Untitled Document
May 26, 2024 [GMT]
"விமான நிலையம் முன் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை": தாய்லாந்து அரசு!
[Wednesday 2019-04-10 17:00]

விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாய் காவோ ((Mai Khao)) என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.

விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாய் காவோ ((Mai Khao)) என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.

  

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக மாய் காவோ விமானநிலையம் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மகனுக்காக போராடிய தந்தையை சிறையில் தள்ளிய நாடு!
[Sunday 2024-05-26 08:00]

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மகனுக்காக போராடிய தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில் கைதானவர்களில் ஒருவர் Mohammad Mehdi Karami. பல மாதங்கள் நீடித்த போராட்டங்களின் போது துணை ராணுவ வீரர் ஒருவரை கொலை செய்ததாக கூறி தொடர்புடைய இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.



விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க பாடகி!
[Sunday 2024-05-26 08:00]

பிரபல பாடகி நிக்கி மினாஜ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடக்கவிருந்த அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க சொல்லிசை பாடகியான Nicki Minaj ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.



புற்றுநோயுடன் போராடும் மன்னர் மற்றும் கேட் மிடில்டன்!
[Sunday 2024-05-26 08:00]

பிரித்தானிய அரச குடும்பத்தில் தற்போது இளவரசி பீட்ரைஸ் அதிக கவனிப்பைப் பெற்றுவருவதாக தகவல் கசிந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் சார்லஸ் மன்னருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் இளவரசி பீட்ரைஸ் உதவிகள் செய்ய முன்வருவார் என்றும், ஆனால் இது உத்தியோகப்பூர்வ பணியாக இருக்காது என்றும், அதனால் அவர்ருக்கு சம்பளமும் வழங்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.



கடல் மட்டிகளை சேகரித்த குழந்தைகளால் தாய்க்கு லட்சம் அபராதம்!
[Saturday 2024-05-25 18:00]

கனடாவில், மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் பலியான வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



கனடாவில் சாலை விபத்தில் பலியான இந்தியக் குடும்பம்!
[Saturday 2024-05-25 18:00]

கனடாவில், மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் பலியான வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு!
[Saturday 2024-05-25 18:00]

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போரில் ‘யு.எஸ்.எஸ் ஹார்டர்’ என்ற அமெரிக்க கப்பல் எதிரிப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது.



சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் பதிலடி!
[Saturday 2024-05-25 18:00]

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த கூறிய சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதுடன், ரபாவில் போர் இலக்குகள் தொடரும் என இஸ்ரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



ஆசிய நாடொன்றில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள்!
[Saturday 2024-05-25 06:00]

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், கிர்கிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.



ரிஷி சுனக் எதிர்கொள்ளும் அடுத்த பெரும் சிக்கல்!
[Saturday 2024-05-25 06:00]

முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் உட்பட ரிஷி சுனக் கட்சியின் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் தாங்கள் போட்டியிடுவதில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளனர். இது தற்போது ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 1997ல் லேபர் கட்சியின் டோனி பிளேர் பெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றும் முன்னர், சுமார் 75 கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகினர்.



கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு!
[Saturday 2024-05-25 06:00]

கனடாவில் மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றில், 16 பேர்கள் கொல்லப்பட காரணமான சாரதியை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய Humboldt Broncos பேருந்து விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது விபத்திற்கு காரணமான சாரதியை நாடு கடத்த முடிவாகியுள்ளது.



பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியில் சாதனை படைத்த தமிழன்!
[Friday 2024-05-24 18:00]

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார். தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்ததாக பிரின் பிரதாபன் கூறியுள்ளார்.



கனடாவில் சிறுமிகளை துஸ்பிரயோகித்த தமிழர்!
[Friday 2024-05-24 18:00]

கனடாவில் சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்த 20 வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கடந்தாண்டில் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



உலகம் முழுவதும் பிரபலமடைந்த கபோசு நாய் உயிரிழப்பு!
[Friday 2024-05-24 18:00]

மீம் கிரியேட்டர்களால் உலகம் முழுவதும் பிரபலமடைந்த கபோசு நாய் உயிரிழந்துள்ளமை சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கபோசு நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்கள் வெளிவந்தன. பிரபலமான கதாபாத்திரங்களை மீம்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் மீம்கள் பிரபலமானது.



கனடா புலம்பெயர்தல் அமைப்பின் தவறால் குடியுரிமை இழந்த பெண்ணுக்கு மீண்டும் குடியுரிமை!
[Friday 2024-05-24 18:00]

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பின் தவறால் குடியுரிமை இழந்த பெண்ணுக்கு, மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார். 1991ஆம் ஆண்டு, அவருக்கு Arielle Townsend என்னும் பெண் குழந்தை பிறந்துள்ளது.



இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!
[Friday 2024-05-24 06:00]

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



கனடாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்!
[Friday 2024-05-24 06:00]

கனடா அரசாங்கம் வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. கனேடிய குடியுரிமை உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறது. இது வாக்களிக்கும் உரிமையையும், அரசியல் பதவிக்கு போட்டியிடுவதற்கும் மற்றும் கனேடிய கடவுச்சீட்டை வைத்திருக்கும் உரிமையையும் வழங்குகிறது. முக்கியமாக புலம்பெயர்ந்தோருக்கு, நாட்டுடன் ஒருங்கிணைய குடியுரிமை என்பது எவ்வளவு முக்கியம் என தெரியும்.



பிறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட ஈரான் ஜனாதிபதி!
[Friday 2024-05-24 06:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மஷாத் நகரில் தகனம் செய்யப்பட்டது. இப்ராஹிம் ரைசி பிறந்த அதே மஷாத் நகரத்தில், சமன் அல்-ஹஜ்ஜாஜ் அலி பின் மூசா அல்-ராஜாவின் ஷெரீஃப் ஆலயத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ரைசியின் இறுதிப் பயணத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு சுமார் 30 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அவர்களது கையில் ஈரானின் கொடியும், ரைசியின் படங்களும் இருந்தன.



கனடாவில் சில சந்தேக நபர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Thursday 2024-05-23 18:00]

கனடாவில் சில சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஆயுத முனையில் விடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து சந்தேக நபர்கள் மீதும் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



மீண்டும் தாய்வானுக்கு பீதியை கிளப்பும் சீனாவின் செயல்!
[Thursday 2024-05-23 18:00]

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை மிரட்டுவதற்காக சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அந்நாட்டை சுற்றி சீனா இன்று காலை திடீரென்று இரண்டு நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.



இப்ராஹிம் ரைசி இறுதிப்பயணம்: அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்!
[Thursday 2024-05-23 18:00]

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (22) இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது பேரினதும் பூதவுடல்கள் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா