Untitled Document
April 27, 2024 [GMT]
காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்திடம் '20 கோடி' லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள்.
[Wednesday 2019-02-20 08:00]

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  

பிரபல மென்பொருள் நிறுவனம்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்டின் மிகப்பெரிய அலுவலகங்கள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

1994-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து பார்ச்சுன் இதழின் உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 2011ஆம் ஆண்டு இணைந்தது. அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை மாநில அரசிடமிருந்து பெறுவதற்கு மொத்தமாக 26 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் அந்நிறுவனத்தின் தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

சென்னையில் மட்டும் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு சிறுசேரி, சோழிங்கநல்லூர், சானடோரியம் உள்ளிட்ட பல இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக, சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 2.7 மில்லியன் சதுர அடி பரப்பில், சுமார் 17,500 பணியாளர்கள் வேலை செய்யக்கூடிய வகையிலான கட்டடத்தை கட்டும் பணி உரிய அனுமதியின்றி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பொறுப்பு இந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தேவையான அனுமதிகள் எதுவுமின்றி மூன்றாண்டுகள் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், உரிய அனுமதியை பெறுவதற்கு சுமார் 14 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தரப்பில் அந்தக் கட்டுமான நிறுவனத்திடம் கேட்கப்பட்டதாக காக்னிசன்ட் நிறுவனம், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, 2014ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிலுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"காக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த சட்ட ஆலோசகர், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை சிக்கல் ஏதுமின்றி செயல்படுத்துவது என்பதை விளக்கினார். அதைத்தொடர்ந்து லஞ்சத்தை காக்னிசன்ட் நிறுவனம் நேரடியாக அளிக்காமல், கட்டுமான நிறுவனத்தின் மூலம் அளிக்க செய்து, அவர்களுக்கு அந்த பணத்தை வேறு வகையில் திரும்ப அளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு, அந்த பணி ரியல் எஸ்டேட் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

முதலில் லஞ்சத்தை அளிப்பதற்கு மறுத்த கட்டுமான நிறுவனம், பிறகு காக்னிசன்ட் நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக 14 கோடி பணத்தை 2014ஆம் ஆண்டு மே-ஜூனுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியது. அதற்கு ஈடாக கூடுதல் 4 கோடி ரூபாய் கமிஷன் உள்பட 18 கோடி ரூபாயை 2015 மார்ச், 2016 ஜனவரியில் காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப வழங்கியது.

அதாவது, கட்டுமான நிறுவனத்தை நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வழங்க வைத்ததன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதாக நினைத்த காக்னிசன்ட் நிறுவனம், முறைகேடாக கணக்குக்காட்டி 18 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

இரண்டாவது முறையாக லஞ்சம்

காக்னிசன்ட் நிறுவனத்தின் சிறுசேரி கிளை அலுவலக கட்டுமான பணிகளுக்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை தமிழ்நாடு அரசிடமிருந்து பெறுவதற்காக 2012ஆம் ஆண்டு, அதே கட்டுமான நிறுவனத்தின் தரப்பில், காக்னிசன்ட் நிறுவனத்தின் சார்பாக சுமார் $840,000 அதாவது, ஆறு கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அனைத்து ஒப்புதல்களையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சத்தை திரும்ப பெறுவதற்காக கட்டுமான நிறுவனம் விடுத்த சில கோரிக்கைளை பல்வேறு காரணங்களை கூறி காக்னிசன்ட் நிராகரித்தது. பிறகு, கட்டுமான நிறுவனம் பணத்தை கேட்பதற்கான காரணத்தை மாற்றியவுடன், 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பல தவணைகளில் காக்னிசன்ட் நிறுவனம் பணத்தை திரும்ப அளித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

லஞ்சம் வாங்கிய மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் சென்னையை போன்றே மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை அமைக்கும் பணிகள் உரிய அனுமதியின்றி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த கட்டடத்தை திறப்பதற்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை அளிப்பதற்கு அம்மாநில அரசு அதிகாரிகள் 5.50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டனர். எனவே, அதே கட்டுமான நிறுவனத்தை கொண்டு 5.50 கோடி ரூபாய் லஞ்சம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகளுக்கு 2013ஆம் ஆண்டு தொடக்க பகுதியில் வழக்கப்பட்டது. அதையடுத்து விரைவிலேயே சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டது.

பின்பு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறைகேடான காரணத்தை காட்டி, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு 5.50 கோடி ரூபாயை காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப செலுத்தியதாக அமெரிக்காவில் இதுகுறித்த நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள காக்னிசன்ட் அலுவலகங்களில் சமையலறை இயக்க வசதிகள், காற்று மற்றும் தண்ணீருக்கான ஒப்புதல், பாதுகாப்பு மற்றும் கட்டடத்தின் பிற செயல்பாட்டு தொடர்பான அனுமதிகளை பெறுவதற்கு பல்வேறு தரப்பினருக்கு சுமார் 19 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே முன்வந்து விளக்கமளித்த காக்னிசன்ட்

தனது நிறுவனத்தில் நடைபெற்ற உயர்மட்ட அளவில் நடந்த முறைகேடான பணப்பரிமாற்றங்கள் குறித்து காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தகவல்களை தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் தக்க நேரத்தில், தெளிவாக வழங்கியதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தனது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்தது முற்றிலும் தவறான செயல்பாடு என்பதால், பல்வேறு சட்டவிதிகளின்படி காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 180 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகையை வரும் 25ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும், இந்த விவகாரத்தோடு தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காக்னிசன்ட் நிறுவனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாவண்ணம் நிர்வாக அமைப்புமுறை தொடங்கி, நிதி மேலாண்மை, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட பல நிலைகளிலும் தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் கருத்துக்கள் உடனடியாகக் கிடைக்கப் பெறவில்லை.

  
   Bookmark and Share Seithy.com



மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: 2 வீரர்கள் பலி!
[Saturday 2024-04-27 18:00]

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.



ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி!
[Saturday 2024-04-27 18:00]

மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.



விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்: ஆசிரியர்கள் செய்த செயல்!
[Saturday 2024-04-27 18:00]

தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகின.



தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!
[Saturday 2024-04-27 18:00]

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



நூதன மோசடியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் கைது!
[Saturday 2024-04-27 06:00]

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.



வெப்ப அலை முன்னெச்சரிக்கை: ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு!
[Saturday 2024-04-27 06:00]

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!
[Saturday 2024-04-27 06:00]

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்: அபாயத்தின் எச்சரிக்கையா?
[Friday 2024-04-26 18:00]

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (Coral Reefs) இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



இந்திய மக்களவை தேர்தலுக்கு ஏற்பட்ட செலவு தெரியுமா?
[Friday 2024-04-26 18:00]

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தேர்தல் என்றால் அது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல், உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2019 -ம் ஆண்டு நடைபெற்றது.



குடும்பத்தோடு மாலத்தீவுக்கு செல்லும் தமிழக முதலமைச்சர்!
[Friday 2024-04-26 18:00]

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 -ம் திகதி குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 18:00]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2024-04-26 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!
[Friday 2024-04-26 06:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - அமித்ஷா!
[Friday 2024-04-26 06:00]

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்!
[Thursday 2024-04-25 18:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே!
[Thursday 2024-04-25 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.



தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நாளை தீர்ப்பு!
[Thursday 2024-04-25 18:00]

தமிழகத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. 2018 ஆண்டில் கல்லூரி மாணவிகள் சிலரை, ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.



பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
[Thursday 2024-04-25 18:00]

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா