Untitled Document
May 17, 2024 [GMT]
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்!- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
[Wednesday 2019-01-30 08:00]


சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் முன்னெடுக்க இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது தார்மீக ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகளைத் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு உலகத் தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் முன்னெடுக்க இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது தார்மீக ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகளைத் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு உலகத் தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.

  

பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் சுயநலன் சார் நலன்களை மையப்படுத்தியதான நிலைமாறுகால நீதி பொறிமுறைக்குள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கான பரிகார நீதியை பெறுவதற்கான களமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டமே இன்று காணப்படுகின்றது. சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும், போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் நேரில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் சாட்சியங்களாக அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் இருந்து வருகின்றார்கள். சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் முன்னெடுக்க இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது தார்மீக ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகளைத் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு உலகத் தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரது துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் சித்திரவதைக்கு உள்ளாகியிருந்தமையும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் ஆதாரபூர்வமாக புகைப்பட, காணொளி ஆதாரங்களுடன் பல்வேறு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ள போதிலும் அச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய இராணுவத்தினர் மீதோ அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்த உயர் அதிகாரிகள் மீதோ இதுவரை ஏதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவும் இல்லை, அதற்கான அழுத்தங்களும், நெருக்கடிகளும் சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்ட வரையறைக்குள்ளாக மேற்கொள்ளப்படவும் இல்லை.

மாறாக, அவ்வாறானவர்களை பாதுகாப்பதிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுவதிலுமே சிறிலங்கா அரசு அக்கறை காட்டி வருகின்றது. இதனை தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்ந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் கண்டும் காணாது இருந்து வருவது தமிழர்களின் துர்ப்பாக்கியமாகும். ஆகவே, இனியும் தாமதிப்போமாயின் எமக்கான நீதியானது எமது வாக்குப் பலத்தின் ஊடாக எமது தலைமையாக நாம் ஏற்றிவைத்தவர்களின் கள்ளமௌனத்தை சாட்சியாக்கி குழிதோண்டிப் புதைக்கபடுவது திண்ணம்.

வடக்கு-கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கப்படவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகள் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு கேட்டுக் கொள்வதுடன் உலகத் தமிழர்கள் சார்பில் எமது தார்மீக ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா