Untitled Document
May 2, 2024 [GMT]
இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்
[Friday 2019-06-14 16:00]

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்கும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்கும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைக் குறிப்பிட்டார்.

  

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தற்போது பாரிய அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், அவர்களை மீள வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே தான் இவ்வாறான கருத்தை, பள்ளிவாசலில் வைத்து கூறியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் தான் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஷாசிமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், தேர்தல் நோக்கிலேயேதான் அவரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதன்போது, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை நோக்காக கொண்டு தான், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஷாசிமுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதாகவும் அவர் இதன்போது ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக அந்த உடன்படிக்கையில் பொதுவான சில நிபந்தனைகளே காணப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

மேலும், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஷாசிம், ராணுவத்தின் சிலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும் தெரிவுக்குழு முன்னிலையில், அவர் குறிப்பிட்டார்.

மொய்தீன் என்ற முன்னாள் ராணுவ அதிகாரியொருவருக்கும், சஹரான் குழுவில் அங்கம் வகித்த நியாஷ் என்ற உறுப்பினருக்கும் இடையிலேயே பாரிய தொடர்புகள் காணப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறினார்.

சஹரான் உருவாகிய விதம்

2010 அல்லது 2011ஆம் ஆண்டு முதல் மொஹமத் சஹரான் ஷாசிம், இஸ்லாமிய மத ரீதியில் செயற்பட ஆரம்பித்தார் எனவும், அவர் அங்கம் வகித்த அனைத்து குழுக்கள் மற்றும் சங்கங்களிலிருந்து அவர் அடிக்கடி விலக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சஹரான் தொடர்ச்சியான அவர் அங்கம் வகித்த அனைத்து குழுக்கள் மற்றும் சங்கங்களிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்தே, அவர் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பை ஸ்தாபித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு வரை அவர் காத்தான்குடி பகுதியிலேயே இருந்து செயற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துக் கொண்டிருக்கலாம் எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

தேர்தலில் தோற்கடித்த சஹரான்

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, சஹரானுடன் தான் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை மீறியமையினால், சஹரான் அந்த தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

சஹரானின் பின்னணியில் இருந்தவர்களை வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்ததன் ஊடாகவே தான், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

இவ்வாறு தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக சஹரான் தலைமையிலான குழு, மட்டக்களப்பில் போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சுஃபிஷம் குழுவினர் தன்னுடன் இருந்தமை மற்றும் உடன்படிக்கை மீறப்பட்டமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே தனக்கு எதிராக சஹரான் செயற்பட்டதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

சஹரான் குறித்து பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதா?

சஹரான் தொடர்பில் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். சஹரான் பயங்கரவாதி என்று தான் அறிந்திருக்கும் பட்சத்தில், தானே முதலில் அந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொஹமட் சஹாரான் உயிரிழந்தமை தொடர்பில் தானே மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய அவர், எதிர்வரும் தேர்தலில் தனக்கு எதிராக செயற்பட ஒருவர் இருக்க மாட்டார் எனவும் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரே, மொஹமட் சஹாரான் ஷசிமுடன் இருந்ததாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தெரிவுக்குழுவில் அமர்ந்திருந்ததுடன், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் போது எந்தவித பதிலையும் வழங்கியிருக்கவில்லை. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் அவர், தனது சொந்த ஊரில் இருக்கவில்லை என ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் வரை தான் அறிந்திருக்கவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதன் பின்னரே தான் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

வவுணதீவு போலிஸார் கொலை

மட்டக்களப்பு - வவுணதீவு போலீஸார் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு தான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததாக எம.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். குறித்த சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும், அதனாலேயே விசாரணை வேறு விதமாக சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தான் பிரதி போலீஸ் மாஅதிபருடனும் இந்த விடயம் தொடர்பில் பின்னரும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, காத்தான்குடி பகுதியிலுள்ள எந்தவொரு தரப்பினரும் இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணி வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அரபு மொழி பயன்பாடு

அரபு மொழியை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். குறிப்பாக இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாதுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மாத்திரமே தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

துபாய்க்கு சென்று பார்க்கும் போது, அங்கு தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தேசிய புலனாய்வு சேவைக்கு புதிய தலைவர் நியமனம் “இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்”

காத்தான்குடியில் மர முந்திரிகை மரத்தை நாட்டியமைக்கான காரணம்

காத்தான்குடி நகர் மத்தியில் வேறொரு மரமொன்றை நடுவதற்கு ஏற்பாடு செய்ததாகவும், தான் தெரிவு செய்த மரம் அங்குள்ள காலநிலைக்கு ஏற்றதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், அந்த பகுதியிலுள்ள காலநிலைக்கு ஏற்றவகையிலேயே தான் மர முந்திரிகை மரத்தை தெரிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மரத்தை அப்புறப்படுத்தும் வகையில் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதனால் நீதிமன்றத்தின் நீதிபதியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி குறித்து எம்.ஏ.சுமந்திரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்த விடயமானது நீதிமன்ற அவமதிப்பு விடயம் என்பதனால், தான் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அது குறித்து தற்போது கருத்து தெரிவிக்கதான் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

'வடக்கு கிழக்கை இணைத்தால், ரத்த ஆறு ஓடும்'

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் பட்சத்தில், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை நடத்துவதன் ஊடாக ரத்த ஆறு ஓடும் என்ற கருத்தை தான் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். செயற்குழு உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என கூறிய அவர், அவ்வாறு இணைக்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தான் எதிர்வு கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆயும் ஏந்திய, இரத்த ஆறு ஓடும் என்ற வகையிலான கருத்தை, மக்களின் தலைவர்கள் கூறுவது பொருத்தமானது அல்லவென நாடாளுமன்ற தெரிவுக்குழு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு அறிவுறுத்தினர்.

காத்தான்குடி அரபு மயப்படுத்தலுக்கு காரணம்?

காத்தான்குடி அரபு மயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்திற்கு முழுமையான பொறுப்பு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் .ஹிஸ்புல்லா என தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. மர முந்திரிகை மரங்கள் நாட்டப்படுவதன் ஊடாக, அரபு மயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை தான் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது பல்கலைக்கழகத்தில் மர முந்திரிகை நாட்டப்பட்டுள்ளமையானது, தனது தனிப்பட்ட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு கலாசார ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை, ஹிஸ்புல்லா இதன்போது சுட்டிக்காட்டினார்.

  
   Bookmark and Share Seithy.com



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா