Untitled Document
May 15, 2024 [GMT]
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்.
[Thursday 2019-01-03 21:00]

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அரசு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்தான்புல்லுக்குச் சென்று கொலை செய்த 15 சந்தேக ஊழியர்கள் உள்பட கஷோக்ஜி கொலை வழக்கு விசாரணைக்காக 18 சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்திருந்த கோரிக்கையை சௌதி அரேபியா நிராகரித்துள்ளது.

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அரசு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்தான்புல்லுக்குச் சென்று கொலை செய்த 15 சந்தேக ஊழியர்கள் உள்பட கஷோக்ஜி கொலை வழக்கு விசாரணைக்காக 18 சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்திருந்த கோரிக்கையை சௌதி அரேபியா நிராகரித்துள்ளது.

  

இந்த விசாரணை தொடர்பாக இதுவரை தெரிந்ததென்ன?

அரசு ஊடகம் சிறிதளவு தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து குற்றவியல் நீதிமன்றத்தில் முதல் அமர்வு விசாரணை தொடங்கியது மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களும் அங்கிருந்தார்கள். ஆதாரம் குறித்து துருக்கிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு இதுவரை பதில் வரவில்லை என சௌதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய அறிக்கையில் மேலும் 10 பேர் மீது விசாரணை நடப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதுவரை சௌதி கூறியது என்ன?

நவம்பர் மாதம், அரசின் துணை வழக்குரைஞரான ஷாலான் பின் ரஜி ஷாலான் கூறுகையில் '' உளவுத்துறை அதிகாரி ஒருவர் தூதரகத்துக்குள் ஆளை கொல்லும் ஊசியொன்றை செலுத்தி கஷோக்ஜியை கொள்ள ஆணையிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்'' என்றார். கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் அப்பத்திரிகையாளரை சௌதி திரும்ப இணங்க வைக்கும் பணி அந்த உளவுத்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருந்தது என அவர் கூறினார்.

''தூதரகத்துக்குள் கஷோக்ஜியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு துருக்கியிலுள்ள உள்ளூர் 'ஒத்துழைப்பாளர்களிடம்' உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன'' என்கிறார் ஷாலான். கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் கஷோக்ஜியின் உடல் இன்னமும் கிடைக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து எதாவது துப்பு கிடைத்துள்ளதா?

கஷோக்ஜி கொல்லப்பட்ட சமயத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்துக்கு சௌதியின் ஊழியர்கள் 15 பேர் வந்திறங்கி வேலை முடிந்தவுடன் பின்னர் மீண்டும் சௌதிக்கு சென்றுவிட்டதாக சந்தேகப்படும் துருக்கி, அவர்கள் யார் என அடையாளம் கண்டுள்ளது. ஆனால் துருக்கி சந்தேகப்படும் 15 பேரில் யாராவது ரியாத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் இடம்பெற்றுள்ளார்களா என்பது தெரியவில்லை.

ஆனால் வழக்கு விசாரணையில் இல்லாத ஒரு நபர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது உறுதி. கஷோக்ஜியை கொலை செய்ததன் பின்னணியில் சௌதி அரசரின் மகனான முகமது பின் சல்மான் மீது சில மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டின. தூதரகத்தில் நடைபெற்ற இப்படியொரு நடவடிக்கைக்கு இளவரசரின் அனுமதி நிச்சயம் தேவைப்பட்டிருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

''இத்தகைய மிகவும் கொடிய குற்றத்தை யாரும் நியாயப்படுத்தவே முடியாது'' எனத் தெரிவித்திருக்கும் இளவரசர் சல்மான், இக்கொலையில் பங்கு இருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அமெரிக்கா 17 சௌதி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. இதில் இளவரசர் சல்மானின் முன்னாள் ஆலோசகரான சௌத்-அல்-கதானியும் அடக்கம்.

யார் இந்த ஜமால் கஷோக்ஜி?

பிரபல பத்திரிகையாரான கஷோக்ஜி ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் படையெடுப்பு, ஒசாமா பின்லேடனின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கட்டுரைகளை வெவ்வேறு சௌதி செய்தி நிறுவனங்களுக்காக எழுதியுள்ளார். பல தசாப்தங்களாக சௌதி அரச குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த கசோக்ஜி அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஆனால் கடந்தவருடம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் இதழில் சௌதி இளவரசரின் திட்டங்கள் மீது கடும் விமர்சனங்களை வைத்து கட்டுரைகளை தீட்டினார். தனது முதல் கட்டுரையில் இளவரசரின் மேற்பார்வையில் சௌதியில் தான் கைது செய்யப்படப்போவதாக அச்சத்தில் இருந்ததாக எழுதியிருந்தார். தனது கடைசி கட்டுரையில் யேமெனில் நடக்கும் போரில் சௌதி அரசின் ஈடுபாடு குறித்து விமர்சித்து எழுதியிருந்தார்.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!
[Wednesday 2024-05-15 06:00]

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.



பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவில் சீனாவுக்கு(China) உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.



கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இஸ்ரேலின் முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல்!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேலின் டெல் அவிவ்(tel aviv)இல் உள்ள முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல் அவிவ் - ஹாஷோமர் இராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி வீசா (graduate visa) என்னும் வீசா வழங்கப்பட்டு வருகிறது.



காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல்: 13 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.



துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை!
[Tuesday 2024-05-14 16:00]

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.



ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-05-14 16:00]

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.



அரசை எதிர்த்து கனேடிய மாகாணமொன்றில் உண்ணாவிரதம்: புலம்பெயர்ந்தோர் முடிவு!
[Tuesday 2024-05-14 16:00]

கனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



ரிஷி சுனக் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு!
[Tuesday 2024-05-14 06:00]

உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றியைக் கண்டுள்ள பிரித்தானிய(UK) எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் முன்வைத்துள்ளனர். எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரே வரி ஏய்ப்பு விடயங்களை செய்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.



பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை!
[Tuesday 2024-05-14 06:00]

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.



"ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்" - அமெரிக்க இராணுவம்!
[Tuesday 2024-05-14 06:00]

உக்ரைன் போரில் தனது இராணுவ வீரர்களின் இழப்பை ரஷ்யா(Russia) சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை புடின் தரப்பு கற்றுக்கொள்கிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய படைகளின் இறப்பு எண்ணிக்கை 465,000க்கும் அதிகம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



கனடாவில் மளிகைப் பொருட்கள் விலை குறைந்த இடம்?
[Monday 2024-05-13 18:00]

கனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!
[Monday 2024-05-13 18:00]

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்த வகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கொவிட் தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் பலி!
[Monday 2024-05-13 18:00]

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.



சுவிஸில் கவனக்குறைவால் கனேடிய பெண் சந்தித்த கசப்பான அனுபவம்!
[Monday 2024-05-13 18:00]

சுற்றுலா சென்றிருந்த கனேடிய பெண்ணொருவர், சுவிட்சர்லாந்தில் அபராதம் செலுத்த நேர்ந்ததால், வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கனேடிய குடிமகளான பூர்ணிமா தேவி (Poorneema Devi Bujun, 38) என்னும் பெண், ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மூன்று மாதங்கள் ஜேர்மனியில் தங்கியபின், மொரிஷியஸில் இருக்கும் தனது குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்ட அவர், சுவிட்சர்லாந்து வழியாக விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளார்.



டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
[Monday 2024-05-13 06:00]

டென்மார்க்கில் உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் (11.05.2024)முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.



கனடாவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை!
[Monday 2024-05-13 06:00]

கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளமையானது ஆய்வுகளின் மூலம்தெரியவந்துள்ளது.



எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாக அடைந்து சாதனை படைத்த நேபாளி!
[Monday 2024-05-13 06:00]

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.



மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!
[Sunday 2024-05-12 16:00]

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா