Untitled Document
May 17, 2024 [GMT]
இனியும் தாக்குதல் நடக்கலாம்- இராணுவத் தளபதி சாட்சியம்! Top News
[Wednesday 2019-06-26 18:00]

 தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும் தாக்குதல் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே யுத்தம் செய்து கொண்டுள்ளோம் என இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும் தாக்குதல் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே யுத்தம் செய்து கொண்டுள்ளோம் என இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

  

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி:- இந்த தாக்குதலை அடுத்து நீங்கள் முன்னெடுத்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது அவற்றை தடுக்கும் வகையில் எவரதும் எந்த அரசியல் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்தனரா?

பதில்:- நீங்கள் கேட்கும் கேள்வி தெளிவானது, ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குறிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள் , விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த சந்தர்ப்பத்தின் போது ஏப்ரல் 26 ஆம் திகதி இசான் அஹமட் என்பவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை சகலரும் அறிவார்கள்.

அமைச்சர்கள் , எம்.பிக்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார். குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்யதீர்களா என கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன். பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுல்ளாரா என கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்மை தொடர்பாக உறுதியாகியிருந்தது.

அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை வருடங்களுக்கும் விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார், அதை தவிர்ந்து அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.

கேள்வி:- வேறு அமைச்சர்கள் எவராவது அழுத்தம் கொடுக்கவில்லையா?

பதில்:- இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலர் குறித்து தேடிப்பார்ப்போம். ஆனால் அதனை தவிர எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (ரிஷாத் ) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

கேள்வி:- நீங்கள் உங்களின் விசாரணைகளை முன்னெடுக்க சகல சுதந்திரமும் இருந்தது அப்படித்தானே?

பதில்:- இந்த விடயத்தில் ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிந்தது.

குழு:- பாதுகாப்பு விவகாரங்களில் சில முக்கியம்சங்கள் உள்ள காரணத்தினால் வேண்டுமென்றால் ஊடகங்களை நீக்கிவிட்டு விசாரணைகளை நடத்துவோம்.

சரத் பொன்சேகா:- முதல் கேள்வியுடன் தொடர்புபட்ட சில கேள்விகள் உள்ளன அவற்றை கேட்டுவிட்டு அனுப்பலாம்.

கேள்வி:- ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் என நீங்கள் ஏன் கூறினீர்கள்?

பதில்:- எனது அறிவுக்கு அமைய பயங்கரவாத தடுப்புசட்டமே அப்போது இருந்தது. அதன் பின்னர் அவசரகால சட்டம். இந்த காலத்தில் ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் தடுப்பில் தடுத்து விசாரணைகளை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும் அண்மையில் இந்த சட்டம் ஒரு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த தொலைபேசி அழைப்பிற்கு நான் யதார்த்தமாக ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் என பதில் தெரிவித்தேன். இதில் நான் ஆழமாக சிந்திக்கவில்லை. இவரை ஒன்றரை வருடங்கள் கைதுசெய்து தடுப்பில் வைத்திருப்பேன் என நான் வேண்டுமென்று கூறவில்லை.

கேள்வி:- கைதுசெய்யப்பட்ட போது அவர் பயங்கரவாதியென எப்படி தெரியும்? தெரியாது தானே?

பதில்:- சாதாரணமான அறிவின் படி எம்மால் அதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் எமது புலனாய்வு துறையினருக்கு அப்போதே ஓரளவு உறுதியான தகவல்கள் வந்துவிட்டது. அதைவைத்தே கூறினேன். எமக்கு கிடைத்த தகவலின் படி இந்த நபர் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார் என்று நாம் அறிந்திருந்தோம். புலனாய்வு துறையும் அதனை எமக்கு உறுதிப்படுத்தியிருந்தது.

கேள்வி:- கடந்த 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் போதும் இப்போதும் உள்ள நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு உள்ளது? இந்த பயங்கரவாத செயற்பாடுகளை வெற்றிகொள்ள முடிந்துள்ளதா?

பதில்:- இந்த பயங்கரவாதம் என்பது சர்வதேச பயங்கரவாதமாகும். அதற்கே நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.தெரியாத எதிரியோடு நாம் போராடிக் கொண்டுள்ளோம். இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாத தாக்குதலை விட மாறுபட்ட ஒன்றாகும். இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.

முப்படை மற்றும் பொலிஸ் இணைந்து இந்த பயங்கரவதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் இந்த பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இறுதியை பார்க்கும் வரையில் போராடிகொன்றுள்ளோம். அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்த எமக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு பின்னர் அரசாங்கமாக இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அடுத்த கட்டத்தை ஆராய வேண்டும்.

முன்னர் இருந்த நிலைமையை விட இப்போது முப்படை மற்றும் பொலிஸ் இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஒருவராக முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை நியமித்துள்ள காரணத்தினாலும் புதிய புலனாய்வு அதிகாரி சி.என்.ஐ ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாலும் நெருக்கம் அதிகரித்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பேச முடிகின்றது. ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புக்கூட்டம் புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது அதுவும் சர்வதேச நாடுகளுடன் உள்ள தொடர்பும் இந்தியாவின் ஒத்துழைப்பும் எமக்கு பலமாக இன்று அமைந்துள்ளது.

கேள்வி:- எமது புலனாய்வு துறை ஏனைய நாடுகளின் புலனாய்வு துறைபோன்று அல்லது யுத்த காலகட்டத்தில் சரத் பொன்சேகாவிடம் இருந்த புலனாய்வு போன்று பலமாக உள்ளதா?

பதில்:- அந்த யுத்தம் வேறு, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் இருந்த அணி இன்று இல்லை. யுத்தத்தை ஆரம்பித்தத்தைப்போல அல்லாது முடிக்கும் போது மிகவும் பலமாகவும் சர்வதேசதினால் ஏற்றுகொள்ளக்கூடிய வகையிலும் அத்துடன் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் எமது புலனாய்வுத்துறை செயற்பட்டது. பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் சில பின்னடைவுகள் இருக்கலாம் ஆனால் எவ்வாறு இருப்பினும் மீண்டும் ஒன்றிணைந்து பலமாக எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளை கட்டியெழுப்பவேண்டிய தேவையே எமக்கு உள்ளது.

கேள்வி:- எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தினால் இது பலவீனமடைந்துள்ளது என கூற முடியாது தானே?

பதில்:- அவ்வாறு கூற முடியாது, ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டதால் அல்லது நீக்கப்பட்டதால் புலனாய்வுத்துறை பலவீனமாக மாறும் என நான் நினைக்கவில்லை.இதற்கு மாற்றீடுகள் கண்டறியப்பட வேண்டும். கைது செய்யப்பட்டநபர்கள் இறந்திருந்தால் என்ன செய்வது. புலனாய்வு துறையினர் இறந்துள்ளனர். அதனால் புலனாய்வு வீழ்ச்சி கண்டுள்ளது என கூற முடியாது.

கேள்வி:- ஆரம்பத்தில் சாட்சியத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கூறினார் பயங்கரவாதம் உடனடி அச்சுறுத்தல் மற்றும் நீண்டகால அச்சிறுத்தல் என்ற காரணிகளை கூறினார். பயங்கரவாதிகளுக்கு அவ்வாறு ஒன்று இருக்க வாய்ப்பில்லை, எனினும் அவசரகால அச்சுறுத்தல் 99 வீதம் முடிந்துள்ளது என அவர் கூறி இரண்டு வாரங்களில் கண்டியில் இருந்து தற்கொலை தாரி ஒருவரும், சவுதியில் இருந்ததாக சிலரும் கைதுசெய்யப்பட்டனர். அப்படியென்றால் 99 வீதம் முடிந்ததாக கூறிய பின்னர் இந்த கைதுகள் எல்லாம் 1 வீத அச்சுறுதலா?

பதில்:- அவர் கூறிய கருத்து குறித்து என்னால் ஒன்றும் கூற முடியாது. ஆனால் இன்று அச்சுறுத்தல் நிலைமைகள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் நிலைமைகளை கட்டுபடுத்த முடிந்தது. எனினும் 100 வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது என கூற முடியாது. ஆனால் அதிகமாக நிலைமைகள் எமது கட்டுபாட்டில் தான் உள்ளது. வீதமாக கூறுவதை விட அவசரமாக ஏதும் நடக்கும் என்ற அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. இந்த நபர்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பட்டரப்பட்ட பின்னர் இந்த நிலைமை நீங்கியுள்ளது.

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் கூறுவது முதல் இரு நாட்களில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைப்புகளை கண்டறிந்துவிட்டீர்கள், நபர்களை கைதுசெய்யவே காலதாமதம் அப்படியா?

பதில்:- அப்படித்தான்.

கேள்வி:- பயங்கரவாததுடன் நாம் நெருக்கமாக செயற்பட்டோம், பயங்கரவாத தாக்குதல் அடுத்தடுத்து நடக்காதே, ஒருதரம் குண்டு வெடித்து தேடுதல் நடந்தவுடன் இனி அச்சுறுத்தல் இல்லை என ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஆம், இவ்வாறான தாக்குதலுக்கு கால எல்லை இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நீண்டகால திட்டங்களில் இது நடக்கலாம். இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தி வைத்துள்ளோம். பலபடுதியும் உள்ளோம். ஆனால் இந்த பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் கூற முடியாது.

இந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது.விடுதலைப்புலிகளை கூட நாம் இன்னமும் தேடிக்கொண்டுதான் உள்ளோம். அவர்களும் இன்றும் சில சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயப்பட்டு வருகின்றனர். ஆகவே இராணுவமாக நாம் இதனை கருத்தில் கொள்ளவேண்டும், விடுதலைப்புலிகளை பொறுத்தவரை அந்த அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு சில தலைவர்கள் சரணடைந்த பின்னரும் மேலும் பலர் சரணடைந்த பின்னர் அந்த அமைப்பு அப்படியே வீழ்ச்சிகண்டு விட்டது. ஆனால் இது அவ்வாறு அல்ல.

கேள்வி:- இந்த தாக்குதல் ஒரு நேரத்தில் ஏழு எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது, புலிகள் கூட அவ்வாறு ஒருநாளும் தாக்கியதில்லை. ஒரு நேரத்தில் ஒரு தாக்குதல் தான், இது அவ்வாறு அல்ல அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கம் உள்ளது. இதில் பயங்கரவாத்தை கூறவேண்டியதை செய்து முடிக்க ஒரு நபர் இருந்தால் போதும்.

பதில்:- ஆம், இந்த தக்குதல் ஆயுதம் மூலமாக மட்டும் அல்ல வாகனம் மூலமாகவோ விமானம், வேறு ஏதேனும் ஒன்றின் மூலமாக தாக்குதல் நடத்த முடியும். எல்லா நாடுகளிலும் இது நடக்கலாம்.

இந்த கேள்விகளின் பின்னர் ஊடகங்களை நிராகரித்து இராணுவத் தளபதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



வெருகலிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை! - இரவில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்.
[Thursday 2024-05-16 15:00]

திருகோணமலை- வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.



ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன்! - சஜித் அதிரடி அறிவிப்பு.
[Thursday 2024-05-16 15:00]

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.



அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
[Thursday 2024-05-16 15:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், நினைவு நிகழ்வுகளும்! Top News
[Thursday 2024-05-16 15:00]

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்றிரவு 7மணியளவில் மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் ஆகிய இடங்களில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.



அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
[Thursday 2024-05-16 15:00]

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.



தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது!
[Thursday 2024-05-16 15:00]

யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.



இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி!
[Thursday 2024-05-16 15:00]

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கத் திட்டம்!
[Thursday 2024-05-16 15:00]

2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா செல்கிறது விசேட குழு!
[Thursday 2024-05-16 15:00]

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை நாடு திருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார்.



இந்திய- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
[Thursday 2024-05-16 15:00]

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா