Untitled Document
April 27, 2024 [GMT]

[Friday 2019-02-08 08:00]

பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், நேர்மை மற்றும் வளர்ச்சிக்காக அறியப்பட்ட அரசு என்றும் மோதி அப்போது குறிப்பிட்டார். இந்திய மக்களுக்குப் பதில் சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும் நரேந்திர மோதி கூறினார். எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இயல்பானதுதான் என்று குறிப்பிட்ட மோதி, ஆரோக்கியமான போட்டியை அவர்களிடம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது சாதனைகளுக்காக அறியப்பட்டது என்று கூறிய மோதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் தலைமுறை தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், நேர்மை மற்றும் வளர்ச்சிக்காக அறியப்பட்ட அரசு என்றும் மோதி அப்போது குறிப்பிட்டார். இந்திய மக்களுக்குப் பதில் சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும் நரேந்திர மோதி கூறினார். எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இயல்பானதுதான் என்று குறிப்பிட்ட மோதி, ஆரோக்கியமான போட்டியை அவர்களிடம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது சாதனைகளுக்காக அறியப்பட்டது என்று கூறிய மோதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் தலைமுறை தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

  

நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

தமது உரையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மோதி BC என்றால் Before Congress என்றும் AD என்றால் After Dynasty என்றும் எள்ளலாகக் குறிப்பிட்டார். "ஜனநாயகத்தில் விமர்சனம் மிகவும் முக்கியமானது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தில் உண்மை இல்லை," என மோதி கூறினார்.

தமது உரையில் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக விமர்சித்த மோதி, தங்கள் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி சுமத்தியது என்று கூறினார். அரசமைப்பின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளைப் பாதுகாப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் என்.டி.ஆர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பி, அவர்கள் ஆட்சி இந்திரா காந்தியின் ஆட்சியில் கலைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

மாநில அரசுகளை கலைக்க வழிவகை செய்யும் அரசியல்சாசன சட்டப்பிரிவு 356 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குறைந்தது 100 முறை பயன்படுத்தப்பட்டது என்று குற்றம்சாட்டிய மோதி, தம்மைத் தாக்குவதற்காக இந்தியாவுக்கு காங்கிரஸ் அவப்பெயரை உண்டாக்குவதாகக் கூறினார். கடந்த 55 மாதங்களில் 13 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளதாகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரண்டரை கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியதாகவும் காங்கிரஸ் கட்சி செய்யாமல்விட்டவற்றை செய்ததாகவும் மோதி கூறினார். "நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன். அவர்களுக்காகவே நான் இங்கு உள்ளேன்," என்று மோதி தெரிவித்தார். "உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவானபோது, தங்களை எதிர்க்கட்சியாகக் கூட காண முடியாதவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டனர். ஆனால், தற்போது இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவாகியுள்ளது அவர்களுக்கு வருத்தமளிக்கிறது," என்றார் மோதி.

கொள்ளை அடிப்பவர்களை கொள்ளையடிக்க காங்கிரஸ் கட்சி அனுமதித்ததாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையான சட்டங்களை இயற்றி, அவர்களை திரும்பக் கொண்டுவந்ததாக குறிப்பிட்டார் மோதி. "ஒரு பெரும்பான்மை அரசு என்ன செய்ய முடியும் என்பதை மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்துள்ளனர். சமீபத்தில் கொல்கத்தாவில் கூடியவர்களைப் போன்ற கலப்படம் நிறைந்த கூட்டணிகளின் அரசுகளை மக்கள் விரும்பவில்லை," என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எதிர்ப்புக்குரலுக்கு இடையே மோதி கூறினார்.

காங்கிரஸ் அரசிடம் இருந்து வாராக்கடன் பிரச்சனையை ஏற்றதாகக் கூறிய மோதி தமது ஆட்சியில் வாராக்கடன் பிரச்சனை அதிகரிக்கவில்லை என்றார். "முப்படைகளின் பலத்தைப் பெருக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தான அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் ஓர் இடைத்தரகர் இருந்தார்," என்று மோதி குற்றம்சாட்டினார். பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு சுமார் மூன்று லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஊழலை எதிர்த்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டதாவும் மோதி தெரிவித்தார்.

'காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம்'

'காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம்' என்பது மகாத்மா காந்தியின் விருப்பம் என்றும், காந்தி சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைக்க விரும்பினார் என்றும் மோதி தெரிவித்தார். "காங்கிரஸ் கட்சியில் சேர்வது தற்கொலை செய்வதற்கு சமம் என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார், " என்றார் மோதி.

எல்லோரும் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும்போது, காங்கிரஸ் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவது ஏன் என்றும் எந்த நிறுவனத்துக்காக அதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய மோதி, இந்தியாவுக்கு வலிமையான விமானப்படை இருப்பதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் இருந்ததாகவும், தற்போது 99% பொருட்களுக்கு 18%க்கும் குறைவான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) உள்ளதாகவும் மோதி கூறினார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை தமது ஆட்சிக்காலத்தில் குறைந்துள்ளது என்றும், அமைப்பு சாரா துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் மோதி தெரிவித்தார்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை

விவசாயிகளின் மேம்பாடு தங்கள் முன்னுரிமை என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக தணிக்கைத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக மோதி பேசினார். ஜவஹர்லால் நேரு காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட நீர்பாசனத் திட்டங்களைத் தாம் தொடங்கி வைப்பதாகவும் மோதி கூறினார்.

வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசிய மோதி, "இந்தியா, எதிரெதிர் தரப்பில் உள்ள இஸ்ரேல் - பாலத்தீனம் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புடன் இருக்கும், இரான் - சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனும் நட்புடன் இருக்கும். நமது வெளியுறவுக் கொள்கையால் உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது," என்றார். பிரதமரின் உரைக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.

  
   Bookmark and Share Seithy.com



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!
[Saturday 2024-04-27 06:00]

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
[Friday 2024-04-26 18:00]

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.



குடும்பத்தோடு மாலத்தீவுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர்!
[Friday 2024-04-26 18:00]

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 -ம் திகதி குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா