Untitled Document
May 26, 2024 [GMT]
400க்கும் மேற்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்!
[Wednesday 2019-04-03 08:00]

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

  

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக 2016 ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை இந்திய சட்டக்குழுவினர் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்து வருகிறது. அவரை சந்திக்க அனுமதிக்கும்படியும் பாகிஸ்தானுக்கு மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சிறார்கள் உட்பட 27 பேர்கள் உடல் கருகி பலியான கோர சம்பவம்!
[Sunday 2024-05-26 08:00]

இந்திய மாகாணம் குஜராத்தில் கேளிக்கை விடுதியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறார்கள் உட்பட 27 பேர்கள் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாகாணத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் gaming zone அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர். இந்த நிலையில், தொடர்புடைய கேளிக்கை விடுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.



'ரிமால்' புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையம் மூடல்!
[Sunday 2024-05-26 08:00]

வங்கக் கடலில் உருவான 'ரிமால்' புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிமால் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரையை ஒட்டிய பகுதியில் ரிமால் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
[Sunday 2024-05-26 08:00]

டெல்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் உள்ள 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஆறு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் என்னை செய்யவைக்கிறார்: மோடியின் அண்மை பேச்சு!
[Saturday 2024-05-25 18:00]

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மா தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஏதாவது ஒரு விடயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்.



"ரோசப்பட்டு கட்சியை கலைக்க வேண்டாம்" - சீமானை விமர்சிக்கும் பாஜக!
[Saturday 2024-05-25 18:00]

நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் கூறிய நிலையில், தற்போது அதனை பாஜக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.



ரூ.640 கோடியில் ஆடம்பர சொகுசு வில்லா: மருமகளுக்கு பரிசளித்த அம்பானி மனைவி!
[Saturday 2024-05-25 18:00]

மருமகள் ராதிகா மெர்சண்டிற்கு ரூ.640 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு வில்லா ஒன்றை நீடா அம்பானி பரிசளித்துள்ளார். Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.



குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்!
[Saturday 2024-05-25 18:00]

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் திகதி படவுன் என்ற இடத்தில் நடைபெற்றது.



'காங்கிரஸுக்கு எத்தனை வாக்குகள்'-முகவர்களிடம் கணக்கு வாங்கும் ப.சிதம்பரம்!
[Saturday 2024-05-25 06:00]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களமிறக்கப்பட்டு தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் காங்கிரஸ் கட்சிக்கு உத்தேசமாக எத்தனை வாக்குகள் கிடைத்திருக்கும் என்பதை பூத் வாரியாக பதிவான வாக்குகள் அடிப்படையில் தேர்தல் கணக்கு போட்டு வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.



அதிரடி ரெய்டு: 1000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!
[Saturday 2024-05-25 06:00]

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அல்லேரி பலாமரத்து ஓடை வனப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரியப்பெரிய டிரம்களில் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



கைகள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்த சிறார்களின் உடல்கள்!
[Saturday 2024-05-25 06:00]

சென்னையில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனும் சிறுமியும் கடலில் சடலமாக மிகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீசாந்த் மற்றும் சந்தியா சிறுவர் சிறுமியான இவர்கள் அண்மையில் காணாமல் போனதாக இரு வீட்டாரின் பெற்றோர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் இருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.



“பட்டியலினத்தவர்கள் ஊழல்வாதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
[Friday 2024-05-24 18:00]

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



எங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன்: சீமான்!
[Friday 2024-05-24 18:00]

பாரதிய ஜனதா கட்சியானது நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்கு சதவீதம் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று சீமான் கூறியுள்ளார். சிவந்தி ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மாலை அணிவித்தார்.



வங்கப்போரின் போது பிரதமராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்: மோடி கூறும் முக்கிய விடயம்!
[Friday 2024-05-24 18:00]

வங்கதேச போரின்போது தான் பிரதமராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பஞ்சாபின் பாட்டியாலாவில் தனது முதல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், " வங்க போரின்போது தாம் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள கர்தார்பூர் குருத்வாராவை மீட்டு இருப்பேன்.



மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த இந்திய ஜோதிடர்!
[Friday 2024-05-24 18:00]

மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான திகதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் பேசப்பட்டு வருகிறது. மூன்றாம் உலகப்போருக்கான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பல தசாப்தங்களாக யூகிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் தாக்கமே இன்னும் மக்கள் மனதில் அழியாமல் இருக்கும் நிலையில், மற்றொரு போர் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் மிதந்த சோகம்!
[Friday 2024-05-24 06:00]

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை 1010 காலனியைச் சேர்ந்தவர் கல்பனா (39). இவரது கணவர் பழனிசாமி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதங்களாக கல்பனாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.



காரில் கஞ்சா கடத்தல்: இருவர் கைது!
[Friday 2024-05-24 06:00]

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பான செய்திகள் பரவலாகி வரும் நிலையில் போதைப்பொருள் புழக்கத்தோடு மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.



தடுப்பணை விவகாரம்: கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
[Friday 2024-05-24 06:00]

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



விரைவில் முதல்வரைச் சந்திக்க இருக்கும் கூகுள் அதிகாரிகள்!
[Thursday 2024-05-23 18:00]

தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் ஆலை உருவாக இருக்கும் நிலையில் விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் அதிகாரிகள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் சென்னையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல்' செல்போன் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக அமைகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனம் அமைய உள்ளது.



“இந்தியா கூட்டணி அழுது புலம்புகிறது” - பிரதமர் மோடி விமர்சனம்!
[Thursday 2024-05-23 18:00]

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.



‘காவி உடையில் திருவள்ளுவர்’ - ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழ்!
[Thursday 2024-05-23 18:00]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா