Untitled Document
May 7, 2024 [GMT]
6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்து அறுத்து கொலை!
[Tuesday 2018-09-04 07:00]

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது.

லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது. லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.

  

இதனைத் தொடர்ந்து அவரது மாமனார் தாரங்க பாணி அவரை தேடி வயலுக்குசென்றார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து வந்து அவரை தியாகதுருகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று லதாவிடம் விசாரணைநடத்த முயன்றனர். ஆனால் லதாவின் கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததாலும், ரத்தம் வந்து கொண்டே இருந்ததாலும் அவரால் பேச முடியவில்லை. பின்பு அவர் ஒரு பேப்பரில் நடந்த விபரத்தை எழுதி காட்டினார்.

அதில் நான் வயலில் தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் வயலுக்கு வந்தனர். அவர்களில் 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் என் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்செயினை கொடுக்கும்படி கேட்டனர். நான் நகையை கொடுக்க முடியாது என்றேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் என்னை கீழே தள்ளினர். 2 பேர் எனது காலை பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள் என் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தாலிசெயினை பறித்தனர்.

நான் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்ததால் இறந்து விட்டேன் என நினைத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இவ்வாறு அதில் லதா எழுதியிருந்தார். இந்த நிலையில் லதாவின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் லதா பரிதாபமாக இறந்து விட்டார். உடனே லதாவின் உடலுடன் பாதி வழியிலேயே ஆம்புலன்சில் சொந்த ஊர் திரும்பினர்.

இதற்கிடையே லதா இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கும், பெரியமாம்பட்டு கிராம மக்களுக்கும் தெரியவந்தது. அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பெரியமாம்பட்டு, சேலம்- சென்னை தேசிய நெடுஞ் சாலைல் வாகனத்தில் லதாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணத்துடன் மறியல் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அதுவரை செல்ல மாட்டோம் என்று ஆவேசமாக கூறினர். குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் லதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின்பு லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் லதா கூறிய அடையாளங்களை வைத்து பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் இன்று காலை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட லதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



முதல் நாளே குவிந்த இ-பாஸ் விண்ணப்பங்கள்!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-07 06:00]

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



"தேவையான அளவு இட ஒதுக்கீடு அளிப்போம்" - ராகுல் காந்தி உறுதி!
[Tuesday 2024-05-07 06:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை (07-05-24) கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.



'இது கொலைதான்?' - விசாரணையை இறுக்கும் காவல்துறை!
[Monday 2024-05-06 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடியும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல் துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: தமிழக அரசு ஏற்பாடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்: வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி புகார்!
[Monday 2024-05-06 18:00]

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக போட்டியிடவில்லை.



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
[Monday 2024-05-06 18:00]

தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று (மே.6) காலை 9.30 மணியளவில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்துக்கொன்ற தாய்!
[Monday 2024-05-06 06:00]

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.



காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த காதலன்: விடாப்பிடியாய் நடந்த திருமணம்!
[Monday 2024-05-06 06:00]

எட்டு ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை உறவினர்கள் ஒன்று சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறுதானூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த எட்டு வருடமாக ரோஸ்லின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பெசன்ட் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ரோஸ்லின் மேரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது திருமணம் பற்றி பேசினாலும் ஏதாவது காரணம் சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சென்னை அடையாறு உட்பட நான்கு காவல் நிலையங்களில் ரோஸ்லின் புகார் அளித்தார்.



நீலகிரியில் இ-பாஸ்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
[Monday 2024-05-06 06:00]

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.



நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவை!
[Sunday 2024-05-05 18:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



முடிந்தது 'நீட்' தேர்வு!
[Sunday 2024-05-05 18:00]

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி முடிந்துள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது.



ஜெயக்குமார் தனசிங் மரணம்: அடுத்தடுத்து சிக்கிய கடிதங்கள்!
[Sunday 2024-05-05 18:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.



போலந்து பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்!
[Sunday 2024-05-05 18:00]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.



பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரருக்கு நேர்ந்த சோகம்!
[Sunday 2024-05-05 07:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.



“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” - பிரதமர் மோடி பேச்சு!
[Sunday 2024-05-05 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது” - ராமதாஸ் குற்றச்சாட்டு!
[Sunday 2024-05-05 07:00]

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை.



கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியான முக்கிய அறிவிப்பு!
[Saturday 2024-05-04 17:00]

தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலையில் தப்பிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தவர்கள் கைது!
[Saturday 2024-05-04 17:00]

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபை கட்டுமான பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வடலூர் சத்திய ஞான சபையில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடலூரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.



பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: கைது நடவடிக்கையில் கர்நாடக அரசு தீவிரம்!
[Saturday 2024-05-04 17:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா