Untitled Document
May 17, 2024 [GMT]
மஹிந்தவிடம் சரணடைந்து அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார் ரணில்!- பேராசிரியர் சரத் விஜேசூரிய
[Friday 2019-05-31 09:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல சந்தர்ப்பங்களில் அரசியல் அநாதையாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதி அடைந்து, அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய விசனம் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல சந்தர்ப்பங்களில் அரசியல் அநாதையாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதி அடைந்து, அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய விசனம் தெரிவித்தார்.

  

கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலவாபே சோபித தேரரின் 77 ஆவது ஜனன தினம் புதன்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'ஜனவரி 8 ஆம் திகதி பிரார்த்தனை நிறைவேறாமல் அரச நிர்வாகம் சிதைவடைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. புத்தி சாதூர்யமற்ற தற்பெருமையால் தலைக்கணம் கொண்ட அதேவேளை, மக்கள் மீது சிறிதளவும் அக்கறையற்ற , மக்களுக்கு பொறுப்பு கூறாத பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிற்போக்கு அரசியலே முதலாவது காரணமாகும். அடிவருடி ஒருவரிடம் நெல்சன் மண்டேலாவைப் போன்ற தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் முட்டாள் தனம் இரண்டாவது காரணமாகும்.

ஜனநாயகத்தை மதிப்பவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு , அதற்கு எதிராக செயற்படும் ஒருவரிடத்தில் ஜனநாயக ரீதியிலான நிர்வாகத்தை எதிர்பார்த்தமையே இன்று ஐக்கிய தேசிய கட்சி தவறான வழியில் செல்வதற்கான காரணமாகும். தற்போதைய பிரதமரே இதன் பின்புலத்தில் உள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துக்கு உரிமை கோரி வருகின்றார். ஏகாதிபத்தியவாதியாகவே அவர் கட்சி தலைமைத்துவத்தை வகிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியை தனக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் உகந்த வகையில் வைத்திருப்பதாக வேறு எவருக்கும் வாய்ப்புக்களை வழங்காது இருப்பதே அவரது அரசியல் நோக்கமாகும்.

தொடர்ச்சியாக பாரிய தோல்விகளுக்கு முகங்கொடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவி மீது மோகம் கொண்ட ஒருவரை கட்சி தலைவராக ஏற்றுக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஏகாதிபத்தியத்தின் கை பொம்மைகளாவர். இவர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாட்டில் பிரதான கட்சியொன்றின் தலைவராக இருந்து கொண்டு, இரு தடவைகளில் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை கடன் வாங்கிய இவர் தலைமைத்துவம் வகிக்க தகுதியற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றது.

அவரை பல தடவைகள் அரசியல் அநாதையாக்கி அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கு முயற்சித்த தற்போதைய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை தஞ்சமடைய தற்போது ரணில் முயற்சிக்கின்றார். அவரது பாதங்களை பற்றி அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றார்.

மெதமுலனவிற்கு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு ஹெலிகொப்டர்களை வழங்கியதோடு, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி காலை மஹிந்தவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றி வருகின்றார்.

பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது மாத்திரமின்றி தனது தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதே அவரது தேவையாகும். இவ்வாறு சிந்திப்பது துரதிஷ்டமானது. இந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்ட சோபித தேரர் இரண்டு தடவைகள் பிரதமரை சந்தித்து ஜனாதிபதியுடன் முரண்படாமல் இருவரும் இணங்கி செயற்படுவதே முறையானது என்பதை வலியுறுத்தி வந்தார். அதனை கேட்டு;க் கொண்ட போதும் அவர் அதனை பின்பற்றவில்லை.

ரணில் விக்ரமசிங்க அனுபவம் மிக்க அரசியல்வாதியாக இருந்த போதும் கண்ணாடிக் கூண்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எமது நாட்டின் அரசியல் அவருக்கு பொறுந்தாது. அரசியல் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற போதிலும், அதில் வெற்றி பெற முடியாதவர்.

ரணிலுடன் ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்ஷ கற்தரையிலும், கரடு முரடான தரையிலும் நீந்தக் கூடியவர். ரணில் எந்த விதத்திலும் அரச நிர்வாகத்திற்கு பொறுத்தமற்றவர். அது பொன் எழுத்துக்களால் எழுத்தப்பட்டுள்ளது. அவர் கட்சியிலிருந்து நீங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டை நேசிப்பவர்கள் அவரை நீக்க வேண்டும்.

அவரிடம் குழுவொன்றும், கூட்டமொன்றும், கட்சியொன்றும் உள்ளது. இந்நிலையில் தான் தனித்து விடப்பட்டு;ள்ளமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்துள்ளார். எனினும் அதன் அபாய நிலையை ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ளாமல் அதே மமதையுடனேயே உள்ளார். இந்த நிலைமையைப் பயன்படுத்தி மஹிந்த அமரவீர ஜனாதிபதியை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபல உறுப்பினர்கள் பலரும் நீதியின் பிடியில் சிக்கவிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான தொடர்புகளை அவர்கள் வலுப்படுத்திக் கொள்கின்றனர். உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களின் போது மத்திய வங்கி ஊழல் தொடர்பிலும், அர்ஜூன மகேந்திரனின் செயற்பாடு தொடர்பிலும் கடும் ஊழல்வாதிகளான எதிரிணயினர் விமர்சிக்க தொடங்கினர்.

இதனால் ஐ.தே.க மற்றும் சு.க என்பன சீரழிகின்றன. பிணைமுறி தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தார். இதன் போது கூட மஹிந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்குமாறு ரணில் கோரவில்லை.

இதனால் தான் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு அதிகாரங்களை வழங்கினார். அதிலிருந்தும் பிரதமர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு புதுமையான மனிதர். விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரைப் பாதுகாத்து எதிர்கட்சி தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அவர் முயற்சிக்கின்றார்.

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் ஜானதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றிபெறச் செய்து தற்போதைய நிலையிலிருந்த விடுபட வேண்டும். எனவே நியமிக்கப்படும் பொது வேட்பாளர் வேட்புமனு தாக்குதல் செய்வதற்கு முன்னரே தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கிய போது அதற்கு ஒத்துழைப்பு நல்கியமை நாம் செய்த தவறாகும். எனவே மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு தலைவரை தெரிவு செய்வதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா