Untitled Document
May 15, 2024 [GMT]
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை - 'அமெரிக்காவில் அவசரநிலை கொண்டுவருவேன்'
[Saturday 2019-01-05 22:00]

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

  

அமெரிக்காவில் அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சம்பளமின்றி பணிபுரிந்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினருடனான டிரம்பின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தாலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் நடந்தது என்ன?

போதிய நிதியின்றி முடக்கியுள்ள அரசாங்கத்தின் செயல்பாட்டை சீரமைப்பதற்கு தடையாக உள்ள எல்லைச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த பிரச்சனை குறித்து, அதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடன் வெள்ளை மாளிகையில் பேசுவதற்கு டிரம்ப் 90 நிமிடங்களை ஒதுக்கியிருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி எல்லைச்சுவர் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்வது குறித்து யோசிக்கிறீர்களா என்று டிரம்பிடம் கேட்டபோது, 'ஆம்' என்று பதிலளித்தார். "அதற்கு வாய்ப்புள்ளது. தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்து, எல்லைச்சுவரை விரைந்து கட்ட முடியும். இலக்கை அடைவதற்கான மற்றொரு வழி அது" என்று டிரம்ப் கூறினார்.

"நான் செய்வதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இதை அரசுத்துறை முடக்கம் என்று கூறமாட்டேன். நாட்டின் பலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் செய்ய வேண்டிய ஒன்றாக நான் இதை கருதுகிறேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி "இது மோதல்போக்குக்கொண்டதாக" இருந்தது என்றும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சி தலைவரான சக் ஸ்கூம்மர், "அரசாங்கம் செயல்பட வேண்டுமென்று அதிபரிடம் கோரினோம். அவர் எதிர்த்தார்" என்று கூறினார்.

முரண்டு பிடிக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.

"கவர்ன்மென்ட் ஷட் டவுன்" என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 15 நாட்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார். அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 16 நாட்கள் நீடித்த கடைசி அரசாங்க பணி முடக்கம் 2013 இல் நிகழ்ந்தது.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!
[Wednesday 2024-05-15 06:00]

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.



பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவில் சீனாவுக்கு(China) உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.



கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இஸ்ரேலின் முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல்!
[Wednesday 2024-05-15 06:00]

இஸ்ரேலின் டெல் அவிவ்(tel aviv)இல் உள்ள முக்கிய இராணுவத் தளத்தில் பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல் அவிவ் - ஹாஷோமர் இராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி வீசா (graduate visa) என்னும் வீசா வழங்கப்பட்டு வருகிறது.



காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல்: 13 பேர் பலி!
[Tuesday 2024-05-14 16:00]

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.



துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை!
[Tuesday 2024-05-14 16:00]

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.



ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
[Tuesday 2024-05-14 16:00]

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதன் பயன்பாடு பல்வேறு தீமைகளையும் ஏற்படுத்துகிறது.



அரசை எதிர்த்து கனேடிய மாகாணமொன்றில் உண்ணாவிரதம்: புலம்பெயர்ந்தோர் முடிவு!
[Tuesday 2024-05-14 16:00]

கனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



ரிஷி சுனக் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு!
[Tuesday 2024-05-14 06:00]

உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றியைக் கண்டுள்ள பிரித்தானிய(UK) எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் முன்வைத்துள்ளனர். எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரே வரி ஏய்ப்பு விடயங்களை செய்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.



பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை!
[Tuesday 2024-05-14 06:00]

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.



"ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்" - அமெரிக்க இராணுவம்!
[Tuesday 2024-05-14 06:00]

உக்ரைன் போரில் தனது இராணுவ வீரர்களின் இழப்பை ரஷ்யா(Russia) சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை புடின் தரப்பு கற்றுக்கொள்கிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய படைகளின் இறப்பு எண்ணிக்கை 465,000க்கும் அதிகம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



கனடாவில் மளிகைப் பொருட்கள் விலை குறைந்த இடம்?
[Monday 2024-05-13 18:00]

கனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!
[Monday 2024-05-13 18:00]

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்த வகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கொவிட் தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் பலி!
[Monday 2024-05-13 18:00]

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.



சுவிஸில் கவனக்குறைவால் கனேடிய பெண் சந்தித்த கசப்பான அனுபவம்!
[Monday 2024-05-13 18:00]

சுற்றுலா சென்றிருந்த கனேடிய பெண்ணொருவர், சுவிட்சர்லாந்தில் அபராதம் செலுத்த நேர்ந்ததால், வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கனேடிய குடிமகளான பூர்ணிமா தேவி (Poorneema Devi Bujun, 38) என்னும் பெண், ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மூன்று மாதங்கள் ஜேர்மனியில் தங்கியபின், மொரிஷியஸில் இருக்கும் தனது குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்ட அவர், சுவிட்சர்லாந்து வழியாக விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளார்.



டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
[Monday 2024-05-13 06:00]

டென்மார்க்கில் உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் (11.05.2024)முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.



கனடாவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை!
[Monday 2024-05-13 06:00]

கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளமையானது ஆய்வுகளின் மூலம்தெரியவந்துள்ளது.



எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாக அடைந்து சாதனை படைத்த நேபாளி!
[Monday 2024-05-13 06:00]

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.



மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!
[Sunday 2024-05-12 16:00]

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா