Untitled Document
May 2, 2024 [GMT]
சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் - தமிழின அழிப்பு நாள் மே 18 - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
[Friday 2019-05-17 16:00]

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும்.

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும்.

  

மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான நீதியும், இன்றும் தமிழர் தேசத்தில் நடைபெறும் கட்டமைப்புசார் இன அழிப்பிற்கும் எமக்கான பரிகாரநீதி திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருகின்றமை நாம் அனைவரும் ஒற்றுமையாக விடுதலையை நோக்கிய உயரிய சிந்தனையை மனதில் நிறுத்தி தொடர்ந்தும் போராடவேண்டும் என்பதையே காலம் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது.

தமிழினப்படுகொலை நடந்தேறிய/நடைபெறும் எமது தாயகத்தில் உள்ள மக்களால் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமைகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறம்தள்ளி மக்களின் நிலையில் நின்று செயலாற்றாது, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசின் நலன்களை சார்ந்தே செயற்பட்டு வந்ததன் விளைவு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரதான கோரிக்கையாக முன்னிறுத்தப்பட்டுவந்த தமிழினப்படுகொலை விவகாரம் வலுக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளின் அரச சார்பு நிலையானது, அனைத்துலக தளத்தில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் அமைப்புகளின் வகிபாகத்தினையும் பலவீனப்படுத்தியுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசை தொடர்ந்தும் காப்பாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடானது நீதிக்கான முன்னெடுப்புகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை மூன்றாவது தடவையாக வழங்கப்பட்ட காலநீடிப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையுமே நிறைவேற்றாத நிலையில் அந்நிலையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பானது, தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது எனும் நிலைக்கு ஈழத்தமிழர்களை தள்ளியுள்ளது.இருப்பினும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக சர்வதேச அரசியல் அரங்கில் நடைபெறும் ராஜதந்திர நகர்வுகளை நாம் சவாலாக எடுத்து முன்னகர வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது புதியதோர் தளத்திற்கு சிறிலங்கா விவகாரத்தை நெட்டித்தள்ளியுள்ளது. அதனை மையப்படுத்தியதாகவே அனைத்துலக கையாழுகையும் இனிவரும் காலங்களில் அமையப்போகும் சூழலில் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதென்பது கடும் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. சிறிலங்கா அரசியலோ, அனைத்துலக சூழமைவோ எவ்வாறு மாறினாலும் அநியாயமாக சிறிலங்கா பேரினவாத அரசால் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் என்பது எமது வரலாற்றுக் கடமை.

தமிழின அழிப்பிற்கு காலதாமதம் இன்றி உடனடியான அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வேதச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தாயகத்தில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு எண்ணத்துடனும் கலாசார, பாரம்பரிய, பண்பாட்டு சிதைவுகளுக்கு வித்திடும் வகையிலும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இனவழிப்பு இராணுவத்தின் இருப்பின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் விரைந்து தீர்வுகாணப்பட வேண்டும்.இன அழிப்பிற்கு உள்ளாகிய ஒரு தேசிய இனம் எனும் வகையில் , ஈழத்தமிழர்கள் தமது அரசியல் வேணவாவை தாமே நிர்ணயிற்கும் முகமாக தாயகத்திலும் , உலகப்பரப்பில் சிதறி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஐநாவின் கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அனைத்து பிரச்சினைகளும் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாது திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.ஆகவே தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கியதான அரசியல் தீர்வை நோக்கியதாக தாயகத் தமிழர்களும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் ஓரணியில் இணைய வேண்டியது அவசியமாகின்றது.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டடம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட நிலையில் எமது மாவீரர்களின் அதி உச்ச தியாகத்தாலும் , சிங்கள பேரினவாத அரசு எமது மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகளாலும் எமது விடுதலைக்கான நகர்வுகள் சர்வதேசமயமாகப்பட்டு நிலவுகின்ற இத் தருணத்தில் “நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.” எனும் கோசத்துடன் விடுதலையை நோக்கி விரைந்துசெல்வோம்.

அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வரும் நாம் 'ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்' என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என தமிழ்த் தேசிய பேரினமாக அணிதிரழ்வோம் என முள்ளிவாய்க்காலில் மூச்சடக்கப்பட்ட இந்நாளில் எமது மாவீரர்களையும் மக்களையும் மனதில் நிறுத்தி உறுதியேற்றுக்கொள்வோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

  
   Bookmark and Share Seithy.com



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா