Untitled Document
May 2, 2024 [GMT]
தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மிகப்பெரிய துரோகம்!
[Friday 2019-06-14 17:00]

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி,  ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர். இதுகுறித்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி, ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர். இதுகுறித்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

  

அரசாங்க கொள்கைகளில் ஒன்று, காணிக் கட்டளைச் சட்டத்தின்படி ஒருகாணிக்கு இரண்டு ஆவணங்கள் இருந்தால் காலத்தால் எது முந்தைய ஆவணமோ அந்த ஆவணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுமென, அரசாங்கத்தினுடைய காணிக் கட்டளைச் சட்டத்தின்படி உள்ளது. ஆனால் இவற்றைப் புறந்தள்ளி தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்துச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, வெலி ஓயா என்ற பெயரில் எமது மணலாற்றுப் பூமியை பெயர்மாற்றம் செய்து ஒரு பிரதேச பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக எங்களுடைய பூர்வீக நிலங்களில் ஒரு பகுதியான ஆமையன் குளம் என்ற அதனோடு சேர்ந்திருந்த நிலங்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளன. அதில் 360 ஏக்கர் நிலத்திற்குரிய பயனாளிகளுடைய பெயர்கள், பயனாளிகளுடைய உறவினர்களுடைய பெயர்கள் உட்பட என்னிடம் இங்கே ஆவணங்கள் உள்ளன. மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் படி 625 பயனாளிகளுக்குரிய 2919 ஏக்கர் காணிகள் இந்த அபகரிப்புக்குள் உள்ளடங்குகின்றன என்ற அறிக்கை தரப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையும் என்னிடம் இருக்கின்றது.

இந்நிலையில், ஆமையன் குளம் பகுதிக்குச் சென்று கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு ஏற்கனவே தமிழ் மக்களால் காலங்காலமாக பாவிக்கப்பட்டுவந்த அந்தக் குளத்தோடு சேர்ந்த காணிகள் அனைத்துக்குமான அந்தக் குளம், மறுசீரமைக்கப்பட்டு இப்போது குடியேற்றவாசிகளாக இருக்கின்ற சிங்கள மக்களுக்காக குளத்தினைத் திறந்து வைத்துள்ளார் அரச தலைவர்.

சிறுபான்மை இன மக்களுடைய வாக்குகளில் ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டிருப்பதைப் பல தடவைகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் எங்களுடைய மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகம் இதுவென்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன். எங்களுடைய மக்கள் இந்தப் பிரச்சினைகளை தங்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையிலே எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, தாங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு நாதியற்றவர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இதனூடாக தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவோம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



மானிப்பாயில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு! Top News
[Wednesday 2024-05-01 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு இன்று மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் "அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றது.



கிளிநொச்சியில் பழைய நினைவுகளை மீட்டார் எரிக் சொல்ஹெய்ம்!
[Wednesday 2024-05-01 17:00]

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார்.



கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மே தினம்! Top News
[Wednesday 2024-05-01 17:00]

வடமாகாண ரீதியிலான தமிழ்த் தேசிய மே தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.



காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான முழு நிதியையும் வழங்கும் இந்தியா!
[Wednesday 2024-05-01 17:00]

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.



நுணாவில் விபத்தில் ஒருவர் பலி- 5 பேர் படுகாயம்!
[Wednesday 2024-05-01 17:00]

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் ஏ9வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறியரக உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரும்பிராயில் சிக்கிய வாள்கள்!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர். வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மொட்டு, யானைக்கு பாஜக அழைப்பு!
[Wednesday 2024-05-01 17:00]

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.



மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 17:00]

யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.



ஐதேக மேடையில் மொட்டு எம்.பி!
[Wednesday 2024-05-01 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேனா மைதானத்திற்கு முன்னால் நடைபெற்று வருகிறது.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா