Untitled Document
May 15, 2024 [GMT]
ஐ.நாவில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி! - பொதுமன்னிப்பு அறிவிப்பை வெளியிடுவாரா?
[Tuesday 2018-09-25 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா 73ஆவது பொதுச் சபையின்  பொது விவாதம் ஆரம்பிக்கும் முதலாவது நாளான இன்று உரை ஆற்றவுள்ளார். ஜனாதிபதிக்கான நேரம், பிற்பகல் அமர்விலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவிலேயே அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கை நேரப்படி, நாளை (26) அதிகாலை 2 மணியளவிலேயே, ஜனாதிபதி உரையாற்றுவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா 73ஆவது பொதுச் சபையின் பொது விவாதம் ஆரம்பிக்கும் முதலாவது நாளான இன்று உரை ஆற்றவுள்ளார். ஜனாதிபதிக்கான நேரம், பிற்பகல் அமர்விலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவிலேயே அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நேரப்படி, நாளை (26) அதிகாலை 2 மணியளவிலேயே, ஜனாதிபதி உரையாற்றுவார்.

  

இலங்கைப் படையினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை இல்லாது செய்யும் வகையில், ஐ.நாவில் தனது உரை அமையுமென, ஜனாதிபதி ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்றைய உரையில், படையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, ஜனாதிபதி பரிந்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

குறிப்பாக, ஜனாதிபதியுடனான இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ள அமைச்சர்களில், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் இருவரும், போரில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்று கருதப்படுகிறது. அவர்களில் அமைச்சர் சம்பிக்க, படையினருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது என்ற தனது பரிந்துரையை, பகிரங்கமாக ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே, ஜனாதிபதியின் உரையிலும், படையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராயப்படுமெனக் கருதப்படுகிறது. ஆனால், ஜனாதிபதியின் திட்டத்தில், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்குவரா என்பது, தெளிவானதாகக் காணப்படவில்லை என, அரசாங்கத்தின் சில தரப்புகள் தெரிவித்திருந்தன.

இன்னும் சில தரப்பினரின் கருத்துப்படி, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான திட்டமே, ஜனாதிபதியின் திட்டமாக இருக்கின்ற போதிலும், இம்முறை பொதுச் சபை விவாதத்தில், அதுகுறித்து உரையாற்ற வேண்டுமா என்பது குறித்து, ஜனாதிபதி மீளவும் சிந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அதற்கு மாறாக, வடக்குக்கும் தெற்குக்கும் இடையில், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதையே, ஜனாதிபதி முக்கியமாக வலியுறுத்துவார் என, அத்தரப்புகள் தெரிவித்தன.

குறிப்பாக, அனைத்துத் தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்குதல் என்ற, அமைச்சர் சம்பிக்கவின் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள், தங்களுடைய கடுமையான எதிர்ப்பை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே எதிர்க்கப்படும் திட்டத்தை முன்வைக்க, ஜனாதிபதி விரும்பமாட்டார் என்றும் கருதப்படுகிறது.

அத்தோடு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து, இலங்கை விசாரணை செய்யுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பொது மன்னிப்பு வழங்குதலென்பது, அத்தீர்மானத்துக்கு எதிரானதாக அமையுமென்ற விமர்சனமும் காணப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது!
[Wednesday 2024-05-15 17:00]

தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயண ஒலிபெருக்கி சத்தங்களையும் இன முரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுமந்திரன் பொய் சொல்கிறார் - அவரிடம் அப்படிக் கேட்கவே இல்லை என்கிறார் சுரேஷ்!
[Wednesday 2024-05-15 17:00]

"ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனைக் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய், என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



பொலிசாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்!
[Wednesday 2024-05-15 17:00]

சம்பூர் பொலிஸாரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.



குழந்தையை கைவிட்டுத் தப்பிய சிறுமி கண்டுபிடிப்பு! - கர்ப்பமாக்கிய இளைஞன் கைது.
[Wednesday 2024-05-15 17:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்துக்கு 2 புள்ளிகள் இலவசம்!
[Wednesday 2024-05-15 17:00]

இன்றுடன் முடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில், விஞ்ஞான பாட வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்றவர்கள் அச்சப்பட வேண்டாம்!
[Wednesday 2024-05-15 17:00]

இரத்த உறைவு குறித்த கவலைகள் காரணமாக அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்ற நபர்கள் அதன் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு - தந்தையும் மகனும் படுகாயம்!
[Wednesday 2024-05-15 17:00]

திருகோணமலை - ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் உதவியுடன் ஆயுதங்களை உற்பத்தி செய்ய திட்டம்!
[Wednesday 2024-05-15 17:00]

சிறிய ஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.



ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்! Top News
[Wednesday 2024-05-15 17:00]

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



பொலிசுடன் சேர்ந்து சுகாதாரப் பரிசோதகர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுக்க முயற்சி! Top News
[Wednesday 2024-05-15 04:00]

மட்டக்களப்பில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நேற்று விநியோகிக்கப்பட்டது.



நினைவேந்தல் உரிமையை நிராகரிக்கவே முடியாது!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலை தான் இலங்கையிலும் தமிழர்களுக்கு நடந்தது!
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது, ஆனால் பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.



தமிழர்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் தனிஈழம் வெற்றி பெறும்!
[Wednesday 2024-05-15 04:00]

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.



பரவலாக நடைபெறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Wednesday 2024-05-15 04:00]

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் நேற்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.



யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்!
[Wednesday 2024-05-15 04:00]

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்ய உத்தரவு!
[Wednesday 2024-05-15 04:00]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



நெதன்யாகு பயங்கரவாதி! - சபையில் சீறிய டிலான்
[Wednesday 2024-05-15 04:00]

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



போரில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளது!
[Wednesday 2024-05-15 04:00]

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



ரணில் மீட்பர் அல்லர், பொருளாதார அடியாள்! - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு.
[Wednesday 2024-05-15 04:00]

ரணில் மீட்பர் அல்லர். அவர் ஒரு பொருளாதார அடியாள். உலக வங்கி, நாணய நிதியம் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் தாழ்பணியும் ஒரு சேவகராகவே அவர் செயற்பட்டுவருகின்றார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா