Untitled Document
April 27, 2024 [GMT]
உடலில் சோயா பீன்ஸ் செடியுடன் சுற்றித்திரிந்த எலி: - வினோத சம்பவம்
[Tuesday 2018-08-14 17:00]

இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிர்களும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் ஒரு தனித்துவம் பெற்றுள்ளன. சில சமயங்களில் படைப்பின் குணத்தையும் மீறி சில அதிசயங்கள் நடந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.

இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிர்களும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் ஒரு தனித்துவம் பெற்றுள்ளன. சில சமயங்களில் படைப்பின் குணத்தையும் மீறி சில அதிசயங்கள் நடந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.

  

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது பயிர்களை பார்க்கச்சென்ற அவர் வியப்பின் உச்சிக்கே சென்றுள்ளார். செடியை உடலில் தாங்கிய எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியுள்ளது. எலியின் கழுத்துப்பகுதியில் சோயா செடி இலைகளுடன் சிறிய அளவில் வளர்ந்திருந்தது. தனது செல்போனில் தாதர் சிங் வீடியோ எடுத்துள்ளார். உயிரியல் வினோதமாக இது இருந்தாலும் அந்த எலி வலியுடன் சுற்றித்திரிந்ததை அவர் உணர்ந்துள்ளார். பின்னர், எலியை தனது வீட்டுக்கு கொண்டு சென்ற அவர், செடியை பிடுங்கியுள்ளார்.

கழுத்துப்பகுதியில் காயம் இருந்த போது விதைகள் அதில் விழுந்து செடி வளர்ந்து இருக்கும். இது ஒரு உயிரியல் அதிசயம், கழுத்தில் செடி இருந்தாலும் அதன் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அங்குள்ள கல்லூரி ஒன்றின் உயிரியல் துறை தலைவர் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: 2 வீரர்கள் பலி!
[Saturday 2024-04-27 18:00]

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.



ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.



விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்: ஆசிரியர்கள் செய்த செயல்!
[Saturday 2024-04-27 18:00]

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.



தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!
[Saturday 2024-04-27 18:00]

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!
[Saturday 2024-04-27 06:00]

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
[Friday 2024-04-26 18:00]

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.



குடும்பத்தோடு மாலத்தீவுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர்!
[Friday 2024-04-26 18:00]

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 -ம் திகதி குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா