Untitled Document
May 13, 2024 [GMT]
திருகோணமலையில் பிரிட்டனின் கடற்படைத் தளம்?
[Saturday 2019-01-12 19:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியபிறகுதெற்காசியாவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான  திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ பிரிட்டன்  திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியபிறகுதெற்காசியாவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

  

உலகளாவிய விவகாரங்களில் வல்லாதிக்க அந்தஸ்தை மீளப்பெறும் முகமாக தெற்காசியாவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் பிரிட்டன் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகிறது. அதை நோக்கிய திட்டத்தில் இந்த பிராந்தியங்களின் நாடுகளில் இராணுவத்தளங்களை பிரிட்டன் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசியாவில் இராணுவத்தளங்களைத் திறக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ற் சூசகமாகத் தெரிவித்திருப்பதாகவும் அதற்கான சாத்தியமான நாடுகளாக இலங்கை, மாலைதீவு அல்லது சிங்கப்பூர் அமையக்கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.

பிரெக்சிட்டுக்குப் பிறகு திருகோணமலையில் பிரிட்டன் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளை பிராந்திய வல்லரசான இந்தியா வரவேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையைப் பொறுத்தவரை, திருகோணமலைத் துறைமுகத்திற்குள் பிரிட்டன் வருமாக இருந்தால் அது இலாபகரமான ஒரு திட்டமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த துறைமுகத்தின் கேந்திரமுக்கியத்துவம் காரணமாக எழக்கூடிய அசௌகரியமான சூழ்நிலையையும் தவிர்க்க வாய்ப்பாக இருக்கும் என்பது அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது.

இது தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் ரெலிகிராஃப் பத்திரிகையில் பாதுகாப்பு இணையமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்த தகவலை வெளியுறவு அமைச்சர் ஹன்ரும் ஊர்ஜிதம் செய்தார்.

" சர்வதேசரீதியில் பிரிட்டனின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடுவதை பிரிட்டிஷ் பிரஜைகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். பிரெக்சிட்டுக்குப் பிறகு உலக அரங்கில் ஐக்கிய இராச்சியம் உயர்ந்துநிற்கும் என்பதை பிரஜைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்" என்று ரெலிகிராஃப் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இராணுவத்தளமொன்றை அமைக்கும் சாத்தியம் குறித்து கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, பாதுகாப்புத்துறையில் பிரிட்டனுக்கு இருக்கக்கூடிய உலகளாவிய பாத்திரத்தை அவர் நிராகரிக்கவில்லை என்ற போதிலும் இலங்கையில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இப்போது பிரிட்டனுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

" பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கை விவகாரங்களில் உலகளாவிய பங்கை பிரிட்டன் வகிக்கிறது.தொடர்ந்தும் வகிக்கும்.இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் ஏற்பாடுகள் தொடர்பில் எம்மிடம் தற்போது திட்டம் எதுவும் கிடையாது " என்று அவர் கூறினார்.

பிரெக்சிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. தனது பிரெக்சிட் திட்டத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதில் அவர் பெரும் போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது. திருகோணமலையில் இராணுவத் தளம் அமைப்பதற்கான திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெற்றிகரமாக வெளியேறிய பின்னர தோன்றக்கூடிய நிலைவரங்களின் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டியதாகும்.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது!
[Monday 2024-05-13 17:00]

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையில் தொற்று நோய் அபாயம் - வெசாக்கிற்கும் தடை வருமா?
[Monday 2024-05-13 17:00]

தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார், அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.



கஞ்சிக்கு விதித்த தடை வெசாக் தன்சல்களுக்கும் பொருந்துமா?
[Monday 2024-05-13 17:00]

நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.



நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!
[Monday 2024-05-13 17:00]

நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் , கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சை விஞ்ஞானம், ஆங்கில பாட வினாத்தாள் சர்ச்சை! - அமைச்சர் விளக்கம்.
[Monday 2024-05-13 17:00]

க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் டொனால்ட் லூ!
[Monday 2024-05-13 17:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.



தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே நல்லது!
[Monday 2024-05-13 17:00]

இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சிறிதரன்!
[Monday 2024-05-13 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.



மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஜீப்! - இளைஞனின் கால்கள் முறிந்தன.
[Monday 2024-05-13 17:00]

யாழ்ப்பாணம் - இலுப்பையடிச் சந்திப் பகுதியில் நேற்று மாலை ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!
[Monday 2024-05-13 16:00]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.



சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மக்களுக்கு அச்சுறுத்தல் - பெண் கைது! Top News
[Monday 2024-05-13 05:00]

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிசார் நேற்று மிரட்டியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - வேலணையில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-13 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!
[Monday 2024-05-13 05:00]

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.



குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வு செலவு ஒரு இலட்சத்தைத் தாண்டியது!
[Monday 2024-05-13 05:00]

இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவு 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 05:00]

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.



விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
[Monday 2024-05-13 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.



இடைக்கால அரசுக்கு சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை!
[Monday 2024-05-13 05:00]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
[Monday 2024-05-13 05:00]

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார்.



வவுனியாவில் நுங்குத் திருவிழா! Top News
[Monday 2024-05-13 04:00]

வவுனியா - மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!
[Monday 2024-05-13 04:00]

கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா