Untitled Document
April 29, 2024 [GMT]
காணிகளை விடுவித்தால் தான் நல்லிணக்கம் சாத்தியம்! - செயலணிக் கூட்டத்தில் சம்பந்தன்
[Wednesday 2018-08-29 07:00]

நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமேயானால், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வட-கிழக்கு  அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமேயானால், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வட-கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கௌரவ மாவை சேனாதிராஜா தலைவர் இலங்கை தமிழ் அரசு கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைவர் டெலோ, மற்றும் , தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைவர் புளொட் உள்ளடங்கலான அனைத்து மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை இக்கூட்டத்திற்கு அழைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இரா சம்பந்தன், சில அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், வடக்கு கிழக்கிலுள்ள 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும் வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதனையும் சுட்டிக்காட்டிய அதேவேளை, வடக்கு கிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் அழிவுகளால் மிகவும் பாதகமான விளைவுகளை சந்தித்துள்ளார்கள் என்பதனையும் எடுத்துக் கூறினார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் தனது அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இராணுவத்தின் வசமிருந்த 88சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு, இங்கே, பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த 75 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இராணுவ தலைமைபீடங்களுடனும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளமையையும் இரா சம்பந்தன் அவர்கள் எடுத்துரைத்தார்.

மேலும் நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயாகில் இராணுவத்தின் வசமுள்ள அணைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ் மக்கள் வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், யுத்தத்தின் நிமித்தம் பல தசாப்தங்களுக்கு மேலாக தமது இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், தற்போது இந்த காணிகள் காடுகளாக வளர்ந்துள்ளன, இந்த சந்தர்ப்பத்தில் வன பாதுகாப்பு மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களங்கள் எல்லைக்கற்களை பதித்து இக்காணிகளை கைவசப்படுத்துகின்றமையையையும் கவனத்திற்கு கொண்டு வந்தார். மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் அமைவதனையும் இரா சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும் தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கு பல தசாப்தங்களாக அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையையை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் மேற்குறித்த பிரச்சினையை கையாண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று திணைக்களங்களின் பிரதானிகள், காணி ஆணையாளர் மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு அமர்வொன்றை மிக விரைவாக ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமது காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தமது காணிகளை அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் கிடைக்கப்பெறும் எந்தவொரு சலுகைகளையும் பெற முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் இந்த பிரச்சினை விரைவாக தீர்க்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

காணி விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் பாரிய பிரச்சினை தொடர்பில் பேசிய இரா. சம்பந்தன் அவர்கள் 1980களில் மஹாவலி சட்டத்தின் கீழ் மஹாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட டு திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இத்திட்டமானது வேறு மாவட்டங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து குடியமர்த்திய வெலி ஓயா அல்லது மணலாறு திட்டம் எனவும் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டங்களால் இத்திட்டம் நிறுத்தப்பட்டதனையும் சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளி இடங்களிலிருந்து மக்களை கொண்டு வந்து இந்த பிரதேசங்களில் குடியமர்த்திய திட்டங்களையும் எடுத்துக்கூறினார். தற்போது இந்த திட்டத்திற்கு மீள உயிரூட்டம் கொடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தும் திட்டங்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்ற சாட்டுக்கள் உள்ளதனை இரா சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்திய இரா சம்பந்தன் வெளியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நீர் கொண்டுவரப்படும் பட்சத்தில், நீர்ப்பாசன வசதியற்ற முல்லைத்தீவு மாவட்டம் நீர்ப்பாசன வசதிகளை பெறுவது மட்டுமல்லாது காணிகளை உடைய பயிர்செய்கையில் ஈடுபடும் அம்மாவட்ட மக்கள் அத்தகைய திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டும் என்பதோடு, காணி இல்லாத அரச காணிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடைய முல்லைத்தீவு மாவட்ட மக்களும் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடனடியாக அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள் அத்தகைய திட்டங்கள் இடம்பெறாது என்றும் தாம் நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்று சரியான நிலைமையை உறுதிப்படுத்துவேன் எனவும் உறுதியளித்தார்.

அரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்பில் தமிழ் இளைஞர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள்இ சிங்கள அமைச்சர்கள் சிங்கள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதனையும் முஸ்லீம் அமைச்சர்கள் முஸ்லீம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதனையும் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களே சில அமைச்சுக்களின் ஊடாக வேலை வாய்ப்பு பெறுவதனையும் எடுத்துரைத்த இரா. சம்பந்தன் இதனால் தமிழ் வாலிபர்களுக்கு யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்டுகின்றமையானது நல்லிணக்கத்தையோ ஒருமைப்பாட்டினையோ ஏற்படுத்த முடியாத ஒரு நிலைக்கு நாட்டினை நகர்த்தும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் நல்லிணக்கத்தினையோ தேசிய ஒருமைப்பாட்டினையோ ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசியல் யாப்பில் 13 வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து நியாயமான தீர்வொன்றினை அடைவதற்கு பகல்வேறு முயற்சிகள் கடந்த அரசாங்கங்களினாலும் ஜனாதிபதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க தீர்வுத்திட்டம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆகஸ்ட் 2000 தீர்வுத்திட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன் மொழிந்த தீர்வு திட்டம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இந்த திட்டங்கள் தொடர்பில் பாரிய அளவில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன, ஆகவே தேசிய பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வொன்று பிரிக்கப்படாத பிளவுபடாத இலங்கைக்குள் எட்டப்படுவதன் மூலமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன் பின்வரும் துறைகள் முக்கியமான துறைகளாக கருதப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

1. விவசாயம்

2. தொழிற்துறை

3. மீன்பிடி

4. கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி

5. வீட்டு கட்டுமானம்

6. முக்கியமான வீதிகள்

7. பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தி

8. சுகாதாரம்

9. கல்வி

10. தொழில் வாய்ப்பு

மேற்குறித்த அபிவிருத்திகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முகமான தனியார் துறையினரின் பங்களிப்பு அவசியம் என்பதனையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை தெரிவித்ததோடு கூட்டத்தில் பங்கெடுத்தும் இருந்தார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் மிக உயரமான மனிதன்! Top News
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.



வேலையில்லா பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகம் முன் போராட்டம்! Top News
[Monday 2024-04-29 16:00]

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



கிளிநொச்சி, மட்டக்களப்பில் தமிழரசின் மே தின கூட்டங்கள்!
[Monday 2024-04-29 16:00]

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டங்கள் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.



மைத்திரியை முன்னிறுத்தி வரலாற்றுத் தவறு செய்து விட்டேன்!
[Monday 2024-04-29 16:00]

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் செய்த வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் கனடாவில் காலமானார்!
[Monday 2024-04-29 16:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் உடல்நலக் குறைவு காரணமாக கனடா - டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.



17 வயது சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல முயன்ற பெண்கள் கைது!
[Monday 2024-04-29 16:00]

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய இளைஞனை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல முயன்ற இரண்டு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது .



நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.



யாழ். சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
[Monday 2024-04-29 16:00]

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து , விளக்கமறியல் கைதிகள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
[Monday 2024-04-29 15:00]

வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
[Monday 2024-04-29 05:00]

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.



நாயாறு கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கினார்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவுநாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.



கோட்டாவுக்குப் பின்னால் நின்றவர்கள் இப்போது தங்களின் பக்கம் என்கிறார் அனுர!
[Monday 2024-04-29 05:00]

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



முகமாலையில் இன்று அகழ்வுப் பணி!
[Monday 2024-04-29 05:00]

பளை - முகமாலை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், இன்று மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.



ஆவரங்காலில் காய்ச்சலுக்கு 5 வயதுச் சிறுமி பலி!
[Monday 2024-04-29 05:00]

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.



புதுக்குடியிருப்பில் ஊழியரின் தாக்குதலில் மரக்காலை உரிமையாளர் படுகாயம்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால், மரக்காலை உரிமையாளர் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறையும் பிறப்பு, உயரும் இறப்பு! - பாதிக்கப்படும் இயற்கைச் சமநிலை.
[Monday 2024-04-29 05:00]

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.



ஊழியர் சேமலாப நிதியத்திற்கான வட்டி 13 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2024-04-29 05:00]

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற பாதாள உலகத் தலைவரை காட்டிக் கொடுத்தது இயந்திரம்!
[Monday 2024-04-29 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை!
[Sunday 2024-04-28 18:00]

கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா