Untitled Document
May 3, 2024 [GMT]
கருணாஸின் எம்எல்ஏ பதவியை பறிக்க நடவடிக்கை: - சபாநாயகர் நோட்டீஸ்
[Tuesday 2018-10-02 18:00]

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அணிக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்தனர்.

 
அவர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அணிக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  
இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் 2 நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதியான எம்.சத்திய நாராயணன் விசாரித்தார். இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளார். கருணாஸ் எம்.எல்.ஏ. முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இதேபோல் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களில் பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

கருணாஸ் எம்.எல்.ஏ. சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தனது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசினார். கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதில் கைதாகி விடுதலையான பின்பு மீண்டும் தாக்கிப் பேசினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பேனர் வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது ஏன் வழக்கு போடவில்லை. இது பற்றி நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் கருணாஸ் கூறினார். முதல்-அமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து கூறி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கருணாஸ் எம்.எல்.ஏ. சசிகலாவையும், தினகரனையும் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலும் ஆதாரமாக அரசு தரப்பில் திரட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு முதல்- அமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட கூட்டங்கள், பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

அவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு சபாநாயகர் தனபால் தனது அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர். இதில் அரசு கொறடா ராஜேந்திரனும் கலந்து கொண்டார். இரவு வரை இந்த ஆலோசனை நடந்தது. அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அத்துடன் 4 எம்.எல்.ஏ.க்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவே அவர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். தங்கள் செயலுக்கு 4 பேரும் வருத்தம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினாலோ அல்லது சபாநாயகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தாலோ அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது, மன்னிப்பு அளிக்கப்படும். இதில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கேட்கலாம். அதுவரை சபாநாயகர் பொறுத்து இருப்பார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் காலம் கடத்தினாலோ, தங்கள் செயலை நியாயப்படுத்தினாலோ 4 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. இதனால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் அ.தி.மு.க.வின் பலம் மேலும் குறைகிறது.

தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில் அ.தி.மு.க.வின் பலம் 134 ஆக இருந்தது. அ.தி.மு.க. வசம் இருந்த ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததாலும், 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் நீக்கப்பட்டதாலும் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக குறைந்தது.

இந்த நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்கினால் அ.தி.மு.க. பலம் 110 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கருணாநிதி மறைவால் 88 ஆக உள்ளது. காங்கிரஸ் வசம் 8 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக் வசம் ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இதனால் தி.மு.க. அணியின் பலம் 97 ஆக உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி (மனித நேய ஜன நாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் அ.தி.மு.க. பக்கம் உள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் தீர்ப்பு?
[Friday 2024-05-03 18:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஊடகவியலாளர் பலி!
[Friday 2024-05-03 18:00]

ஊடகவியலாளர்கள் வெயில், மழை, இரவு, பகல் பார்த்து பணி செய்வதில்லை. உலகம் முழுவதும் இராணுவ மோதலின்போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட ஊடகவியலாளர்கள் அனேகம்பேர். இந்தியாவிலும் செய்திப் பணிக்காகக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியல் பெரிது. ஆக, உயிரையும் பணயம் வைத்துச் செய்தி சேகரிப்பது, ஒரு சமூகத் தொண்டாகவே கருதப்படுகிறது.



பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை!
[Friday 2024-05-03 18:00]

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற பெற்றவர் தற்போது தினக்கூலிக்கு வேலை செய்து வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா (Mogulaiah). இவர், வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியான கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர் ஆவார்.



விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது!
[Friday 2024-05-03 18:00]

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



கோவாக்சின் பாதுகாப்பானது: பயோடெக் நிறுவனம் விளக்கம்!
[Friday 2024-05-03 06:00]

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!
[Friday 2024-05-03 06:00]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்!
[Friday 2024-05-03 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-05-02 18:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.



சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குக் கொடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சோகம்: மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!
[Thursday 2024-05-02 18:00]

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.



சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற கொடூரன்!
[Thursday 2024-05-02 18:00]

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.



நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்: உறுதி செய்த இஸ்ரோ!
[Thursday 2024-05-02 06:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.



ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்: தகிக்கும் டெல்லி!
[Wednesday 2024-05-01 16:00]

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



திட்டவட்டமாக மறுத்த கர்நாடக அரசு: உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு!
[Wednesday 2024-05-01 16:00]

காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?
[Wednesday 2024-05-01 16:00]

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.



வரதட்சணை கொடுமை: விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை!
[Wednesday 2024-05-01 16:00]

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36) கம்ப்யூட்டர் என்ஜினீரிங் படித்தவர். இவர், கடந்த 2016 -ம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.



2,976 ஆபாச வீடியோ: பிரஜ்வல்லின் அந்தரங்க பென்டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
[Wednesday 2024-05-01 07:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.



மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு: எங்கு தெரியுமா?
[Wednesday 2024-05-01 07:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா