Untitled Document
May 13, 2024 [GMT]
மனைவி குடும்பத்தாரின் கொடுஞ் செயல்: - உயிரை விட்ட அப்பாவி கணவன்
[Friday 2018-05-18 18:00]

	இந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

	புனேவை சேர்ந்தவர் ரவுட், இவர் மனைவி ராஜஸ்ரீ, தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சிறியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புனேவை சேர்ந்தவர் ரவுட், இவர் மனைவி ராஜஸ்ரீ, தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சிறியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.

  

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு யூலை 11-ஆம் திகதி ராஜஸ்ரீ உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜஸ்ரீ குடும்பத்தார் ரவுட் தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்தார் என பொலிசில் புகார் அளித்தார்கள். இதுதொடர்பாக பொலிசார் ரவுட் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வந்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ரவுட் அருகிலிருந்த மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையில் நீதிமன்ற தீர்ப்பில் ராஜஸ்ரீ தற்கொலை வழக்கில் ரவுட் மீது தவறில்லை என கூறப்பட்டு நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது. இதுகுறித்து பேசிய ரவுட்டின் குடும்பத்தார், ராஜஸ்ரீ தற்கொலைக்கு ரவுட் காரணமில்லை, ஆனால் பொலிசாரும் ராஜஸ்ரீயின் குடும்பத்தாரும் வேண்டுமென்றே ரவுட்டுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



'உயிரா... பயிரா...' - வீட்டில் வீசப்பட்ட துண்டுச்சீட்டு; வயலில் அரங்கேறிய கொடூரம்!
[Monday 2024-05-13 18:00]

திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'உயிரா... பயிரா... இது தொடரும் என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூரில் வசித்து வருபவர் கலைவாணன். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் ஆவார்.



வாரணாசி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் போர்க்கொடி!
[Monday 2024-05-13 18:00]

வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2019 மக்களவைத் தேர்தலின் போது, விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.



7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
[Monday 2024-05-13 18:00]

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா!
[Monday 2024-05-13 18:00]

காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைப்பில் ஈடுபட்டு வருகின்றமையை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



கட்சி தலைவரை எரித்தவர்களை கூட இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை' - வைகை செல்வன் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 06:00]

எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் வைகை செல்வம் பேசுவையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70 வது பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் இரண்டு கோடி உடன்பிறப்புகளும் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.



மீண்டும் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!
[Monday 2024-05-13 06:00]

திருச்சி திருவானைக்காவல் மீண்டும் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெகு ஆழமாக இருந்ததால் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை வைத்தனர். இதனால் கனரக வாகனங்கள் பேருந்துகள் இப்பகுதியில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.



சலூனில் தீண்டாமை: இருவர் கைது!
[Monday 2024-05-13 06:00]

பட்டியலின சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் தர்மபுரி நிகழ்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ளது கீரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் யோகேஸ்வரன் என்பவர் 'யோகேஷ் பியூட்டி சலூன்' என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு 17 வயது சிறுவன் ஒருவன் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது சிறுவனிடம் ஊரை விசாரித்த யோகேஷ் சிறுவனுக்கு முடி திருத்தும் செய்ய மறுத்துள்ளார்.



அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
[Sunday 2024-05-12 16:00]

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆச்சிமுத்து என்பவர் மகன் சங்கர் என்கிற சவுக்கு சங்கர். யூடியூபரான இவர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-12 16:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.



நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியம் தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.



இந்திய மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர்!
[Sunday 2024-05-12 06:00]

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான தூதராக செயற்பட்ட, தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாவில் இணைந்து இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்!
[Sunday 2024-05-12 06:00]

பிரமாண்ட போர் கப்பலை சீனா(China) தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தமையானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 80 ஆயிரம் தொன் நிறையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாக இது அமைந்திருந்துள்ளது. இதற்கு ஃபியூஜியன் என சீன தரப்பு பெயரிட்டுள்ளது.



பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நோக்கி இந்திய படையினர் துப்பாக்கி பிரயோகம்!
[Sunday 2024-05-12 06:00]

இந்திய (India)- ஜம்மு காஸ்மீரின் (Jammu and Kashmir) சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணி!
[Saturday 2024-05-11 18:00]

சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, ரயில் பயணிகள் விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



காரில் பெண் சடலத்துடன் சுற்றிய இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
[Saturday 2024-05-11 18:00]

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது. சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



“ஆலோசனை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது” - கார்கே பதிலடி!
[Saturday 2024-05-11 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.



“பூர்வ குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை” - டி.டி.வி.தினகரன் கண்டனம்!
[Saturday 2024-05-11 18:00]

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை!
[Saturday 2024-05-11 06:00]

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று(10.05.2024) விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் புழுதிப் புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-11 06:00]

டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா