Untitled Document
May 13, 2024 [GMT]
வடக்கிற்கு பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்க விடமாட்டோம்!
[Monday 2019-01-14 08:00]

புதிய அர​சமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி, ஊடகப் பேச்சாளர் விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.

புதிய அர​சமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி, ஊடகப் பேச்சாளர் விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.

  

உலக நாடுகளைப் போன்று, இலங்கையிலும் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, புதிய சமூகத்துக்கு பொருத்தமான அரசமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த அரசமைப்பினூடாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, சகலரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரினார்.

2015ஆம் ஆண்டில், புதிய அரசமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2006ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போதும், அதற்குரிய முன்னெடுப்புகள் இடம்பெற்றன என்றுத் தெரிவித்த விஜித்த எம்.பி, அந்த அனைத்துச் சந்தர்பங்களிலும், ஜே.வி.பியின் பங்களிப்பு இருந்ததெனச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அரசமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழுவினால், ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் போனதன் காரணமாகவே, அக்குழுவின் அறிக்கையை இன்றுவரையில் வெளிபடுத்த முடியாமல் போயுள்ளது எனவும் குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க, மஹிந்த அணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இவ்வாறான நிலைமையிலேயே, புதிய அரசமைப்பு வடிவம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்டவில்லையென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்தாகக் கூறிய விஜித்த ​ஹேரத், புதிய அரசமைப்பு, நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்கும் என்றும், அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்ள கையுர்த்தும் எம்.பிக்களுக்கு, 400 மில்லியன் வழங்கப்படுவதாகவும், போலிப் பி​ரசாரங்கள் செய்யபட்டனவெனச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், 20ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றியும் போலிப் பிரசாங்கள் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மஹிந்த அணியினர் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரும் சுமந்திரன் எம்.பியும் கூட, இவ்வாறான பிரசாரங்களை செய்துள்ளனரெனத் தெரிவித்ததோடு, மக்கள் இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற்றமடையக் கூடாதென்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மக்களுக்கு அச்சுறுத்தல் - பெண் கைது! Top News
[Monday 2024-05-13 05:00]

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிசார் நேற்று மிரட்டியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - வேலணையில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-13 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!
[Monday 2024-05-13 05:00]

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.



குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வு செலவு ஒரு இலட்சத்தைத் தாண்டியது!
[Monday 2024-05-13 05:00]

இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவு 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 05:00]

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.



விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
[Monday 2024-05-13 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.



இடைக்கால அரசுக்கு சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை!
[Monday 2024-05-13 05:00]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
[Monday 2024-05-13 05:00]

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார்.



வவுனியாவில் நுங்குத் திருவிழா! Top News
[Monday 2024-05-13 04:00]

வவுனியா - மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!
[Monday 2024-05-13 04:00]

கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பொது வேட்பாளர் விவகாரம் - தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராகிறது சிவில் பிரதிநிதிகள் குழு!
[Sunday 2024-05-12 17:00]

தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது.



தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? -சிறீதரனிடம் துளாவினார் இந்தியத் தூதுவர்.
[Sunday 2024-05-12 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார்.



பொதுவேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்! - என்கிறார் சம்பந்தன்.
[Sunday 2024-05-12 17:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.



பொது வேட்பாளர் குறித்து ஆராய வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய குழு!
[Sunday 2024-05-12 17:00]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.



சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச - வழிவிட்டு ஒதுங்கினார் மைத்திரி!
[Sunday 2024-05-12 17:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கோட்டையில் இடம்பெற்றமைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம்! - முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம். Top News
[Sunday 2024-05-12 17:00]

தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.



வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி- பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது!
[Sunday 2024-05-12 17:00]

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கைப் படையினர் பலி!
[Sunday 2024-05-12 17:00]

ரஷ்யா - உக்ரேன் போரில் கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.



ஆங்கில பாட வினாத்தாளை வட்ஸ்அப்பில் அனுப்பிய ஆசிரியர் கைது!
[Sunday 2024-05-12 17:00]

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!
[Sunday 2024-05-12 17:00]

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா