Untitled Document
May 10, 2024 [GMT]
மனைவி மீதுள்ள கோபத்தில் நாயைக் கொன்ற கணவர்!
[Tuesday 2018-09-25 18:00]

சென்னையில், மனைவி மீதுள்ள கோபத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் செல்லமாக வளர்த்த 'பப்பி' என்ற நாயை கணவர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை வேளச்சேரி, சாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடை வைத்துள்ளார். இவரின் மனைவி செல்வி. அழகு நிலையம் நடத்திவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வீட்டில் பப்பி என்ற பெயரில் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.

சென்னையில், மனைவி மீதுள்ள கோபத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் செல்லமாக வளர்த்த 'பப்பி' என்ற நாயை கணவர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, சாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடை வைத்துள்ளார். இவரின் மனைவி செல்வி. அழகு நிலையம் நடத்திவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வீட்டில் பப்பி என்ற பெயரில் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.

  

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் செல்வி.

பிறகு வீடு திரும்பிய செல்விக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செல்லமாக வளர்த்த பப்பியின் கழுத்தில் ரத்தக் காயங்கள் இருந்தன. அது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. உடனடியாக பப்பியைக் கொண்டுபோய் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு பப்பி இறந்துவிட்டது. இந்தத் தகவல், வேளச்சேரி போலீஸ் நிலையத்துக்குத் தெரியவந்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, விசாரணை நடத்தினார். விசாரணையில், பப்பி அடித்துக் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. 'அதைக் கொலைசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று செல்வி ஆவேசமாகக் கூறினார்.

செல்வி, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், பப்பியை ஜெகநாதன் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனால், பிராணிகளைத் துன்புறுத்துதல், அடித்துக் கொலைசெய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை போலீஸார் கைதுசெய்தனர்.

மனைவி மீதுள்ள கோபத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செல்லமாக வளர்த்த நாயை ஜெகநாதன் கொன்ற தகவல் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கணவர்மீது புகார் கொடுக்க செல்வி தயங்கியுள்ளார். ஆனால், நாயின் மீதுள்ள பிரியத்தால் புகார் கொடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



“பாகிஸ்தானை மதிக்கணும்” - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை!
[Friday 2024-05-10 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?
[Friday 2024-05-10 18:00]

இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல, மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்னும் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.



10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்!
[Friday 2024-05-10 18:00]

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு!
[Friday 2024-05-10 18:00]

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



செல்போனால் சிதறிய கவனம்: தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து!
[Friday 2024-05-10 06:00]

அண்மையில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் மயக்கம் அடைந்தார்.



பா.ஜ.க அரசை வீழ்த்த தீவிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.



தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்: என்ன திட்டம்?
[Thursday 2024-05-09 18:00]

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.



லண்டனில் மகனுடன் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்!
[Thursday 2024-05-09 18:00]

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக 24 நாட்களாக தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பின்னர், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



மதுரையில் நடக்க போகிறது விஜயின் முதல் அரசியல் மாநாடு!
[Thursday 2024-05-09 18:00]

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை எப்போது நடத்துவது தொடர்பான தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.



அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: தொடரும் சோகம்!
[Thursday 2024-05-09 06:00]

அண்மையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே கன்னியாகுமரியில் சுற்றுலா சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



தீவட்டிப்பட்டி சம்பவம்: விசிக போராட்டம்!
[Thursday 2024-05-09 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வெப்ப அலை வீச்சு காரணமாக விலக்கு கேட்கும் தூய்மை பணியாளர்கள்!
[Thursday 2024-05-09 06:00]

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த, நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பொதுநல மனு: அபராதம் விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தனக்கு ஜாமீன் வழங்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



கொடூரக் கொலை: கதைகட்டிய போலீஸ் - புலனாய்வில் அம்பலமான உண்மை!
[Wednesday 2024-05-08 18:00]

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காந்தி சாலை, பஜார் வீதியில் புதிய வசந்த் அண்ட் கோ அருகே, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும், பச்சை நிற பெட்சீட்டில் சுற்றப்பட்ட நிலையில் தலை சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அருகே துண்டாக்கப்பட்ட கைகளும் இருந்தன. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பஜார் சாலை வழியே வந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



குறைபாடுள்ள பிள்ளையை முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்!
[Wednesday 2024-05-08 18:00]

தங்கள் பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதால் அது தொடர்பாக ஒரு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள Dandeli என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் சாவித்ரி, ரவி குமார் தம்பதியர் (Savitri Kumar Shelle, 26, Ravi Kumar Shelle, 27). தம்பதியரின் மகன் வினோத், பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவன். மகனுடைய குறைபாடு காரணமாக தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதுண்டாம்.



300 பணியாளர் ஒரே நேரத்தில் விடுப்பு: குழப்பத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
[Wednesday 2024-05-08 18:00]

விமான பணியாளர்களின் திடீர் விடுப்பு காரணமாக 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, குறைந்தது 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.



'திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான்' -ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
[Wednesday 2024-05-08 06:00]

திமுகவின் முகவரியே நில அபகரிப்பு தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஒரே நேரத்தில் எல்லாரும் ஒரே இடத்திற்கு போகும் பொழுது அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.



“ராமர் கோவிலை இப்படியா கட்டுவது?” - இந்தியா கூட்டணி எம்.பி. பேச்சால் சர்ச்சை!
[Wednesday 2024-05-08 06:00]

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா