Untitled Document
April 27, 2024 [GMT]
அரசமைப்புக்கு அமைவாகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் வலியுறுத்தல்! Top News
[Tuesday 2018-10-30 18:00]

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல், தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்றது. புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்யும் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை, இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல், தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்யும் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை, இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

  

அங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டுத் தூதுவர்கள், நாட்டின் அரசமைப்புக்கேற்ப, நாட்டினுள் அமைதியைப் பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

நாட்டின் அரசமைப்புக்கேற்ப, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே, தான் பிரதமரை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்ற வகையில், அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்து வரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பலமாக முன்கொண்டு செல்வதே, புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று , ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சிவராம் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-27 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.



நாச்சிக்குடா பாடசாலை விவகாரம் - அதே பெயரைப் பயன்படுத்த உத்தரவு!
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்ப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலையானது எப்படி?
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.



அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



அனுர, சஜித்துடன் டீல் வைத்துள்ளாரா பேராயர்?
[Saturday 2024-04-27 16:00]

கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.



வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது!
[Saturday 2024-04-27 16:00]

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



விஜயதாசவை நீக்க மொட்டு அழுத்தம்! - தம்மிக்கவுக்கு அமைச்சர் வாய்ப்பு?
[Saturday 2024-04-27 16:00]

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.



நாகை- காங்கேசன் கப்பல் சேவை 13ஆம் திகதி ஆரம்பம்!
[Saturday 2024-04-27 16:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



வடக்கு கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு!
[Saturday 2024-04-27 16:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Saturday 2024-04-27 06:00]

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.



வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - பிரித்தானிய அரசாங்கம் கவலை!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியத் தூதுவரைச் சந்தித்தார் பசில்!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரணில் களமிறங்கினால் முழுமையான ஆதரவு! -மஹிந்தவுக்கு முன்பாக கூறிய மொட்டு எம்.பிக்கள்.
[Saturday 2024-04-27 06:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



ஈரானிய ஜனாதிபதிக்கான இராப்போசனத்தை புறக்கணித்தது ஏன்?- சஜித் விளக்கம்.
[Saturday 2024-04-27 06:00]

ஈரான் ஜனாதிபதியை கௌரவிக்கும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவு படுத்தியுள்ளது.



ஒட்டாவா படுகொலைகள் - விசாரணைக்கு திகதி குறிப்பு!
[Saturday 2024-04-27 06:00]

கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் அஜித் தோவலா?
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.



எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!
[Saturday 2024-04-27 06:00]

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.



மூளை யார் என்று கூறாத மைத்திரி!
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெள்ளிக்கிழமை முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.



ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் பெட்டிகளுக்கு நடுவே சிக்கி படுகாயம்!
[Saturday 2024-04-27 06:00]

கொழும்பில் இன்று பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் ரயிலின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். கண்டி நோக்கி பயணிப்பதற்காக ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா