Untitled Document
May 7, 2024 [GMT]
கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கிய கனடா!
[Wednesday 2018-10-17 18:00]

கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகி கனடாவில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து விற்பனை தொடங்கியுள்ளது.

கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர்.

உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது.

கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகி கனடாவில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து விற்பனை தொடங்கியுள்ளது. கனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர். உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது.

  

2001ம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. போதை மருந்தை சாப்பிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல்துறை பிரிவுகள் எந்த வகையில் தயாராக உள்ளன என்பது பற்றி கவலைகள் எழுந்துள்ளன. புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் 15 மில்லியன் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகளும் நடத்தப்பட்டுள்ளன. சட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சாவை வாங்கி 'வரலாறு' படைக்க வேண்டுமென செயின்ட் ஜான்ஸ் நகரை சேர்ந்த இயன் பவர், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே வரிசையில் நின்றார்.

கனடாவில் போதைக்கு விற்கப்படுவது சட்டபூர்வமாகிய பின்னர் கஞ்சாவை வாங்குகின்ற முதல் நபராக இருக்க வேண்டும் என்பது எனது கனவு. இறுதியில் அதனை வாங்குவதற்கு இங்குள்ளேன்" என்று இயன் பவர் கூறினார். போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை குற்றமாக பார்ப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்களாக கனட மாகாணங்களும், மாநகராட்சிகளும் தயார் செய்து வந்தன. போதைக்கு கஞ்சா எங்கு வாங்க வேண்டும், எங்கு சாப்பிடலாம் என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பு மாகாணங்களுக்கும், மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால், நாடு முழுவதும் ஏறக்குறைய கட்டுப்பாடற்ற சட்ட நிலைமையை உருவாகியுள்ளது.

சட்டபூர்வமாக கஞ்சா விற்பனைக்கு கனடா எந்த அளவுக்கு தயார்?

கனடாவில் சட்டபூர்வமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சில முக்கிய பிரச்சனைகள் இன்னும் விடையின்றியே உள்ளன. கஞ்சா உற்பத்தி மற்றும் அதற்கு உரிமம் வழங்குகின்ற முதல் ஆண்டாக இருப்பதால், கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் தொடர்வதால், பற்றாகுறை ஏற்படலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனுடைய சந்தையே இன்னும் குழந்தை பருவம் போல தொடக்க நிலையில்தான் உள்ளது. கனடாவில் அதிக மக்கள் வாழும் மாகாணமான ஒன்டாரியோ, அடுத்த வசந்த காலத்தில் இருந்து சில்லறை மளிகை கடைகளில் இருந்து கஞ்சாவை வாங்க முடியும். இணையத்தில் பதிவு செய்தும் இதனை வாங்கும் வசதி இருக்கும். அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுகின்ற மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை மட்டும் சட்டபூர்வமான கடை ஒன்று திறந்திருக்கும் என்று தெரிகிறது.

சில்லறை விற்பனை இடங்கள் பரந்த அளவில் உருவாகுவது வரை இந்த சட்டம் முதலில் முன்மொழியப்பட்டபோது தொடங்கி, உருவாகியுள்ள உரிமம் பெறாத கஞ்சா சில்லறை வியாபாரிகள் கடைகளை வைத்திருப்பர். உரிமம் பெறாத கஞ்சா சில்லறை விற்பனை கடைகளை தடுப்பது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்டும் காணாமல் இருப்பார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

கஞ்சா விற்பனையை கனடா சட்டபூர்வமாக்கு ஏன்?

கஞ்சா விற்பனையை அனுமதிக்கும் சட்டம் கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. உலகிலேயே கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துவதில் கனடர்கள் இருப்பதால், சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான போதை மருந்து பயன்படுத்துவதை குற்றமாக்கும் சட்டம் செயல்திறனை இழந்துவிட்டது என்று ட்ரூடோ கூறினார். இந்த புதிய சட்டம் வயதுக்கு வராதோரிடம் போதை மருந்து கிடைப்பதை தடுத்து, குற்றவாளிகள் இதனால் லாபமடையாமல் இருக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற நாடுகளில் நிலைமை என்ன?.

2013ம் ஆண்டு கஞ்சாவை பயன்படுத்துவதை உகாண்டா சட்டபூர்வமாக்கி, உலகிலேயே சட்டமாக்கிய முதல் நாடு என்ற பெருமை பெற்றது.அமெரிக்காவின் சில மாகாணங்களும் இந்த தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்துள்ளன. மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்தை பயன்படுத்துவது ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்து வருகின்றன. போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்து பயன்படுத்தப்படுவதை அனுமதித்துள்ளன.

தனிப்பட்ட இடங்களில் கஞ்சாவை வயதுக்கு வந்தோர் பயன்படுத்துவதை அனுமதித்து சட்டமாக்கியுள்ள தென்னாப்பிரிக்காவின் உயரிய நீதிமன்றம், போதை மருந்து விற்பனையை குற்றமென நடைமுறைப்படுத்தி வருகிறது. லெசோதோவுக்கு அடுத்ததாக, ஜிம்பாப்வே கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்து, ஆப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கு போதை மருந்து பயன்பாட்டை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 9 மாநிலங்கள் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமென பல மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

கஞ்சா பற்றி புதிய விதிகள்

கஞ்சா எண்ணெய், விதைகள், தாவரம் மற்றும் உலர்ந்த கஞ்சா ஆகியவற்றை வயதுக்கு வந்தோர் மட்டுமே வாங்கலாம். பொதுவாக 30 கிராம் (ஒரு அவுன்ஸ்) உலர் கஞ்சா அல்லது அதற்கு சமமான அளவை வைத்து கொள்ளலாம். சாப்பிடக்கூடிய அல்லது கஞ்சா சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் உடனடியாக வாங்குவதற்கு கிடைக்காது. இந்த மசோதா நடைமுறையாகி ஓராண்டுக்குள் அவை சந்தையில் கிடைக்கும். இந்த உணவு வகைகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க இந்த இடைவெளி உதவும். 30 கிராமுக்கு அதிகமான கஞ்சாவை பொதுவெளியில் வைத்திருந்தாலோ, வீட்டுக்கு 4 கஞ்சா செடிகளுக்கு மேலாக வளர்த்தாலோ, உரிமம் பெறாத விற்பனையாளரிடம் இருந்து கஞ்சாவை வாங்குவது அனைத்தும் சட்டப்பூர்வமற்ற நடைமுறையாக இருக்கும்.

இதற்கு அபராதம் கடுமையாக இருக்கும். வயதுக்கு வராதோருக்கு கஞ்சாவை விற்பனை செய்தால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம். சாராயத்தை வயதுக்கு வராதோருக்கு விற்பனை செய்வோருக்கு வழங்கப்படும் தண்டனையை விட போதை மருந்து விற்பனையாளருக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கவலைகள்

கஞ்சா உற்பத்தியாளர்கள் மற்றும் வரி வருவாய்க்காக தேசிய அளவில் கட்டுப்பாடில்லாத இந்த பரிசோதனையை, கனடர்களின் சுகாதாரத்திற்கு எதிரானதாக இந்த சட்டம் ஆக்கியுள்ளதாக கனடிய மருத்துவ கூட்டமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் சில சட்டபூர்வ அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளன. போதை மருந்து சாப்பிட்டு வாகனம் ஓட்டுவதற்கு புதிய குற்ற விதிகளை கனடா இயேற்றியுள்ளது. இதனை கண்காணிக்கும் தொழில்நுட்பம், போதைப் பொருட்களைக் கையாளும் திறனுடைய வழக்குகள் நீதிமன்றங்களில் குவிவது ஆகியவை பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



"ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்" - பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை!
[Tuesday 2024-05-07 18:00]

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2 வயதே ஆன அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய், 24 உளவுத்துறை அதிகாரிகளை கடித்துள்ளதாக புகார் எழுந்ததால் கடந்தாண்டு இறுதியில் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.



2 லிட்டர் சிறுநீர் அருந்துங்கள்: ஏஐ பதிலால் பெரும் அதிர்ச்சி!
[Tuesday 2024-05-07 18:00]

சிறுநீரகக் கற்களை விரைவாக கரைக்க சிறுநீரை அருந்துங்கள்' என்ற கூகுள் ஏஐ இன் அறிவுரைக்கு இணையவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகாட்டல் முதல் உடல் உபாதைக்கான மருத்துவ ஆலோசனை வரை சகலத்துக்கும் கூகுளில் விடை தேடும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.



அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!
[Tuesday 2024-05-07 06:00]

தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் கார்டன் (Gordon Black) பிளாக், திருட்டு பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது . பிளாக் மே 2 ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு முனையிலுள்ள விளாடிவோஸ்டாக் நகரில் பிளாக் கைது செய்யப்பட்டதாகவும், அவர் அதிகாரபூர்வ பயணத்தில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
[Tuesday 2024-05-07 06:00]

இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



3 குழந்தைகளின் தாயை கொன்ற குற்றவாளி: சிறையில் மரணம்!
[Tuesday 2024-05-07 06:00]

மூன்று குழந்தைகளின் தாயாரை கொலை செய்த கைதி விக்டர் ஃபாரன்ட் சிறையில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் மூர்க்கத்தனமாக கிளெண்டா ஹோஸ்கின்ஸை கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஃபாரன்ட் சிறையில் இறந்துள்ளார். கிளெண்டா ஹோஸ்கின்ஸ், மூன்று குழந்தைகளின் தாயார், 44 வயதாக இருந்தபோது, ​​அவரது முன்னாள் காதலனான ஃபாரண்ட் அவரை தாக்கினார்.



வியட்நாமில் வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!
[Monday 2024-05-06 18:00]

சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.



கனடா தபால் திணைக்களம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அவுஸ்திரேலிய பெண் எம்.பிக்கு மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம்!
[Monday 2024-05-06 18:00]

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பியான 37 வயதான பிரிட்டானி லாவ்கா தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.



கனடாவில் உயிரணு தான் மூலம் பிறந்த 600 குழந்தைகள் தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில், ஒரு ஆண், இத்தனை முறை மட்டுமே உயிரணு தானம் செய்யலாம் என விதிமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும், விதிகளை மீறி பல பிள்ளைகளுக்கு தந்தைகளான ஆண்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.



300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு: மன்னர் சார்லஸ் முடிவு!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு விழாவின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த வார இறுதியில் தனது ஆதரவு தரும் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தியுள்ளார்.



பிரித்தானியாவில் 5 மாத குழந்தை மாரடைப்பு: லேகோலேண்டில் பெண் கைது!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் லேகோலாந்தில் குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லேகோலாந்து விண்ட்சர் (Legoland Windsor) பொழுதுபோக்கு பூங்காவில் ஐந்து மாத கைக்குழந்தை மாரடைப்பு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் ஆபத்தான (Critical) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. டேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) தகவல் படி, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது..



பத்திரிகையாளர் சுதந்திரத்தை மீறியதா இஸ்ரேல்?
[Monday 2024-05-06 06:00]

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் பங்கு வகிக்கிறது.



கனடாவில் கைதான மூன்று இந்தியர்கள்: பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட தகவல்!
[Sunday 2024-05-05 18:00]

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார். கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ் படைகள்!
[Sunday 2024-05-05 18:00]

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எகிப்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவிடம் ஹமாஸ் அதிகாரிகள் ஒரே ஒரு உத்தரவாதம் அளிக்கக் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது எகிப்தின் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பிரித்தானிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி!
[Sunday 2024-05-05 18:00]

பிரித்தானியாவில் அண்மையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



அவுஸ்திரேலியாவில் 16 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுகொன்ற பொலிஸார்!
[Sunday 2024-05-05 18:00]

அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.



மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் மாயமான இடத்தில் உடல்கள்!
[Sunday 2024-05-05 07:00]

மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை தேடும் அதே பகுதியின் பாஜா கலிபோர்னியாவில்(Baja California) அதிகாரிகள் மூன்று உடல்களைக் கண்டெடுத்தனர்.



லண்டன் மேயர் தேர்தல்: 3 வது முறையாக சாதிக் கான் வெற்றி!
[Sunday 2024-05-05 07:00]

லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்களை விட தொழிற்கட்சி வேட்பாளர்கள் பலத்த ஆளுமைகளை காட்டி வருகின்றனர்.



உக்ரைனின் 3 பகுதிகளில் திடீர் தாக்குதல்: குறிவைத்து அடித்த ரஷ்யா!
[Sunday 2024-05-05 07:00]

உக்ரைனில் ரஷ்ய நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்ததாக பிராந்திய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.



அமெரிக்காவில் நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி: 380 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Saturday 2024-05-04 17:00]

அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா