Untitled Document
May 19, 2024 [GMT]
வட-கிழக்கின் நிலை பரிதாபமாகும் ஆபத்து!
[Saturday 2019-08-03 07:00]

வடக்கு, கிழக்கில் தேசியக் கட்சிகளும் அவற்றைச் சார்ந்த கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதைய நிலையிலும் பார்க்க மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேசியக் கட்சிகளும் அவற்றைச் சார்ந்த கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதைய நிலையிலும் பார்க்க மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  

வாரம் ஒரு கேள்வி என்னும் பகுதியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? என்ற கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,

தற்போதைய நிலையில் வருந்தேர்தலில் தமிழ் மக்கட் பிரதிநிதிகளிடையே கொள்கை சார் ஒற்றுமைக்குப் பதில் பிரிந்த மனப்பாங்கே மேலோங்கி நிற்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. உண்மையில் நான் வலிந்து ஒரு சாராரை கொள்கை ரீதியாக எம்முடன் சேருமாறு கூறி பணிந்து சென்றமை இவ்வாறான ஒரு நிலைமை வருந் தேர்தலில் ஏற்படக்கூடும் என்பதாலேயே. ஆனால், சுயநலம் வென்று விட்டது. பொது நலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஒரே கொள்கையுடையோர் சேராது போனது, இதுவரை காலமும் கொள்கையை முன்வைத்து வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று அந்தக் கொள்கை மறந்தவர்கள் நினைக்கலாம்.

ஆனால், எமது மக்கள் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடும். பாராளுமன்றத்திற்கு உள்ளே இதுவரை காலமும் விடப்படாத கட்சிகளுக்கும் (அவ்வாறு அழைக்கப்படும்) தேசியக் கட்சிகளுக்கும் தமது வாக்குகளைப் பகிர்ந்து கொடுத்து மிக அபாயகரமான ஒரு நிலையை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் சிந்திக்கக்கூடும்.

குறித்த தேசியக் கட்சிகளும் அவற்றின்பால் சார் கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதைய நிலையிலும் பார்க்க மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும். வட மாகாணத்தில் தேசியக் கட்சிகளில் இருந்தும் அவற்றைச் சார்ந்த கட்சிகளில் இருந்துந் தெரிபடப் போகின்றவர்கள் தமிழரே.

அந்த வகையில் ஆறுதல் கொள்ள நினைத்தாலும் கிழக்கில் தமிழர் அல்லாதோரே பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பின் வடக்கிலும் கிழக்கிலும் பணம் எடுத்து வேலை கொடுக்கும் படலங்களும் தென்னவர்களின் கூடிய முதலீடுகளும், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரசாங்க திணைக்களங்கள் போன்றவற்றில் கூடிய பெரும்பான்மையினர் உள்ளடக்கங்களும் நடைபெறுவன.

அவற்றைத் தேசியக் கட்சிகளும் அவற்றின் சார்புக் கட்சிகளும் தடுக்க முடியாமல் போய்விடும். அவர்கள் வடக்கில் தமிழர்கள் என்றாலும் கிழக்கில் பல் இனத்தவர். அவர்கள் யாவரும் அவர்களின் கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அடம் பிடித்தால் பெரும்பான்மையினத் தலைவர்கள் மூலையில் இருத்தி விடுவார்கள்.

ஜனாதிபதி சிறிசேன பதவிக்கு வந்தது தமிழ்ப்பேசும் மக்களின் வாக்கினால். இதுவரை அவர் எமது தமிழ் மக்களுக்கான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளாரா? மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளையே அவர் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். அதேபோல் எமது தேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களும் அவை சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு முண்டு கொடுக்கவேயன்றி தமிழர்தம் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த இலாயக்கற்றவர்களாகவே இருப்பர்.

ஆகவே, தமிழரின் வருங்காலம்சார் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கட் பிரதிநிதிகள் கணிசமானவர்கள் இனிவரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்றால் தற்போதைய நிலையில் ஒருவித மயக்க நிலைதான் காணப்படுகின்றது.

அப்படி தேர்ந்தெடுக்கப்படாமல் பல விதமான வேறு வேறு கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அவர்கள் உருப்படியாக எதனை செய்ய முடியும் என்பது உங்கள் கேள்விக்குள் இருக்கும் மறு கேள்வி. அவ்வாறு குறிக்கப்படும் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம் மக்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், எமது வருங்காலம் கவலைக்கிடமாகப் போய்விடும்.

அதாவது, அரசியல் ரீதியாக எதுவும் எம்மக்களுக்குக் கொடுக்கப்படமாட்டா. எவ்வாறு குறைபாடுகள் நிறைந்த 13ஆவது திருத்தச் சட்டம் 1992 இல் மேலும் குறைபாடு அடைய மத்திய அரசாங்கத்தால் வழி அமைக்கப்பட்டதோ அதேவாறு மாகாண சபைகளுக்கு இருக்கும் குறைவான உரித்துக்களும் மேலும் மேலும் பறிபோய்விடுவன. மத்தியின் ஆதிக்கம் வலுப்பெறும். தமிழர் தம் வருங்காலம் கவலைக்கிடமாகும்.

அடுத்தவிடயம் நாங்கள் இப்போதிருந்து இவ்வாறான நிலையைத் தடுக்க என்ன செய்யப்போகின்றோம் என்பது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதாவது தற்போதிருக்கும் அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநித்துவம் கணிசமானது. அதன் தலைவர்களின் பேச்சுக்கள் அண்மைக்காலமாக நாம் இதுகாறும் வலியுறுத்தி வந்தவற்றைப் பிரதிபலிப்பனவாகத் தென்படுகின்றன.

உதாரணத்திற்கு அண்மையில் ஒருவர் தமிழர்கள் வெறும் பொருளாதார நன்மைகள் பெறுவதால் எமது அரசியல் ரீதியான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போய் விடும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அவ்வாறான சிந்தனைகள் வரவேற்கத்தக்கன. அவற்றின் நீட்சியாக தற்போது பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் ஏன் தமது தொகையினரை வைத்து சில பல காரியங்களை இயற்ற முடியாது என்ற கேள்வி எழுகின்றது.

அண்மையில் பதவியில் உள்ளவர்கள் சார்பில் எமக்கு என்ன வேண்டும் என்று தொலைபேசியில் என்னிடம் கேட்கப்பட்டது. பேசியவர் எனது நண்பர். பதவியில் உள்ளவர் சார்பில் பேசினார். நான் எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஒன்றுந் தேவையில்லை. முடியுமானால் அடுத்த பௌர்ணமி தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள் என்றேன். என்னுடன் கதைத்த இடைத்தரகர் இதுபற்றி உரியவர்களுடன் பேசி பதில் தருவதாகக் கூறினார்.

இதிலிருந்து பதவியில் உள்ளவர்கள் விரைவில் தமக்கு என்ன நடக்குமோ என்ற பீதியில் உள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. தற்போதிருக்கும் பாராளுமன்றம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கப்போகும் நிலையில் எமது மக்களுக்குத் தேவையான பலவற்றை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சேர்ந்து அரசாங்கத்துடன் பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற கருத்தை முன் வைக்கின்றேன்.

தற்போதிருக்கும் 16 பேரைக் கொண்டதொரு தமிழர் சார் கட்சியின் அங்கத்தவர்களாக எமது பிரதிநிதிகள் வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட முடியாதென்றால் ஏன் அவர்கள் இப்போதிருந்தே அரசாங்கத்தை நெருக்கி ஒரு சிலவற்றையேனும் பெற முடியாது என்ற கேள்வி எழுகின்றது.

கல்முனையில் தோல்வியடைந்தவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வியடையும் என்று எதிர்பார்க்காமல் தற்போது சேர்ந்திருக்கும் எம்மவர் எமது மக்களுக்கான மிக அவசரமான பல விடயங்களை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு பலமற்ற நிலை எழக்கூடும் என்று தோன்றினாலும் எம் மக்களின் நலன் சார்பாக நாமெல்லோரும் இப்பொழுதிருந்தே சிந்திக்கத் தொடங்கினோமானால் வருங்காலத்தில் உருப்படியாக மக்கள் சார் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றே கருதுகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



குற்றமிழைத்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரும்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மாவை தலைமையில் தமிழரசின் மத்திய குழு கூடியது!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.



நீர்மூழ்கிகளை தடுக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக் கோரியது இலங்கை!
[Sunday 2024-05-19 17:00]

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.



கூலிப்படைகளாகச் சென்றவர்கள் குறித்து 400 முறைப்பாடுகள்!
[Sunday 2024-05-19 17:00]

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.



ஒக்டோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல்!
[Sunday 2024-05-19 17:00]

ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.



மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பொலிசாருக்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.



காங்கேசனுக்கான கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-19 17:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களுடன் துணை நிற்கிறது அமெரிக்கா!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



எலோன் மஸ்க்கைச் சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2024-05-19 17:00]

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஈரானியத் தூதுவரைத் தாக்கிய கொழும்பு வர்த்தகர் கைது!
[Sunday 2024-05-19 17:00]

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர கனேடிய பிரதமர் அழைப்பு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.



இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு கனடா சுகாதார அமைச்சர் அஞ்சலி! Top News
[Sunday 2024-05-19 08:00]

கனடாவின் சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட் அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.



நினைவேந்தல் கைதுகள் - அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு கவலை!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தலைக் குழப்பியதற்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 08:00]

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை காவல்துறையினர் அநாகரீகமான அடாவடியான விதத்தில் குழப்பியமை குறித்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது



தமிழரின் விடிவு காலம் நினைவேந்தல் சுடரில் பிரகாசமாக ஒளிர்வதை காண்கின்றேன்!
[Sunday 2024-05-19 08:00]

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



பொது வேட்பாளரை ஏற்கவே முடியாது! - அடம்பிடிக்கிறாராம் சம்பந்தன்.
[Sunday 2024-05-19 08:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா