Untitled Document
May 3, 2024 [GMT]
எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும்! - திபிலிசி மாநாட்டில் ஜனாதிபதி Top News
[Wednesday 2018-07-18 18:00]

எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,  தெரிவித்தார். ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று  ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தெரிவித்தார். ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

  

திறந்த அரசாங்க பங்குடமையானது (OGP) பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். ஜோர்ஜியாவின் பிரதமர் Mamuka Bakhtadze அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

திறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானது. அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது கருத்துக்களை தெரிவித்தார்.

திறந்த அரசாங்க பங்குடமையுடன் தொடர்புடைய கொள்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லையற்ற அதிகாரம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்தது என்றும் தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லையற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அன்று பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதிசுட்டிக்காட்டினார்.

தான் நாட்டை பொறுப்பேற்கின்றபோது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி , நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென்று தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை முடியுமானளவு குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி , கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஊடாக அது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவூட்டவும் ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவது தொடர்பாக சிவில் சமூகத்திடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.

திறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும். தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.

ஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படுகின்றது. இம்மாநாடு நாளைநிறைவடையும்.

  
   Bookmark and Share Seithy.com



ஊடக சுதந்திர பட்டியலில் 15 இடங்கள் சறுக்கியது இலங்கை!
[Friday 2024-05-03 17:00]

2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்ட நிலையில், 15 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.



ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு!
[Friday 2024-05-03 17:00]

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.



தமிழீழ இலட்சியத்தில் எவரும், எவரையும் தோற்கடிக்க முடியாது!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் பெரும் நெருக்கடியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், இவ்வாறானதொரு ஊடக சந்திப்பை மேற்கொள்ள வேண்டி இருப்பது தொடர்பில் - நான், உண்மையிலேயே பெரும் கவலை அடைகிறேன். ஆனாலும் எங்களுடைய மௌனம் தமிழினத்துக்கு மேலும் பேராபத்தை ஏற்படுத்திவிடலாம் என்னும் உந்துதலின் காரணமாக உண்மைகளை உரைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.



அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்!
[Friday 2024-05-03 17:00]

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



மனோ கணேசன்- பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் சந்திப்பு!
[Friday 2024-05-03 17:00]

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது, பிரான்சிய தூதுவருடன், தூதரக துணை தலைமை அதிகாரி திருமதி மாரி நொயெல்லா தூரிசும் உடன் இருந்தார்.



ஈழ வேந்தன்: காலத்தை முன்னுணர்ந்த தமிழ்த் தேசியப் போராளி!
[Friday 2024-05-03 17:00]

தமிழீழத் தேசிய விடுதலைப்போராளியும். நாட கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் ஐயா அவர்கள் காலம் ஆகிய செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு சிரம் தாழ்த்தி எமது மரியாதை வணக்கத்தை தெரிவிப்பதுடன், அவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.



எரிவாயு விலைகள் போட்டிக்கு குறைப்பு!
[Friday 2024-05-03 17:00]

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று அறிவித்தார்.



நெடுங்கேணியில் கணவன் கொலை?- மனைவி உயிர் மாய்ப்பு!
[Friday 2024-05-03 17:00]

வவுனியா - நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை 37 வயதான அவரது மனைவி பரமேஸ்வரி, நஞ்சருந்திய நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



வீட்டு வாடகை செலுத்தவில்லை- ரம்புக்வெல்லவின் நாடாளுமன்ற சம்பளத்தில் பிடித்தம் செய்யுமாறு அறிவிப்பு!
[Friday 2024-05-03 17:00]

அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை- மறுக்கிறார் ரணதுங்க.
[Friday 2024-05-03 16:00]

தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



அச்சுவேலியில் வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Friday 2024-05-03 05:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.



வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.



உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.



நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா