடு இருந்தால்தானே இந்தக் கல்யாணம் நடக்கும்...'' என்று கூச்சலிட்டிருக்கிறார். மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் குத்தியிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே ஓடி, பக்கத்து வீட்டுக்குள் புகுந்தார் ஆதிரா. ஆத்திரம் தணியாத ராஜன், அங்கும் சென்று ஆதிராவை மீண்டும் மீண்டும் குத்த, ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆதிரா, உயிர் பிரிந்தார். காதலித்த மகளை ஆணவக்கொலை செய்த ராஜனும் காதல் திருமணம் செய்தவர் என்பதுதான் இதில் கொடுமையிலும் கொடுமை.

கல்யாணக் கனவுடன் கிராமத்துக்கு வந்த பிரிஜேஷ், இப்போது செய்வதறியாது திரிகிறார். காதல் மனைவிக்காக வாங்கிய தாலியையும் பட்டுப்புடவையையும் கட்டிக்கொண்டு கதறும் அவரைத் தேற்ற முடியாமல் நண்பர்கள் தவிக்கின்றனர். ``என்னைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக் கூடாது. தலித் என்றால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லையா?'' என்று பரிதாபத்துடன் கேட்கும் அவருக்குச் சரியான பதில் சொல்ல யாரும் இல்லை.

  
   Bookmark and Share Seithy.com



கோவாக்சின் பாதுகாப்பானது: பயோடெக் நிறுவனம் விளக்கம்!
[Friday 2024-05-03 06:00]

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!
[Friday 2024-05-03 06:00]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்!
[Friday 2024-05-03 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-05-02 18:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.



சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குக் கொடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சோகம்: மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!
[Thursday 2024-05-02 18:00]

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.



சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற கொடூரன்!
[Thursday 2024-05-02 18:00]

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.



நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்: உறுதி செய்த இஸ்ரோ!
[Thursday 2024-05-02 06:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.



ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்: தகிக்கும் டெல்லி!
[Wednesday 2024-05-01 16:00]

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



திட்டவட்டமாக மறுத்த கர்நாடக அரசு: உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு!
[Wednesday 2024-05-01 16:00]

காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?
[Wednesday 2024-05-01 16:00]

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.



வரதட்சணை கொடுமை: விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை!
[Wednesday 2024-05-01 16:00]

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36) கம்ப்யூட்டர் என்ஜினீரிங் படித்தவர். இவர், கடந்த 2016 -ம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.



2,976 ஆபாச வீடியோ: பிரஜ்வல்லின் அந்தரங்க பென்டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
[Wednesday 2024-05-01 07:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.



மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு: எங்கு தெரியுமா?
[Wednesday 2024-05-01 07:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



ஏற்காடு பேருந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
[Wednesday 2024-05-01 07:00]

ஏற்காடு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



ஆபாச வீடியோ விவகாரம்: “நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை” - அமித்ஷா!
[Tuesday 2024-04-30 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.



நிர்மலா தேவிக்கு தண்டனை அறிவிப்பு!
[Tuesday 2024-04-30 18:00]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.



செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Tuesday 2024-04-30 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.


 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா